
இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் ஒன்றாக நீரிழிவு நோயும் அடங்குகிறது. ஆம். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக நீரிழிவு நோய் அமைகிறது. இதைக் கட்டுக்குள் வைத்திருக்க பலரும் பல வழிகளில் முயற்சிக்கின்றனர். நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க சீரான உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகக் கருதப்படுகிறது.
முக்கியமான குறிப்புகள்:-
ஒவ்வொரு நீரிழிவு நோயாளிக்கும், சரியான உணவுகளை சாப்பிடுவது மிகப்பெரிய கவலையாக அமைகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்துகள் அவசியம் என்பதும் மறுப்பதற்கில்லை. எனினும், அன்றாட உணவில் சில எளிய மூலிகைகளைச் சேர்ப்பதும் கூட இன்சுலின் அளவை இயற்கையாகவே ஒழுங்குபடுத்த உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இவை உயர் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.
இதில், சர்க்கரை அதிகரிப்பைத் திறம்பட கட்டுப்படுத்த உதவும் ஆயுர்வேத தேநீர் ரெசிபி குறித்து ஊட்டச்சத்து நிபுணரான ஸ்வேதா ஷா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes management: வெறும் வயிற்றில் சர்க்கரை ஏன் அதிகரிக்கிறது தெரியுமா? சரியான அளவு இங்கே!
சர்க்கரையைக் குறைக்கும் ஆயுர்வேத தேநீர் ரெசிபி
நிபுணரின் கூற்றுப்படி, சாப்பாட்டுக்குப் பிறகு இயற்கையாகவே சர்க்கரை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் எதிர்வினையை மேம்படுத்தவும், பசியைக் குறைக்கவும் உதவும் எளிய, சக்திவாய்ந்த கலவை என நிபுணர் பகிர்ந்துள்ளார். மேலும் இதில் அவர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க ஆயுர்வேத தேநீர் ரெசிபி தயார் செய்யும் முறை குறித்தும், அதைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
ஆயுர்வேத தேநீர் ரெசிபி செய்ய தேவையான பொருள்கள்
- குட்மார் - 1/4 தேக்கரண்டி பொடி
- இலவங்கப்பட்டை - 1 சிறிய துண்டு அல்லது 1/8 தேக்கரண்டி பொடி
- மேதி விதைகள் - 1/2 தேக்கரண்டி
- துளசி இலைகள் - 4-5
- உலர்ந்த இஞ்சி (சோம்பு) - ஒரு சிட்டிகை
- தண்ணீர் - 1.5 கப்
- ஸ்டீவியா இலை - 1 சிறியது (விரும்பினால்)
ரெசிபி செய்யும் முறை
- ஒரு பாத்திரத்தில் 1.5 கப் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதில், வெந்தயம், இலவங்கப்பட்டை, துளசி மற்றும் உலர்ந்த இஞ்சி சேர்க்கலாம்.
- பின் இதை 5-6 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
- அதன் பிறகு வாயுவை அணைத்து விடலாம்.
- இப்போது குட்மார் பொடியைச் சேர்க்கவும் (முக்கியம்: குட்மாரை வேகவைக்க வேண்டாம்; சுடரை அணைத்த பிறகு சேர்க்கவும்).
- பின்னர், 2 நிமிடங்கள் வாணலியை மூடி வைக்க வேண்டும்.
- இறுதியாக, இதை வடிகட்டிய பின் சூடாக குடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சுகர் லெவல் அதிகரிக்காம இருக்க உணவுக்கு முன் சூப் குடிக்கலாமா? மருத்துவர் தரும் விளக்கம்
நன்மைகள்
குட்மர் (Gudmar) - சர்க்கரை உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்துகிறது
வெந்தயம் (Methi) - இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது
இலவங்கப்பட்டை (Cinnamon) - கார்போஹைட்ரேட் முறிவை மெதுவாக்குகிறது
துளசி (Tulsi) - வீக்கத்தைக் குறைக்கிறது
உலர்ந்த இஞ்சி (Dry ginger) - செரிமானத்தை ஆதரிக்கிறது
View this post on Instagram
எப்போது குடிக்கலாம்?
நிபுணர் பகிர்ந்து இந்த ரெசிபியை Mid-morning அல்லது மதிய உணவு சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து குடிக்கலாம். அதே சமயம், இந்த ரெசிபியை வெறும் வயிற்றில் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, அசிடிட்டி உள்ளவர்கள் இதை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. ஏனெனில் உண்மையான சிகிச்சைமுறை உங்கள் கோப்பையிலிருந்து தொடங்குகிறது.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: இரவு உணவுக்கு பிறகு சர்க்கரை அளவு வேகமா ஏறுதா? கட்டுப்படுத்த இதை மட்டும் பண்ணுங்க..
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 14, 2025 22:39 IST
Published By : கௌதமி சுப்ரமணி