Expert

கண் வறட்சிக்குத் தீர்வு.. நெய் தரும் அற்புத நன்மைகள்! ஆயுர்வேத நிபுணர் விளக்கம்..

கண்களின் வறட்சியை (Dry Eyes) குறைக்க நெய் எப்படி உதவுகிறது? நெய்யின் மருத்துவ குணங்கள், பயன்படுத்தும் முறைகள் மற்றும் கண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி நிபுணர் விளக்கம் இங்கே.
  • SHARE
  • FOLLOW
கண் வறட்சிக்குத் தீர்வு.. நெய் தரும் அற்புத நன்மைகள்! ஆயுர்வேத நிபுணர் விளக்கம்..


இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பெரும்பாலானோர் கணினி, மொபைல் மற்றும் டிவி போன்ற திரைகளின் முன் நீண்ட நேரம் செலவிடுவதால், கண் வறட்சி (Dry Eyes) பிரச்சனையை அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கிறது. இதனுடன் தூக்கமின்மை, தூசி, தவறான உணவுப் பழக்கம் போன்ற காரணிகளும் கண் வறட்சியை அதிகரிக்கச் செய்கின்றன.

இந்நிலையில், பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட நெய் கண் ஆரோக்கியத்திற்கு அற்புத நன்மை தரும் என்று ஜெய்ப்புர் பாபுநகரில் உள்ள இயற்கை மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் கிரண் குப்தா பரிந்துரைக்கிறார்.

நெய்யின் நன்மைகள்

டாக்டர் கிரண் குப்தா கூறியதாவது, “நெய்யில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் A, E, K மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை கண்களில் ஈரப்பதத்தை பராமரிக்கவும், திசுக்களை புதுப்பிக்கவும் உதவுகின்றன. அதனால் கண் வறட்சியால் பாதிக்கப்படுபவர்கள், நெய்யை எளிய முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

how-to-improve-eyesight-by-foods-main

கண்களுக்கு நெய் தரும் நன்மைகள்

திசுக்களுக்கு உயவூட்டம் தரும்

நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தோல் திசுக்களுக்கு நன்மை பயக்கும். கண்களில் இதைப் பயன்படுத்துவது கண்களில் ஈரப்பதத்தைப் பராமரிக்கவும், கண்ணீரின் லிப்பிட் அடுக்கை மேம்படுத்தவும் உதவுகிறது.

வீக்கம் மற்றும் சோர்வை குறைக்கும்

நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலம் (Butyric Acid) மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் கண் வீக்கத்தையும் சிவத்தலையும் குறைக்கின்றன. கண் சோர்வு, உலர்ச்சி ஆகியவற்றில் சாந்தம் அளிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Beauty Secret.! நிபுணர் பரிந்துரைக்கும் Best Serum Ingredients..

திசுக்களை சரிசெய்யும்

வைட்டமின்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கண் செல்களை புதுப்பிக்க உதவுகின்றன. ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை தடுக்கும் தன்மை கொண்டது.

கண்களில் நெய்யை எப்படி பயன்படுத்தலாம்?

சொட்டு மருந்து

ஆயுர்வேத சிகிச்சைகளில், தூய நெய்யை சொட்டு மருந்தாக பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இது கண் உலர்ச்சியை குறைத்து ஈரப்பதத்தை அதிகரிக்கிறது.

மசாஜ்

கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் சிறிதளவு நெய்யை தடவி மெதுவாக மசாஜ் செய்தால், இரத்த ஓட்டம் மேம்பட்டு கண் சோர்வு குறையும்.

Main

குறிப்பு

கண்களின் வறட்சியை குறைக்க, நெய் ஒரு எளிய, இயற்கையான, பாதுகாப்பான வழியாக இருக்கிறது. இது கண் திசுக்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், வீக்கம், சோர்வு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளை குறைக்கவும் உதவுகிறது. இருப்பினும், அதிகமான கண் பிரச்சனைகள் இருந்தால், மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம் என்பதை மறவாதீர்கள்.

Disclaimer: இந்த பதிவு பொதுவான சுகாதார தகவல்களை மட்டுமே வழங்குகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள நெய் பயன்படுத்தும் முறைகள் பாரம்பரிய மற்றும் இயற்கை மருத்துவ அடிப்படையில் எழுதப்பட்டவையாகும். இது எந்தவொரு விதமான மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக அமையாது. உங்களுக்கு கண் தொடர்பான பிரச்சனைகள், தீவிர வலி அல்லது சிக்கல்கள் இருந்தால், தயவுசெய்து தகுந்த மருத்துவர் அல்லது கண் நிபுணரை அணுகவும். உங்கள் உடல் நலம் மற்றும் தனிப்பட்ட தேவைகளை கருத்தில் கொண்டு மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Read Next

பொது இடங்களில் வாயு வெளியேற்றம்.. சங்கடத்திற்கு தள்ளும் சூழல்.. மருத்துவர் கூறும் சுலபமான தீர்வு இங்கே.!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்