Fri Sep 11, 2026 | 11:42 PM IST

Doctor Verified

அதிகபட்ச நன்மைகளைப் பெற அஸ்வகந்தாவை உட்கொள்வதற்கான சிறந்த வழிகள்.. மருத்துவர் தரும் டிப்ஸ்

What's the best way to consume ashwagandha: அஸ்வகந்தாவின் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு, அதை சரியான முறையில் எடுத்துக் கொள்வது அவசியமாகும். இதில் அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்வதற்கான சரியான மற்றும் சிறந்த வழிகள் குறித்து மருத்துவர் குறிப்பிட்டுள்ளதைக் காண்போம்.

How to make ashwagandha the most effective: அஸ்வந்தா மிகவும் சக்திவாய்ந்த மூலிகைகளில் ஒன்றாகும். இதன் தாவரவியல் பெயர் விட்டானியா சோம்னிஃபெரா. அஸ்வகந்தாவில் அஸ்வ என்பது குதிரைகளையும், காந்தா என்பது வாசனையையும் குறிக்கிறது. எனவே குதிரைகளைப் போல மணக்கும் மூலிகை அஸ்வகந்தா என அழைக்கப்படுகிறது. ஆம், உண்மையில் இது குதிரையைப் போல மணக்கும். ஆனால் இந்த மூலிகையின் வேர்கள் குதிரைகளைப் போல மணக்காது. அதே சமயம், அது சுவையாகவும் இருக்காது. அஸ்வகந்தா எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், அதை எடுத்துக் கொள்வதற்கான சரியான வழிகள் குறித்தும் டாக்டர். விவேக் ஜோஷி அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர், அஸ்வகந்தாவை மாத்திரைகள் அல்லது காப்ஸ்யூல்களுக்குப் பதிலாக, பவுடராக எடுத்துக் கொள்வதை பரிந்துரைக்கிறார். அவர் கூறியதாவது,”செயல்திறனை மேம்படுத்த விரும்பினால் அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்ளலாம். மேலும், வலிமையைப் பெற விரும்பினால், அஸ்வகந்தாவைப் பயன்படுத்த வேண்டும். மேலும் ”அஸ்வகந்தா VO2 அதிகபட்ச அளவை மேம்படுத்துகிறது என்றும், அது உடல் செயல்திறனை மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளார்”. பொதுவாக, நீரிழிவு நோயாளிகள் நீரிழிவு நரம்பியல் நோயால் பாதிக்கப்படுவர் அல்லது காலப்போக்கில் அவர்களின் நரம்புகள் பலவீனமடையலாம். இந்நிலையில் அஸ்வகந்தா எடுத்துக் கொள்வது நரம்புகளுக்கு வலிமையைத் தருவதுடன், நீரிழிவு அறிகுறிகளைக் குறைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Ashwagandha Benefits: அஸ்வகந்தாவால் ஆண்களுக்கு இவ்வளவு நன்மையா?

அஸ்வகந்தாவை எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம்?

இது தவிர, அஸ்வகந்தா தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. நல்ல தரமான தூக்கத்தைப் பெற விரும்புபவர்கள், ஆழ்ந்த தூக்கத்தைப் பெற விரும்புபவர்களுக்கு அஸ்வகந்தா நன்மை பயக்கும். எனினும், இது போன்ற அனைத்து நன்மைகளையும் பெறுவதற்கு அஸ்வகந்தாவை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவர் “அஸ்வகந்தாவை 2 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது என்றும், பின்னர் குறைந்தது 3 வாரங்களுக்கு இடைவெளி இருக்க வேண்டும் மற்றும் அதன் பின் மீண்டும் அஸ்வகந்தாவைத் தொடரலாம்” என பகிர்ந்துள்ளார்.

அஸ்வகந்தாவின் நன்மைகள்

அஸ்வகந்தா வீக்கத்தைக் குறைக்க உதவும் மூலிகையாகும். எனவே மூட்டு வலி அல்லது வேறு எந்த வகையான வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது உதவியாக இருக்கும். அஸ்வகந்தா மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவையும் குறைக்க உதவுகிறது. இது ஒரு பாலுணர்வூக்கியாகவும் செயல்படுகிறது. எனவே இது நமது ஆற்றலையும் அதிகரிக்கும். ஆம். அஸ்வகந்தாவை ஆண்கள், பெண்கள் இருவரும் பயன்படுத்தலாம்.

அஸ்வகந்தாவை தொடர்ந்து பயன்படுத்துவது சருமத்திற்கு பளபளப்பைத் தருகிறது. எப்படி தெரியுமா? ஆயுர்வேதத்தின்படி, முழுமையான மருத்துவ அறிவியலான அஸ்வகந்தா உண்மையில் உடலில் உள்ள வாதம் மற்றும் கபாவை சமநிலைப்படுத்துகிறது. வாதம் என்பது காற்று கூறு. கபா என்றால் தை சளியுடன் தொடர்புபடுத்தலாம். எனவே சருமம் வறட்சியாக இருப்பின், அஸ்வகந்தா ஒரு நல்ல மூலிகையாக இருக்கும்.

அஸ்வகந்தாவை எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்?

ஆனால், இதை அதிகளவு பயன்படுத்துவது உடலின் நெருப்பு கூறுகளான பித்தத்தை அதிகரிக்கக்கூடும். எனவே தான் அஸ்வகந்தாவின் அளவு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காலையிலும் மாலையிலும் அல்லது மாலையில் மட்டும் 2 மாதங்களுக்கு அரை டீஸ்பூன் எடுத்துக்கொண்டு தொடங்க மருத்துவர் பரிந்துரைக்கிறார். அதன் பின்னர், 3 வார இடைவெளி எடுத்து மீண்டும் அதைத் தொடரலாம்.

இந்த பதிவும் உதவலாம்: மூலிகைகளின் ராஜா... தினந்தோறும் அஸ்வகந்தா சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?

எனினும், அஸ்வகந்தாவைப் பயன்படுத்தத் தொடங்கி மலச்சிக்கல் பிரச்சனையை உணர்ந்தால், அவை அஸ்வகந்தாவின் பக்க விளைவுகள் என்று அர்த்தம். இது அவர்கள் உடலுக்கு போதுமான அளவை விட அதிகமாக எடுத்துக் கொள்வதைக் குறிக்கிறது. இந்நிலையில், அசுகந்தாவின் அளவைக் குறைக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு அரை டீஸ்பூன் போதுமானதாக இருக்கலாம். அதுவும் ஒரு நாளைக்கு மட்டுமே. எனவே, உடல் அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். எனவே மலச்சிக்கல் இருப்பின், அதன் அளவைக் குறிக்க வேண்டும்.

மேலும், இரவில் சூடான பசுவின் பாலுடன் அல்லது தேனுடன் அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்ளலாம். அதிலும் நீரிழிவு நோயாளிகளாக இருப்பின், அஸ்வகந்தாவைப் பயன்படுத்தும் அளவைக் குறைக்க வேண்டும். அஸ்வகந்தாவை தண்ணீருடன் எடுத்துக் கொள்ளப் போவதாக இருப்பின், அதில் தேன் சேர்க்க வேண்டாம். ஏனெனில், அதிகப்படியான அளவு கூட சோம்பலை ஏற்படுத்தலாம். மேலும், அஸ்வகந்தாவை அதிகமாக உட்கொள்வதால் மனச்சோர்வு ஏற்படும்.

அஸ்வகந்தா உண்மையில் தசை குளுக்கோஸ் பயன்பாட்டை மேம்படுத்துகிறது. எனவே தான் நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம். சரியான அளவு மற்றும் நல்ல தரமான அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்வதன் மூலம் அற்புத நன்மைகளைப் பெறலாம். எனினும், உடல் அஸ்வகந்தாவுடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறை அரை டீஸ்பூன் மட்டும் எடுத்துக் கொண்டு தொடங்க வேண்டும். சுமார் 5 முதல் 10 நாட்களுக்கு அதை பயன்படுத்தி, பின்னர் எந்த பக்க விளைவுகளும் இல்லையெனில், ஒரு நாளைக்கு இரண்டு முறை அரை டீஸ்பூன் வரை செல்லலாம் என மருத்துவர் பகிர்ந்துள்ளார்.

மேலும் உணவுக்குப் பிறகு 30 முதல் 40 நிமிடங்களுக்குப் பிறகு அஸ்வகந்தாவைப் பயன்படுத்தலாம். உணவுக்கு முன் இதை எடுத்துக்கொள்ளக் கூடாததற்கு காரணம், வெறும் வயிற்றில் பயன்படுத்தினால் சிலருக்கு குமட்டல் ஏற்படலாம். எனவே இதை பாதுகாப்பாக சாப்பிட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இதை எடுத்துக் கொள்ள மருத்துவர் பரிந்துரைக்கிறார்.

இந்த பதிவும் உதவலாம்: அஸ்வகந்தாவை எடுத்துக்கொள்ள சிறந்த நேரம் இது தான்.. மருத்துவர் அறிவுரை..

Image Source: Freepik

Read Next

எலும்பு வலிமை முதல் ஹார்மோன் சமநிலை வரை.. பெண்கள் சாப்பிட வேண்டிய ஆயுர்வேத உணவுகள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content