Sat Sep 12, 2026 | 01:56 AM IST

Black Hair Tips: நரை முடியை கறுப்பாக்க மருதாணியுடன் இதை கலந்து தேய்த்தால் போதும்!

What to Mix With Henna for Silky Hair : மருதாணி பல ஆண்டுகளாக தலைமுடியில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை பொருள். கூந்தலுக்கு மருதாணி பயன்படுத்துவதால், முடி மென்மையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

நம்மில் பலர் நரை முடியை மறைக்க தலைமுடிக்கு மருதாணி பொடியை தான் உபயோகிப்போம். மருதாணியை பயன்படுத்திய பிறகும் சிலருக்கு தலைமுடி சரியாக நிறம் மாறவில்லை என்ற வருத்தம் இருக்கும். நீங்களும் அதில் ஒருவராக இருந்தால் நாங்கள், உங்களுக்கான ஒரு குறிப்பை கூறுகிறோம்.

இந்த பதிவும் உதவலாம் : Mango Benefits For Hair: முடி வளர்ச்சிக்கு மாங்காய் இவ்வளவு நல்லதா?

தலைமுடிக்கு மருதாணியில் என்ன கலக்க வேண்டும்?

முடிக்கு வண்ணம் பூசுவதற்கு ஹென்னா மிகவும் நல்லது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் நிறமடைவது மட்டுமின்றி ஆரோக்கியமாகவும் இருக்கும். மருதாணியின் நிறம் கருமையாக இருக்க வேண்டுமெனில், இதற்கு பீட்ரூட்டைப் பயன்படுத்தலாம்.

  • முதலில் பீட்ரூட்டை நன்றாகக் கழுவவும்.
    பின்னர், அவற்றின் தோலை நீக்கி நன்றாக துருவவும்.
  • இப்போது ஒரு பாத்திரத்தில், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • இதில், துருவிய பீட்ரூட்டை சேர்க்கவும்.
  • தண்ணீர் பாதியாகக் குறைக்கும் வரை கொதிக்க வைக்கவும்.
  • ஆறிய பிறகு மருதாணி பொடியில் இந்த தண்ணீரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இப்போது நீங்கள் ஹேனாவை தலைமுடியில் பயன்படுத்தும்போது, ​​தலைமுடியின் நிறம் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஏனெனில், இந்த நிறம் விரைவில் மறைந்துவிடாது
    இது இயற்கையான நிறம்.

இந்த பதிவும் உதவலாம் : Cinnamon for hair : அடர்த்தியான கூந்தலை பெற இலவங்கப்பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!

செம்பருத்தி பூக்களை கூந்தலுக்கு தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்

செம்பருத்தி பூ முடிக்கு நன்மை பயக்கும். வெள்ளை முடி முதல் முடி உதிர்தல் வரை அனைத்து முடி பிரச்சனைகளை நீக்க இந்த பூ உதவுகிறது. மருதாணியை தடவி முடியில் நிறம் சரியாகவில்லை என்றால், இதற்கு செம்பருத்தி பூ பொடியை பயன்படுத்தலாம். சந்தையில் இந்தப் பொடியை எளிதாகக் கிடைக்கும்.

  • மருதாணி பேஸ்டுடன் 2 ஸ்பூன் செம்பருத்தி பூ பொடி சேர்க்கவும்.
  • அதை நன்றாக கலந்து முடியில் தடவவும்.
  • இது உங்கள் தலைமுடிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கும்.

மருதாணியுடன் என்ன சேர்த்தால் நல்லது?

மருதாணி நிறம் தலைமுடியில் நன்றாக வருவதற்கு கிராம்புகளை தேயிலை நீரில் கொதிக்க வைக்கவும். மருதாணியில் கிராம்பு தண்ணீர் மற்றும் 2 ஸ்பூன் கேட்சு பவுடர் மற்றும் 8-10 ஸ்பூன் மருதாணி எண்ணெய் கலக்கவும். இந்த மருதாணி கரைசலை தடவினால் கூந்தலுக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? உங்களுக்கான 6 ஆசனங்கள் இங்கே…

தலைமுடியில் மருதாணி பூசுவதால் கிடைக்கும் நன்மைகள்

உங்கள் தலைமுடி அதிகமாக உதிர்ந்தால், மருதாணி உபயோகிப்பதன் மூலம் இந்த பிரச்சனையை குறைக்கலாம். நெல்லிக்காய் பொடியை மருதாணியுடன் கலந்து தடவினால் முடி உதிர்வு குறையும்.

விலையுயர்ந்த சிகிச்சைகள் மற்றும் ரசாயன பொருட்களை பயன்படுத்தாமல் கூட முடி வளரும். மருதாணியை முடியில் தடவினால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

உச்சந்தலை ஆரோக்கியமாக இல்லாவிட்டால், அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க மெஹந்தி நன்மை பயக்கும்.

உங்கள் முடி எண்ணெய் பசையாக இருந்தால் மருதாணியை தடவவும். இது எண்ணெய் உற்பத்தியை சமநிலைப்படுத்த உதவுகிறது.

ஷாம்பு மற்றும் கண்டிஷனரைத் தவிர்த்து, முடியைப் பட்டுப் போல மாற்ற, மருதாணியை தடவினால் முடி மென்மையாக மாறும்.

சேதமடைந்த முடியை சரிசெய்ய மெஹந்தியை பயன்படுத்தலாம்.

Image Credit: freepik

Read Next

Hair Care Tips: முடி வளர விளக்கெண்ணெயை இப்படி யூஸ் பண்ணி பாருங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content