Doctor Verified

இந்த 5 தினசரி பழக்கங்கள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் – டாக்டர் எச்சரிக்கை!

சின்ன சின்ன பழக்கங்கள் கூட உங்கள் இரத்த சர்க்கரை அளவை ஆபத்தாக உயர்த்தும்! அவற்றை உடனே நிறுத்துங்கள். 
  • SHARE
  • FOLLOW
இந்த 5 தினசரி பழக்கங்கள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் – டாக்டர் எச்சரிக்கை!

இன்றைய வேகமான வாழ்க்கை முறைsயில் நாம் செய்யும் சிறிய தவறுகள் கூட உடல்நலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Level) உயர்த்தும் சில தினசரி பழக்கங்கள் நம்மால் கவனிக்கப்படாமல் நிகழ்கின்றன.


முக்கியமான குறிப்புகள்:-


காஸ்ட்ரோ நிபுணர் டாக்டர் பால் (Dr. Pal) தனது Instagram வீடியோவில், “இந்த ஐந்து பழக்கங்கள் உங்கள் இரத்த சர்க்கரையை மெதுவாகவும், ஆபத்தாகவும் உயர்த்துகின்றன” என எச்சரித்துள்ளார். அந்த பழக்கங்கள் மற்றும் அதன் விளைவுகளை இங்கே பார்க்கலாம்.

இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் பழக்கங்கள்

தொடர்ந்த மன அழுத்தம் (Chronic Stress)

நீங்கள் அடிக்கடி மன அழுத்தத்தில் இருந்தால், உடலில் கார்டிசோல் (Cortisol) எனப்படும் ஹார்மோன் அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் கல்லீரலுக்கு “இன்னும் கூடுதல் சர்க்கரை வெளியிடு” என்று உத்தரவிடும். இதனால் இரத்த சர்க்கரை அளவு திடீரென உயரும் – இதுவே நீண்டகாலத்தில் மதுமேகம் (Diabetes) உருவாக வழிவகுக்கும்.

எப்போதும் சிற்றுண்டி

“சின்ன சின்னதா சாப்பிடறேன்” என்று நினைத்தாலும் அது உடலுக்கு பெரிய தாக்கம் தருகிறது. ஒவ்வொரு சிற்றுண்டியுமே இன்சுலின் (Insulin) அளவை உயர்த்தும். இதனால் பேன்கிரியாஸ் (Pancreas) என்ற சுரப்பி ஓய்வு பெறாமல் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலை. அதன் விளைவாக, இன்சுலின் செயலிழக்க ஆரம்பிக்கும் – இதுவே இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance) எனப்படும் நிலைக்கு வழிவகுக்கும்.

இரவு நேர ஸ்கிரீன் டைம்

தொலைபேசி, டிவி, லேப்டாப் போன்றவற்றின் நீல ஒளி (Blue Light) உறக்க ஹார்மோனான மெலட்டோனினை (Melatonin) தடுக்கிறது. இதனால் சரியான உறக்கம் குறைகிறது. மருத்துவர் கூறுவதில், “குறைந்த உறக்கம் என்பது காலை நேர உணவு முன் சர்க்கரை அளவை (Fasting Sugar) அதிகரிக்கும் முக்கிய காரணம்.”

இந்த பதிவும் உதவலாம்: இந்த 3 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்.. கொழுப்பு கல்லீரல் பிரச்னையாக இருக்கலாம்.!

விரைவாக சாப்பிடுதல்

உணவை வேகமாக சாப்பிடும் பழக்கம், உடலில் சர்க்கரை வேகமாக உறிஞ்சப்படும் நிலையை உருவாக்குகிறது. இதனால் இரத்த சர்க்கரை திடீரென உயரும் (Glucose Spike). மேலும், மூளைக்கு “நான் நிறைந்துவிட்டேன்” என்ற சிக்னல் வரும் முன்பே நாம் அதிகமாக சாப்பிடிவிடுகிறோம். மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடுவது – இன்சுலின் சுமையை குறைக்கும் சிறந்த வழி.

உணவுக்குப் பிறகு உட்கார்ந்திருத்தல்

உணவுக்குப் பிறகு உடனே உட்கார்ந்து விடுவது மிகப்பெரிய தவறு. மருத்துவர் கூறுவதில், “உணவுக்குப் பிறகு 10 நிமிடங்கள் நடப்பது சர்க்கரை உயர்வை 30% வரை குறைக்கும்.” அதனால் சாப்பிட்டவுடன் மெதுவாக நடப்பது சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு மிகுந்த உதவியாகும்.

View this post on Instagram

A post shared by Dr. Pal's NewME (@dr.pals_newme)

இறுதியாக..

இரத்த சர்க்கரை அளவு உயர்வதற்கு எப்போதும் சர்க்கரை உணவுகள் மட்டுமே காரணமல்ல. மனஅழுத்தம், ஸ்கிரீன் டைம், சோர்வு, உடற்பயிற்சி இல்லாமை போன்ற சின்ன பழக்கங்களும் அதே அளவு பாதிக்கும். அதனால், ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் சிறிது நடைபயிற்சி, சமநிலை உணவு, மற்றும் மனஅழுத்தக் குறைப்பு ஆகியவற்றை கடைபிடிப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம்.

Disclaimer: இந்த கட்டுரை தகவல் பகிர்வு நோக்கத்திற்காக மட்டுமே. உங்கள் இரத்த சர்க்கரை அளவில் மாற்றம் இருந்தால் அல்லது மருந்து எடுத்துக் கொண்டால், மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே மாற்றங்களைச் செய்யவும்.

Read Next

உங்களுக்குத் தெரியாமலேயே சுகர் லெவலை அதிகரிக்கக்கூடிய 5 பழக்கங்கள்.. உடனே நிறுத்துங்க! மருத்துவர் சொன்னது

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 12, 2025 21:36 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்