Yoga Poses To Stay Healthy In Monsoon: கோடைக்காலத்தில் தோன்றும் புதிய மழையால் பலரும் பல்வேறு நோய்த்தொற்றுக்களை சந்திக்கும் நிலை ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் உடல் செயல்பாடு இல்லாதது ஆரோக்கியத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் மழைக்காலத்தில் வெளியில் உடற்பயிற்சி செய்யக்கூடிய ஜாகிங், ஜிம் போன்றவை தடைபடலாம். இந்நிலையில் எளிதாக வீட்டிலேயே சில யோகாசனங்களை மேற்கொள்வது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க உதவுகிறது.
சில யோகாசனங்களை மேற்கொண்டு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தலாம். மேலும் இவை உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், அமைதியான உணர்வைத் தருகிறது. மழைக்காலங்களில் வீட்டிலேயே உடலில் இம்யூனிட்டியை அதிகப்படுத்த நாம் செய்ய வேண்டிய சில யோகாசனங்களைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Yoga For Body Heat: உடல் சூட்டைத் தணிக்க நீங்க செய்ய வேண்டிய யோகாசனங்கள்!
மழைக்காலங்களில் உடல் ஆரோக்கியமாக இருக்க செய்ய வேண்டிய யோகாசனங்கள்
அதோ முக ஷ்வனாசனம்
இந்த ஆசனம் கீழ்நோக்கி எதிர்கொள்ளும் நாய் போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் யோகா போஸ் ஆகும். இந்த ஆசனத்தில் முழு உடலும் நீட்டி வலுப்படுத்தப்படுகிறது. மேலும் நுரையீரல் திறனை அதிகரிக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. கீழ்நோக்கி எதிர்கொள்ளும் நாய் போஸ் அல்லது அதோ முக ஷ்வனாசனம் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மனதை அமைதிப்படுத்துகிறது. பருவமழைக்காலங்களில் உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக இருக்க இந்த ஆசனம் சிறந்த தேர்வாக அமைகிறது.
அதோ முக ஷ்வனாசனம் செய்முறை
- இந்த ஆசனம் செய்யும் போது முதலில் வயிற்றில் படுத்துக் கொள்ள வேண்டும். பிறகு கைகள் மற்றும் கால்களை மெதுவாக உடலைத் தூக்க வேண்டும்.
- பிறகு மூச்சை வெளியேற்றும் போது, மெதுவாக இடுப்பை மேல்நோக்கி உயர்த்த வேண்டும்.
- பின் முழங்கால்கள் மற்றும் முழங்கைகளை இறுக்கமாக வைத்து, உடல் V வடிவத்தில் தலைகீழாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- இந்த ஆசனத்தில் தோள்கள் மற்றும் கைகளை ஒரே நேர்க்கோட்டில் வைக்க வேண்டும்.
- இப்போது கைகளை தரையை நோக்கி அழுத்தி, கழுத்தை நீளமாக இழுக்க முயற்சிக்கலாம். இந்நிலையில் காதுகளை, கைகளின் உட்புறத்தைத் தொட்டு, கண்களை வயிற்றுப் பகுதியில் பார்க்க முயற்சிக்க வேண்டும்.
- இந்நிலையில் சில வினாடிகள் இருந்து, பிறகு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Yoga For Neck Hump: கூன் முதுகை நேராக்க, இந்த ஐந்து யோகாசனங்களை மட்டும் செய்யுங்க
கபால்பதி பிராணாயாமா
இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும் சிறந்த வழியாகும். இது ஒரு சக்திவாய்ந்த சுவாச பயிற்சியாகக் கருதப்படுகிறது. கபால்பதி பிராணாயாமா செய்வது சுவாச மண்டலத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் மனம் மற்றும் உடலை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த சுவாச பயிற்சி மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைக்க ஏதுவாக உள்ளது. மேலும் நோயெதிர்ப்புச் செயல்பாட்டை ஆதரிக்கிறது. இதன் மூலம் நுரையீரலில் உள்ள பழைய காற்று வெளியேற்றப்பட்டு இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, இந்த கபால்பதி பிராணாயாமா பெண்களுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. பெண்கள் இந்த ஆசனம் செய்வது கருப்பை கட்டிகளை தடுக்கவும், மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும், பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இது தவிர, கருவளையம் நீங்க, மூளை ஆரோக்கியத்திற்கு மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்க இந்த யோகாசனம் சிறந்ததாக அமைகிறது
கபால்பதி பிராணாயாமா செய்முறை
- இந்த ஆசனம் செய்ய முதலில் முதுகுத்தண்டு நிமிர்ந்த நிலையில் ஒரு குறுக்கு-கால் நிலையில் வசதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
- பின் விரும்பும் முத்ராவில் கைகளை முழங்கால்களில் வைக்க வேண்டும்.
- பிறகு மூச்சை ஆழமாக இழுத்து தொப்புளை முதுகெலும்பை நோக்கி இழுக்கும்போது மூக்கின் வழியாக வலுக்கட்டாயமாக மூச்சை விட வேண்டும்.
- இந்நிலையில் 20-30 முறை மூச்சுப்பயிற்சி செய்து, பிறகு படிப்படியாக எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Yoga for asthma: நீங்க ஆஸ்துமா நோயாளியா? அப்போ தினமும் இந்த ஆசனத்தை செய்யுங்க!
நாடி ஷோதன் பிராணயாமம்
இந்த மூச்சுப் பயிற்சி அனுலோம் விலோம் பிராணயாமா என அழைக்கப்படுகிறது. உடலில் நாடிகள் முழு அமைப்பின் முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது. இந்த சுவாச நுட்பம் மனதை அமைதிப்படுத்தவும் ஓய்வெடுக்கவும் உதவுகிறது. நாடி ஷோடன் பிராணயாமம், தியான நிலைக்கு நுழைவதற்கு நம் மனதை தயார்படுத்துகிறது. மழைக்காலத்தில் சில நிமிடங்களுக்குப் பயிற்சி செய்வது மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இது மூளையின் இடது மற்றும் வலது புறத்தை சமநிலைப்படுத்த உதவும் சிறந்த மற்றும் அத்தியாவசிய யோக சுவாச நுட்பமாகும். இந்த பிராணயாமா மேற்கொள்வது மனத்தெளிவை ஊக்குவிக்கிறது. மேலும் மன அழுத்தத்தைக் குறைத்து நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. பருவமழையின் போது ஏற்படும் சளி மற்றும் சைனஸ் பிரச்சனையைத் தடுக்க இந்த பிராணயாமம் சிறந்ததாக அமைகிறது.
நாடி ஷோதன் செய்முறை
- நாடி ஷோதன் பிராணயாமா செய்ய முதுகுத்தண்டை நேராகவும், தோள்களை தளர்வாக மற்றும் வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின், வலது கட்டைவிரலால் வலது நாசியை மூடி, இடது நாசி வழியாக மூச்சை ஆழமாக உள்ளிழுக்க வேண்டும்.
- இப்போது, வலது மோதிர விரலால் இடது நாசியை மூடி, வலது நாசியை விடுவித்து முழுமையாக மூச்சை வெளிவிட வேண்டும்.
- பிறகு வலது நாசி வழியாக ஆழமாக உள்ளிழுக்க வேண்டும்.
- மீண்டும் வலது நாசியை மூடி, இடது நாசியை விடுவித்து, முழுமையாக மூச்சை வெளியேற்ற வேண்டும்.
- இது ஒரு சுழற்சியை நிறைவு செய்கிறது. முதலில் ஐந்து சுழற்சிகளுடன் தொடங்கி பின் படிப்படியாக எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
மேலே கூறப்பட்ட இந்த யோகாசனங்களை மேற்கொள்வது மழைக்காலங்களில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Yoga for Legs: கால் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க இந்த யோகாசனங்களை செய்யுங்க
Image Source: Freepik