வெறும் வயிற்றில் கிராம்பு, துளசியை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Reasons to have clove and tulsi: காலையில் வெறும் வயிற்றில் கிராம்புடன் துளசி சேர்த்து சாப்பிடுவது நன்மை பயக்கும். இவை இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது. இதில் காலையில் கிராம்பு மற்றும் துளசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
வெறும் வயிற்றில் கிராம்பு, துளசியை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?


Why to eat cloves and tulsi on empty stomach: நாம் பெரும்பாலும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக்கூடிய சில உணவுகள் அன்றைய நாள் முழுவதும் நம்மைப் பாதுகாக்கிறது. எனவே நாம் காலையில் சாப்பிட வேண்டிய உணவுகளை ஆரோக்கியமானதாக எடுத்துக் கொள்வது அவசியமாகும். இது உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு எலுமிச்சை நீர் முதல் சீரக நீர் வரை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

இந்த வரிசையில் துளசி இலைகள் மற்றும் கிராம்பு போன்றவை அடங்கும். இவை இரண்டும் தனித்தனியே முறையே ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதே சமயம், துளசி மற்றும் கிராம்பு இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்வது உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் காலை வெறும் வயிற்றில் துளசி இலைகள் மற்றும் கிராம்புகளைச் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Tulsi Benefits: துளசி இலைகள் எந்த நோய்களை தீர்க்க உதவும்?

வெறும் வயிற்றில் துளசி, கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

செரிமானத்தை மேம்படுத்த

துளசி இலைகள் செரிமான அமைப்பைத் தூண்டவும், வாயு மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும், அஜீரணத்தைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், கிராம்பு செரிமான நொதிகளின் சுரப்பைத் தூண்டி, உணவை திறம்பட செரிமானம் அடைய உதவுகிறது. இதன் மூலம் வாயு, வீக்கம் மற்றும் பிற செரிமான அசௌகரியங்களைக் குறைக்கலாம்.

image
eat-after-meal-digestion-1748979828976.jpg

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

துளசியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், உடலை தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன. அதே சமயம், கிராம்புவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், உடலை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க

வெறும் வயிற்றில் துளசியை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது. எனவே இது நீரிழிவு நோயாளிகள் அல்லது நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். மேலும், கிராம்பு இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவையும் நீரிழிவு நோய்க்கு மிகுந்த நன்மை பயக்கும்.

இதய ஆரோக்கியத்திற்கு

வெறும் வயிற்றில் துளசி சாப்பிடுவது உடலில் கொழுப்பின் அளவைக் குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. இதன் மூலம் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கலாம். மேலும், ஆய்வுகளில் கிராம்பில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக செயல்பட்டு இதய நோய், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: நீரிழிவு நோய் முதல் சரும ஆரோக்கியம் வரை.. தினமும் துளசி இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ 

சுவாச ஆரோக்கியத்திற்கு

ஆய்வுகளின்படி, துளசியில் உள்ள சளி நீக்கி மற்றும் இரத்தக் கசிவு நீக்கி பண்புகள் ஆஸ்துமா, சளி மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது. மேலும் கிராம்புகளில் சளியை அகற்ற உதவும் சளி நீக்கி பண்புகள் உள்ளது. இது சுவாசக் குழாயிலிருந்து சளியை அகற்றவும், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் இருமல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.

image
breathing-issue-symptoms-of-high-blood-pressure-in-winter

வாய்வழி ஆரோக்கியத்திற்கு

துளசி வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க உதவும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு நன்கு பெயர் பெற்றதாகும். மேலும் கிராம்புகளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவும், பல் தொற்று மற்றும் ஈறு நோய் அபாயத்தைக் குறைக்கவும், துர்நாற்றத்தைத் தடுக்கவும் உதவுகின்றன.

மன அழுத்தத்தைக் குறைக்க

துளசியில் உள்ள அடாப்டோஜெனிக் பண்புகள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை சமாளிக்க உதவுவதுடன், மன தெளிவு மற்றும் உணர்ச்சி சமநிலையை மேம்படுத்துகிறது. அதன் படி, குங்குமப்பூ இழைகள் மற்றும் தேனுடன் ஒரு எளிய துளசி தேநீர் தயாரிப்பது மன தெளிவை மேம்படுத்த உதவுகிறது.

நல்ல தூக்கத்திற்கு

துளசியின் அமைதிப்படுத்தும் மற்றும் தகவமைப்பு பண்புகள், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதில் உள்ள யூஜெனால் மற்றும் ரோஸ்மரினிக் அமிலம் போன்ற சேர்மங்கள், மயக்க மருந்து மற்றும் பதட்ட எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. இவை தளர்வு உணர்வை ஊக்குவிக்கின்றன. கூடுதலாக, தூக்கமின்மைக்கு பங்களிக்கும் மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.

வெறும் வயிற்றில் துளசி, கிராம்பு சாப்பிடுவது இது போன்ற ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. எனினும், வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளும் முன்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்பு முதல்.. மனநிலை மேம்பாடு வரை.. அதிகாலை துளசி நீர் குடிப்பதன் நன்மைகள் இங்கே.. 

Image Source: Freepik

Read Next

வாரம் ஒரு முறை உங்க உணவில் கருவாடு சேர்த்துக்கணும்.. ஏன் தெரியுமா?

Disclaimer