Benefits Of Consuming Tulsi Leaves On Empty Stomch: துளசி பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த சிறந்த மூலிகையாகும். ஆயுர்வேதத்தில் இந்த மென்மையான மற்றும் நறுமண இலைகள் பல்வேறு மருத்துவ சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது போல பல்வேறு நன்மைகள் கொண்ட துளசி இலையை வெறும் வயிற்றில் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.
ஆயுர்வேத மருத்துவ குணங்கள் கொண்ட இந்த இலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனுடன் பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய இந்த இலைகளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மோர் குடிக்க போறீங்களா? எந்த டைம்ல குடிக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க
வெறும் வயிற்றில் துளசி உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
இரத்த சர்க்கரை அளவை சீராக்க
காலையில் வெறும் வயிற்றில் துளசி உட்கொள்ளலின் மூலம், இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கலாம். இவை கணைய செல்களின் செயல்பாட்டை ஆதரிக்கும் சேர்மங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது இன்சுலினை வெளியிடவும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த இலைகள் கொழுப்புகள் கார்போஹைட்ரேட்டுகளின் வளர்ச்சிதை மாற்றத்தை எளிதாக்குகிறது. இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஆற்றலுக்காக பயன்படுத்துகிறது. இவ்வாறு இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
துளசி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இவை உடலில் நோயை உண்டாக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
இருமலைக் குணப்படுத்த
ஆயுர்வேத முறைப்படி, துளசி இலைகளை உட்கொள்வது ஜலதோஷத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். அதன் படி, இதில் நிறைந்துள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருமல் மற்றும் சளி போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Body Heat Reduce Tips: உடல் சூட்டை வேகமா தணிக்க ஆயுர்வேதம் கூறும் யுக்தி என்ன தெரியுமா?
சுவாச ஆரோக்கியத்திற்கு
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த இலைகளில் உள்ள மருத்துவ பண்புகள் ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக அமைகிறது. மேலும் இந்த துளசி இலை நீராவியை சுவாசிப்பதன் மூலம் நெரிசலைக் கட்டுப்படுத்தலாம்.
எடை இழப்புக்கு
துளசி இலைகளை உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். மேலும் இவை நச்சுத்தன்மைக்கு உதவுகிறது. எனவே இவை இயற்கையாகவே கூடுதல் கலோரிகளைக் குறைத்து, எடை இழப்பில் பங்கு வகிக்கிறது.
வாய் துர்நாற்றத்தைப் போக்க
காலை நேரத்தில் துளசி இலைகளை மென்று சாப்பிடுவது வாயில் உள்ள துர்நாற்றத்தை நீக்குவதுடன், புத்துணர்ச்சியை அளிக்கிறது. மேலும், இதன் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
சரும பராமரிப்பில்
துளசியில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், நச்சுத்தன்மையை நீக்கவும் உதவுகிறது. இதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முகப்பரு, தழும்புகள் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது.
புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள்
துளசி இலைகளில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை நிறுத்தும் புற்றுநோய் கூறுகள் அதிகம் நிறைந்துள்ளது. இது வாய் மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
இவ்வாறு காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை மென்று சாப்பிடுவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Herbal Drinks For Gas: வாயுத்தொல்லை மற்றும் அஜீரணத்தில் இருந்து விடுபட இந்த 3 பானங்கள் குடிங்க போதும்
Image Source: Freepik