Buttermilk Drinking Time According To Ayurveda: கோடைக்காலத்தில் அனைவரும் விரும்பி அருந்தும் பானங்களில் ஒன்று மோர் ஆகும். மோரில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதாவது வைட்டமின் பி12, கால்சியம், துத்தநாகம், ரிபோஃப்ளேவின் மற்றும் புரதம் போன்றவை மோரில் அதிகளவில் காணப்படுகிறது.
மோர் குடிப்பதால் எலும்புகள் வலுவடைந்து உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. மேலும் இது எடையிழப்பு மற்றும் வயிறு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆயுர்வேதத்தின் படி, மோர் குளிர்ச்சியான விளைவைத் தருகிறது. குறிப்பாக, கோடைக்காலத்தில் மோர் அருந்துவது நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Ajwain Tea Benefits: சுட்டெரிக்கும் வெயிலில் ஏற்படும் இந்த பிரச்சனைக்கு அஜ்வைன் டீ ஒன்னு போதும்
மோர் குடிக்க சிறந்த நேரம் எது?
காலையில் வெறும் வயிற்றில் பலரும் மோர் அருந்துவதை விரும்புகின்றனர். சிலர் மாலை நேரத்தில் மோர் அருந்துவர். இன்னும் சிலர் காலை உணவு அல்லது மதிய உணவுக்குப் பின் மோர் குடிக்க விரும்புகிறார்கள். அது மட்டுமின்றி, சிலர் இரவில் கூட மோர் அருந்துகின்றனர். ஆனால் எந்த உணவையும் சரியான நேரத்தில் உட்கொள்ளும் போதே அதன் ஒட்டுமொத்த நன்மைகளையும் பெற முடியும்.
ஆயுர்வேதத்தின் படி, மோர் எப்போதும் பகலில் குடிக்க வேண்டும். அதே சமயம், மாலை அல்லது இரவில் மோர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இது தவிர, வயிறு சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள், காலையில் மோர் அருந்தலாம். ஆயுர்வேதத்தின் படி, மோர் குடிப்பதற்கு சரியான நேரம் குறித்து ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் ஆயுர்வேதாச்சார்யா ஷ்ரே ஷர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஆயுர்வேதத்தின் படி மோர் குடிக்க சிறந்த நேரம்
வெறும் வயிற்றில் மோர் குடிப்பதன் நன்மைகள்
காலையில் வெறும் வயிற்றில் மோர் அருந்துவது சிறந்த நன்மைகளைத் தருகிறது. இது நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக, வயிறு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் காலை நேரத்தில் மோர் அருந்தலாம். மேலும், இது மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிறு பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் வாயு பிரச்சனைக்கும் தீர்வு தரும் வகையில் மோர் உதவுகிறது. கூடுதலாக, செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.
மதிய நேரத்தில் மோர் அருந்துவதன் நன்மைகள்
காலை சிற்றுண்டி சாப்பிட்ட பிறகு 1 மணி நேரம் கழித்து மோர் குடிக்கலாம். இவ்வாறு அருந்துவது உணவை சரியாக செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும், நடுப்பகுதியில் பசியை உணர்ந்தால், மோர் குடிப்பது சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Body Heat Reduce Tips: உடல் சூட்டை வேகமா தணிக்க ஆயுர்வேதம் கூறும் யுக்தி என்ன தெரியுமா?
மதிய உணவுக்குப் பிறகு மோர் குடிப்பதன் நன்மைகள்
ஆயுர்வேதத்தின் படி, மதிய உணவுக்குப் பிறகு மோர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். ஆயுர்வேதத்தில் எப்போதும் உணவு உண்ட பிறகே மோர் அருந்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். மேலும், உணவும் நன்றாக செரிமானம் அடையும்.
மதிய உணவுக்குப் பிறகு மோர் அருந்தவதன் மூலம் உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெறலாம். இது உடலில் வளர்ச்சிதைமாற்றத்தை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மதிய நேரத்தில் உணவு உண்ட பிறகு, மோர் அருந்துவதால், நீண்ட நேரம் பசி உணர்வு உண்டாவதைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், பசியையும் நீக்குகிறது. இதன் மூலம் எடை இழப்பிலும் மோர் பங்களிக்கிறது.
மோர் அருந்துவதற்கான சரியான வழி
மோரை வெறுமனே குடிக்க பிடிக்கவில்லையெனில், எளிமையாக மோரில் வேறு சில பொருள்களைச் சேர்த்து குடிக்கலாம். அதாவது சுவையான மற்றும் சத்தான மோர் குடிக்க விரும்புபவர்கள் வறுத்த சீரகத் தூள், கருப்பு உப்பு மற்றும் செலரித் தூள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து குடிக்க வேண்டும். இந்த வழியில் மோர் அருந்துவது மிகவும் சுவையானதாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.
இவ்வாறு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள மோர் பானத்தை கோடைகாலத்தில் சேர்த்துக் கொள்வது அதீத நன்மை தர உதவுகிறது. இவை உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதுடன், உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறது. எனினும் வேறு ஏதேனும் தீவிர நோய் கொண்டவர்களாக இருப்பின், மருத்துவ ஆலோசனையின் படியே மோர் அருந்த வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Fertility Increase Foods: கருவுறுதலை அதிகரிக்க நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள்! ஆயுர்வேதம் கூறும் கருத்து
Image Source: Freepik