Fri Sep 11, 2026 | 11:46 PM IST

குளிர்காலத்தில் சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் இவ்வளவு நல்லதா? - ஆனா எப்போது, ​​எப்படி ஜூஸ் குடிக்கனுன்னு தெரிஞ்சிக்கோங்க!

பருவகால பழமான சாத்துக்குடியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. குளிர்காலத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. இதனால், சளி, இருமல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.  

குளிர் காலம் வந்துவிட்டாலே, சந்தைகள் தொடங்கி சாலையோர கடைகள் வரை சாத்துக்குடி பழங்கள் டஜன், டஜனாக விற்பனைக்கு அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் ஜூஸாக மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த பழம் குளிர்காலத்தில் இப்படி அதிக அளவில் ஏன் விற்பனையாகிறது என என்றாவது யோசித்திருக்கிறீர்களா?. குளிர் காலத்தில் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதில் எந்த உண்மையும் கிடையாது என்கின்றனர் நிபுணர்கள்.

பருவகால பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. குளிர்காலத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. இதனால், சளி, இருமல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. குளிர்காலத்தில் சாத்துக்குடி சாறு குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. அது என்னவென்று இங்கே பார்க்கலாம்.

சாத்துக்குடியின்ஆரோக்கிய நன்மைகள்:

சாத்துக்குடி பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்க உதவுகிறது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உறுப்பு செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இந்தப் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் தொற்றுகளைக் குறைக்கின்றன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சோர்வைக் குறைத்து, உங்களை சுறுசுறுப்பாக உணர வைக்கின்றன. சாத்துக்குடி சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாகவும், கீல்வாதம் மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்சனைகளைத் தடுப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி சாத்துக்குடி ஜூஸ் சாறு குடிப்பது உடலுக்கு இன்னும் அதிக நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

சாத்துக்குடி பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. குளிர்கால நோய்களைத் தடுக்க, தினமும் ஒரு கிளாஸ் சாத்துக்குடி ஜூஸ் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ஜூஸைக் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 செரிமான ஆரோக்கியம்:

சாத்துக்குடி பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது நமது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் பலர் செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் மலச்சிக்கல், வயிறு உப்புசம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு சாத்துக்குடி ஜூஸ் சிறந்த தேர்வாகும்.

மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் சாத்துக்குடி ஜூஸ் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எடை இழப்பு:

சாத்துக்குடியில் கலோரிகள் மிகக் குறைவு. கூடுதலாக, நார்ச்சத்து அதிகமுள்ளது. இது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால்தான் எடை குறைக்க விரும்புவோர் தங்கள் உணவில் சாத்துக்குடி ஜூஸை சேர்த்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மன அழுத்தத்தைக் குறைக்கிறது:

 இன்றைய காலகட்டத்தில், பலர் தங்கள் வேலைப் பழக்கம் காரணமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அத்தகையவர்களுக்கு சாத்துக்குடி ஜூஸ் சிறந்த வழி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சாத்துக்குடி பழத்தில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், தினமும் ஒரு கிளாஸ் சாத்துக்குடி ஜூஸ் குடிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 சருமத்திற்கு நல்லது:

 சாத்துக்குடியில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. மொசாபி ஜூஸ் குடிப்பதால் சருமம் மேம்படும். இது முகப்பரு பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

 எப்போது, எப்படி ஜூஸ் குடிக்க வேண்டும்?

 எக்காரணம் கொண்டும் வெளியில் சாத்துக்குடி ஜூஸ் வாங்கி குடிக்காதீர்கள். வீட்டிலேயே தயாரித்து குடிப்பது தான் நல்லது. இதை புதிதாக குடிப்பது நல்ல பலனைத் தரும். சர்க்கரைக்குப் பதிலாக தேனுடன் கலந்து சாத்துக்குடி சாறு குடிப்பது நல்லது. இது வெறும் ரசனைக்காக மட்டுமே. இதை நேரடியாகக் குடிப்பது சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். காலை உணவுக்குப் பிறகு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது சிறந்தது. இருப்பினும், அமிலத்தன்மை மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.

Image Source: Freepik

Read Next

Fiber rich fruits: நீங்க கட்டாயம் சாப்பிட வேண்டிய அதிக நார்ச்சத்து நிறைந்த பழங்கள் என்னென்ன தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content