Side Effects Of Eating Leftover Rice: நம்மில் பலருக்கு பழைய சாதம் பிடிக்கும். அது மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். பச்சை வெங்காயம் அல்லது ஊறுகாய் இருந்தால் சட்டி சட்டையாக பழைய சோறு சாப்பிடுவோம். ஆனால், தற்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. பெரும்பாலும், நாம் எஞ்சிய அரிசி உணவுகளை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்போம். தேவைப்படும் பொது அதை எடுத்து நாம் சூடு படுத்தி சாப்பிடும் வழக்கம் தற்போது சாதாரணமாகி விட்டது.
ஆனால் அவ்வாறு செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நாங்கள் கூறுவது உண்மைதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மீந்த சாதத்தை சூடுபடுத்தி சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளோம். இந்நிலையில், யோகாச்சார்யா மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான ஜூஹி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மிச்சம் இருக்கும் அரிசியை உண்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் கெட்டுப்போகாமல் இருக்க அதை எவ்வாறு சரியாக சேமித்து வைப்பது என்பது குறித்து விளக்கியுள்ளார். மீந்த அரிசி உணவுகளை நீங்கள் சரியாக சேமிக்கவில்லை என்றால், பின்னர் சாப்பிடும்போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இந்த பதிவும் உதவலாம் : Tea Addiction: டீ குடிக்கும் பழக்கத்தை கைவிட நினைப்பவரா நீங்க? இதை செய்யுங்க!
பழைய சாதத்தை ஏன் சாப்பிடக்கூடாது?

ஊட்டச்சத்து நிபுணர் ஜூஹி கபூர் கூறுகையில், பழைய சாதம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சமைத்த அரிசியை 2-3 மணி நேரம் அப்படியே வைக்கும் போது, அரிசியில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள், பூஞ்சை, பாக்டீரியாக்கள் உருவாகத் தொடங்கி வேகமாகப் பெருக்கத் தொடங்கும். அரிசி உணவில் பாக்டீரியா மற்றும் தீங்கு விளைவிக்கும் துகள்கள் மிக விரைவாக வளரும் என ஆய்வுகள் கூறுகிறது. இதை நாம் சாப்பிடும் போது, அரிசி விஷமாகி வயிற்றில் நச்சுக்களை உற்பத்தி செய்கிறது. இதனால் பல வகையான பிரச்சனைகள் ஏற்படும்.
பழைய சாதத்தை சூடுபடுத்தி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
- குமட்டல் மற்றும் வாந்தி.
- வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
- வாயுத்தொல்லை அல்லது அசிடிட்டி.
- வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளும் வரலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Jaggery Tea Benefits: டீயில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா?
மீந்த சாதத்தை என்ன செய்வது?

எஞ்சியிருக்கும் அரிசியை குளிர்சாதனப்பெட்டியில் சரியாக சேமித்து வைப்பதன் மூலம் நோய்களை தவிர்க்கலாம். நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் நேரம். நீங்கள் அரிசியை சரியான நேரத்தில் குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டும். அரிசி தயாரித்த பிறகு, அதை ஒரு கொள்கலனில் வைத்து 2 மணி நேரத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டும். இதன் மூலம் அரிசி கெட்டுப் போகாமல் காப்பாற்றலாம்.
Pic Courtesy: Freepik