
Mughlai Chicken Biryani In Tamil: நம்மில் பலருக்கு பிரியாணி என்ற பெயரை கேட்டதும் நாவில் எச்சில் ஊறும். ஏனென்றால், மக்களில் 90 சதவீதம் பிரியாணி பிரியர்கள் என்று கூறினால் அதில் எந்த சந்தேகமும் இல்லை. எப்பவும் மட்டன், சிக்கன், மீன் என ஒரே மாதிரியான பிரியாணி செய்து சலித்து போய்விட்டதா?
அப்போ இந்த முறை சிக்கனை வைத்து சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் முகலாய் சிக்கன் பிரியாணி செய்து கொடுங்கள். வீட்டில் உள்ளவர்கள் உங்க சமையல் திறமையை பார்த்து அசந்து போய்விடுவார்கள். வாருங்கள், குக்கரில் முகலாய் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Christmas Cake: கிறிஸ்மஸ் நெருங்கிடுச்சு.. வீட்டிலேயே எக்லஸ் டூட்டி ப்ரூட்டி கேக் செய்யலாமா?
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 2 கிலோ
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
தயிர் - 300 கிராம்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
தனிய தூள் - 3 தேக்கரண்டி
சீரக தூள் - 3 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 2
பச்சை ஏலக்காய் - 1
கருப்பு ஏலக்காய் - 1
ஜாதிபத்திரி - 1
அன்னாசி பூ - 2
மராத்தி மொக்கு - 1
ஷாஹி ஜீரா - சிறிது
பிரியாணி இலை - 2
எலுமிச்சைபழச்சாறு - 3 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 நறுக்கியது
பொரித்த வெங்காயம் - கால் கப்
புதினா இலை - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - ஒரு கொத்து
பிரெஷ் கிரீம் - 2 மேசைக்கரண்டி
குங்குமப்பூ பால் - 1 கப்
குங்குமப்பூ தண்ணீர் - 1 கப்
பாதாம் - 1/4 கப் நறுக்கியது
முந்திரி - 1/4 கப் நறுக்கியது
பிஸ்தா - 1/4 கப் நறுக்கியது
வெங்காயம் பொரித்த எண்ணெய்
நெய் - 200 கிராம்.
முகலாய் சிக்கன் பிரியாணி செய்முறை:
- முதலில், பாத்திரத்தில் சிக்கன், எலுமிச்சைபழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
- பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
- பிறகு பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், ஜாதிபத்திரி, அன்னாசி பூ, மராத்தி மொக்கு, ஷாஹி ஜீரா, பிரியாணி இலை சேர்த்து கலந்துகொள்ளவும்.
- பின்பு அதில் வெங்காயம் பொரித்த எண்ணெய், நெய், பச்சை மிளகாய், பொரித்த வெங்காயம், புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும்.
- பிறகு பிரெஷ் கிரீம், குங்குமப்பூ பால், நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்து கலந்து 2 மணிநேரம் ஊறவிடவும்.
- பின்பு பாஸ்மதி அரிசியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 மணிநேரம் ஊறவிடவும்.
- மற்றோரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை, ஷாஹி ஜீரா, கொத்தமல்லி இலை , புதினா இலை சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிடவும்.
- பின்பு ஊறவைத்த அரிசியை சேர்த்து, பிறகு உப்பு, எலுமிச்சைபழச்சாறு சேர்த்து கலந்துவிடவும்.
- அரிசி 60 சதவீதம் வெந்ததும் சிறிதளவு எடுத்து தனியாக வைக்கவும். மீதம் உள்ள அரிசியை 80 சதவீதம் வேகவிட்டு பின்பு வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
- தவாவில் அகலமான பாத்திரத்தை வைத்து அதில் நெய் மற்றும் வெங்காயம் பொரித்த எண்ணெய் ஊற்றவும்.
- பின்பு அடுப்பை அதிக தீயில் வைத்து ஊறவைத்த சிக்கனை சேர்த்து 3 நிமிடம் வேகவிடவும்.
- பிறகு 60 சதவீதம் வேகவைத்த அரிசியை சேர்த்து அதன் மேல் பொரித்த வெங்காயம், கொத்தமல்லி இலை, புதினா இலை, நெய், குங்குமப்பூ தண்ணீர் சேர்க்கவும்.
- பின்பு 80 சதவீதம் வேகவைத்த அரிசியை சேர்த்து அதன் மேல் பொரித்த வெங்காயம், கொத்தமல்லி இலை, புதினா இலை,
- நெய், குங்குமப்பூ தண்ணீர் சேர்க்கவும்.
- பிறகு பாயில் பேப்பரை வைத்து மூடி அதன் மேல் தட்டை வைத்து மூடி 45 நிமிடம் தம்மில் வேகவிட்டு எடுத்தால், அட்டகாசமான முகலாய் சிக்கன் பிரியாணி தயார்!
இந்த பதிவும் உதவலாம்: Christmas Cake: இந்த கிறிஸ்மஸ்கு எக்லஸ் மினி கிறிஸ்துமஸ் கேக் செய்யலாமா?
பிரியாணி சாப்பிடுவதன் நன்மைகள்:
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை
மஞ்சள், கருப்பு மிளகு, கிராம்பு, பூண்டு, இஞ்சி, குங்குமப்பூ போன்ற பல வகையான மசாலாப் பொருட்கள் பிரியாணியில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து மசாலாப் பொருட்களிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை நமது உள் உறுப்புகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
செரிமானத்திற்கு உதவுகிறது
பிரியாணி தயாரிக்கும் போது அதில் மஞ்சள் மற்றும் கருப்பட்டி பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் மற்றும் கருமிளகாயில் உள்ள கூறுகள் வாயு பிரச்சனையை குறைக்கும். மறுபுறம், இதில் இஞ்சி மற்றும் சீரகம் உள்ளது. இது இயற்கையான ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகிறது. இது உங்கள் உடலை நச்சுத்தன்மையாக்குகிறது. எனவே, இது செரிமான நொதிகளின் செயல்பாட்டை விரைவுபடுத்த உதவுகிறது.
வீக்கம் குறைக்க
பிரியாணியில் இருக்கும் சீரகம் மற்றும் மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு, கட்டி மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் நிறைந்துள்ளன. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. இந்த பண்புகள் காரணமாக, உங்கள் உடலில் வீக்கம் குறைகிறது. அதே சமயம் கல்லீரல் நொதிகளை அதிகரித்து உடலை நச்சுத்தன்மையாக்குவதில் குங்குமப்பூ பெரும் பங்கு வகிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகள் விரும்பும் சுவையான, ஹெல்த்தியான செவ்வாழை அம்மினி கொழுக்கட்டை! இப்படி செஞ்சி கொடுங்க!
வைட்டமின்கள் நிறைந்தவை
பிரியாணியில் வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு உள்ளது. இது உங்கள் உணவின் சுவையை மட்டும் அதிகரிக்காது. உண்மையில், இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அனைத்து மசாலாப் பொருட்களிலும் அல்லிசின், சல்பூரிக் கலவை, மாங்கனீசு, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி, தாமிரம் மற்றும் செலினியம் போன்ற பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.
கல்லீரலுக்கு நன்மை பயக்கும்
கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பிரியாணி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், பிரியாணியில் உள்ள அனைத்து மசாலாப் பொருட்களும் உடலில் குளுதாதயோனை (கல்லீரல் ஆக்ஸிஜனேற்றம் என்றும் அழைக்கப்படுகிறது) உற்பத்தி செய்கிறது. இது உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இது கல்லீரலை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது.
Pic Courtesy: Freepik
Read Next
குழந்தைகள் விரும்பும் சுவையான, ஹெல்த்தியான செவ்வாழை அம்மினி கொழுக்கட்டை! இப்படி செஞ்சி கொடுங்க!
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version