Doctor Verified

குளிர்காலத்தில் உங்க குழந்தை குறைவான அளவு தண்ணீர் தான் குடிக்கிறாங்களா? அதன் விளைவுகள் இதோ

குழந்தை போதுமான அளவு தண்ணீர் அருந்தவில்லை எனில், அவர்களின் உடலில் பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக, குளிர்காலத்தில் இது மிகவும் அவசியமாகும். இதில் குளிர்காலத்தில் குழந்தைகளுக்குப் போதுமான அளவு தண்ணீர் வழங்காததால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
குளிர்காலத்தில் உங்க குழந்தை குறைவான அளவு தண்ணீர் தான் குடிக்கிறாங்களா? அதன் விளைவுகள் இதோ

குளிர்காலம் அனைவருக்கும் நிம்மதியான, மகிழ்ச்சியான காலநிலையாக இருப்பினும், பல்வேறு உடல் உபாயங்களைச் சந்திக்கும் காலநிலையாக அமைகிறது. குளிர்காலத்தைப் பொறுத்தவரை, நாம் பலரும் உடல், மனம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றோம். குறிப்பாக, இந்த குளிர்ச்சியான காலநிலையில் நாம் தண்ணீர் குடிப்பதை மறந்து விடுகிறோம். குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் உடலுக்குப் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை மறந்து விடுகின்றனர். ஏனெனில் இந்த நாட்களில் அவர்களுக்கு தாகம் குறைவாக இருக்கும்.


முக்கியமான குறிப்புகள்:-


மேலும், குழந்தைகளும் குறைவான உடல் செயல்பாடுகளியே ஈடுபடுகின்றனர். இது உடலிலிருந்து வெளியேறும் வியர்வையைத் தடுக்கிறது. பொதுவாக, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது தாகத்தை அதிகரிக்கிறது. இது தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்க வைக்கிறது. ஆனால் பருவம் எதுவாக இருந்தாலும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இவ்வாறு குறைவான அளவு தண்ணீர் குடிப்பது ஏராளமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது குழந்தைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கலாம்.

இதில் குளிர்காலத்தில் குழந்தைகள் குறைவாக தண்ணீர் குடித்தால் அது உடலில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது குறித்து நொய்டா, கைலாஷ் மருத்துவமனையில் குழந்தை மருத்துவம், பிரிவு 27, சீனியர் ஆலோசகர், டாக்டர் அங்கூர் சாவ்லா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

குழந்தை போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்படும் பக்க விளைவுகள்

செரிமான பிரச்சனைகள்

உடலுக்குப் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை எனில், அது செரிமானப் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்பது முற்றிலும் உண்மை. பெரியவர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கும் செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஏனெனில், தண்ணீர் பற்றாக்குறை குழந்தைகளுக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். கடுமையான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு இரத்தக்களரி மலம் கழித்தல் போன்ற பிரச்சனைகள் கூட ஏற்படலாம்.

உடல் பிரச்சினைகள்

குளிர்காலத்தில் ஒரு குழந்தை நீண்ட நேரம் மிகக் குறைவாக தண்ணீர் குடிக்கும் போது, அது குழந்தையின் அறிவாற்றல் மற்றும் உடல் ரீதியான குறைபாட்டிற்கு வழிவகுக்கும். அதாவது, அவர்களுக்கு சோர்வு, பலவீனம், தலைவலி மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது அவர்களின் உடல் செயல்திறனை எதிர்மறையாக பாதிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Child Health: குழந்தைகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க எளிய வழிகள்!

மிகவும் தாகமாக ஏற்படும் போது

உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும்போது, குழந்தைகளுக்கு மிகுந்த தாகம் ஏற்படும். இந்நிலையில், சரியான நேரத்தில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால், அவர்களின் கண்களில் நீர் வடிந்து, கை, கால்கள் குளிர்ச்சியாகி, சருமம் வறண்டு போகும் நிலை ஏற்படலாம். இதனால் சில சமயங்களில், குழந்தைகளின் வாய் வறண்டு, உதடுகள் வெடித்துச் சிதறக்கூடும்.

குறைந்த சிறுநீர் கழித்தல்

உடலில் நீர்ச்சத்து இல்லாதபோது குழந்தை குறைவாக சிறுநீர் கழிக்கத் தொடங்குகிறது. மேலும் அவர்களின் சிறுநீரும் கருமையாகிறது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் சிறுநீரின் நிறம், அவர்களின் உடல்நலம் பற்றிய பல விஷயங்களை வெளிப்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதன்படி, குழந்தையின் சிறுநீர் மஞ்சள் நிறமாக இருந்தால், அது மற்ற நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, குழந்தை ஒருபோதும் நீரிழப்புக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், அவ்வப்போது அவர்களை நீரேற்றமாக வைத்திருப்பதும் அவசியமாகும்.

மனநிலை மாற்றங்கள்

ஒரு குழந்தை போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், அது அவர்களின் மனநிலையை எதிர்மறையாக பாதிக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், நீரிழப்பு அவர்களை எரிச்சலடையச் செய்வதுடன், கோபத்தைத் தூண்டுகிறது.

கடுமையான பிரச்சனைகள்

ஒரு குழந்தை நீண்ட காலமாக நீரிழப்புடன் இருந்தால், அதாவது அவர்களின் உடலில் போதுமான தண்ணீர் இல்லை என்றால், அது எலக்ட்ரோலைட் சமநிலையின்மை, வலிப்புத்தாக்கங்கள் மற்றும் மூளை பாதிப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

மருத்துவரிடம் எப்போது செல்ல வேண்டும்?

குழந்தை குறைவாக தண்ணீர் குடித்தால், உடல் நீரிழப்புடன் உள்ளது என்று அர்த்தம். எனவே, குழந்தைகள் குழப்பமாக இருப்பது, அதிகரித்த சுவாச விகிதம், 12 மணி நேரத்திற்கும் மேலாக சிறுநீர் கழிக்காமல் இருப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கவனித்தால், உடனடியாக குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்று கவனித்துக் கொள்வது முக்கியமாகும்.

முடிவு

இந்த தகவலின் படி, குளிர்காலமாக இருந்தாலும், கோடையாக இருந்தாலும், குழந்தைக்கு தினமும் போதுமான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், நீரிழப்பு ஒரு மோசமான விஷயமாகும். அதன் எதிர்மறை விளைவுகள் உடனடியாகத் தெரியாவிட்டாலும், அவை படிப்படியாக குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகளுக்கு Fatty Liver வருவதற்கு Junk Food மட்டும் தான் காரணமா.? வேறு காரணங்கள் இருக்கிறதா.? மருத்துவரிடம் இருந்து தெரிந்துக் கொள்ளுங்கள்..

Image Source: Freepik

Read Next

குழந்தைகளில் நிமோனியா: குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சிறந்த உணவுகள் – நோயெதிர்ப்பு சக்தி வளர்க்கும் உணவுப் பட்டியல்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 30, 2025 20:07 IST

    Published By : கௌதமி சுப்ரமணி