Is it safe to drink water after having fruits: பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவில் உள்ளது. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமாக இருக்க தங்கள் உணவில் பழங்களை கட்டாயம் சேர்க்க அறிவுறுத்துகின்றனர். தினமும் பழங்களை உண்பவர் மற்றவர்களை விட ஆரோக்கியமாக இருப்பதை நீங்களே பார்க்கலாம். பழங்கள் சாப்பிடுவதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். இது தவிர, பழங்களில் உள்ள பண்புகள் சிறந்த செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது.
இருப்பினும், பழங்களிலிருந்து ஊட்டச்சத்துகளைப் பெற, அவற்றை சரியான முறையில் சாப்பிட வேண்டியது அவசியம். பலர் பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பார்கள் அல்லது வேறு சில உணவுப் பொருட்களை சாப்பிடுவார்கள். பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று என்பது உங்களுக்கு தெரியுமா? பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கலாமா வேண்டாமா என்பதை பற்றி ஆரோக்கிய டயட் மற்றும் நியூட்ரிஷன் கிளினிக்கின் டயட்டீஷியன் டாக்டர் சுகீதா முத்ரேஜா கூறியது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம் : Fruits for diabetics: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழங்கள் என்னென்ன?
பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கலாமா?

இது குறித்து டாக்டர் சுகீதா முத்ரேஜா கூறுகையில், பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால், பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால், பழங்களில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் கிரகிக்க முடிவதில்லை.
பழங்கள் சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது?
பழ வகைகளை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால் அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். இதன் காரணமாக, பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடலால் முழுமையாக உறிஞ்ச முடியாது. பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது செரிமானத்தை கெடுக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Low Cholesterol Fruits: உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும் பழங்கள் என்னென்ன தெரியுமா?
பழங்களை சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்?

டாக்டர் சுகீதா முத்ரேஜாவின் கூற்றுப்படி, பழங்களை சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால், செரிமானம் சிறப்பாக இருக்கும். கூடுதலாக, உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடும். பழங்களை சாப்பிட்ட உடனேயே மற்ற உணவுகளை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
இருப்பினும், தாகம் எடுத்தால், சிறிது தண்ணீர் குடிக்கலாம். ஆனால், பழங்களை சாப்பிட்ட பிறகு குறைந்தது 45 நிமிடங்களாவது காத்திருந்து தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் காரணமாக, பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படுகின்றன.
Pic Courtesy: Freepik