Fri Sep 11, 2026 | 10:21 PM IST

நிறைய சாப்பிட்டு செரிமான பிரச்சனையா? டக்குனு சரியாக பெருங்காய தண்ணீரில் இந்த இரண்டு பொருள்களைச் சேர்த்து குடிங்க

Why should you add soaked chia seeds and black salt to hing water: பெருங்காய தண்ணீரில் ஊறவைத்த சியா விதைகள் மற்றும் கருப்பு உப்பு சேர்த்து குடிப்பது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் ஊறவைத்த சியா விதைகள், கருப்பு உப்பு சேர்த்த பெருங்காய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.

Asafoetida water with chia seeds and black salt benefits in tamil: அதிக உணவுக்குப் பிறகு வலி, வீக்கம் போன்ற செரிமான அசௌகரியத்தை பலரும் சந்திப்பர். இதிலிருந்து விடுபடவும், நச்சு நீக்கம் பெறவும் பலரும் போராடுகின்றனர். இதற்கு வீட்டிலேயே சிறந்த தீர்வைப் பெறலாம். அதன் படி, இதற்கு சிறந்த தீர்வாக கருப்பு உப்புடன் பெருங்காயம் (அசாஃபோடிடா) உட்கொள்வது வலி மற்றும் வீக்கத்தை திறம்பட சரிசெய்ய உதவுகிறது. ஆனால், இந்த சூடான நீரில் ஊறவைத்த சியா விதைகளைச் சேர்ப்பதும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். ஊறவைத்த சியாவிதை, கருப்பு உப்பு கலந்த பெருங்காய நீரை அருந்துவது பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது.

இந்த பானம் அருந்துவது செரிமான பண்புகளை அதிகரிக்கிறது. இதற்கு சியா விதைகளில் உள்ள அதிகளவு நார்ச்சத்துக்களே காரணமாகும். இவை மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. மேலும் சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து தண்ணீரை உறிஞ்சி விரிவடைந்து, ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த சியா விதைகளை பெருங்காயத்தின் ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் கார்மினேட்டிவ் பண்புகளுடன் இணைப்பது வயிற்று வலியை ஆற்றவும், அஜீரணம் அல்லது வாயுவைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் பெருங்காய நீருடன் கருப்பு உப்பு மற்றும் ஊறவைத்த சியா விதைகள் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: ஊற வைத்த சியா விதைகளை தினமும் சாப்பிடலாமா.? அப்படி என்ன இருக்கு இதுல.?

ஊறவைத்த சியா விதைகள், கருப்பு உப்பு கலந்த பெருங்காய நீரின் நன்மைகள்

எடை ஆரோக்கியத்திற்கு

பெருங்காய நீரில் சியா விதைகளைச் சேர்ப்பது எடை மேலாண்மைக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதற்கு சியா விதைகளில் நிறைந்த நார்ச்சத்துக்களே காரணமாகும். இவை வயிற்றில் விரிவடைந்து, நீண்ட நேரம் நிறைவாகவும், திருப்தியாகவும் உணர வைக்கிறது. மேலும் இது பகுதி கட்டுப்பாட்டை ஊக்குவிக்கவும், பசியின்மையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கூடுதலாக, பெருங்காயத்தின் செரிமான நன்மைகள் உணவு சரியாக உடைக்கப்படுவதை உறுதிசெய்கிறது. மேலும், இதில் ஊட்டச்சத்துக்கள் திறமையாக உறிஞ்சப்பட்டு வீக்கம் மற்றும் சில நேரங்களில் அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கும் அசௌகரியத்தைத் தடுக்கிறது.

உடலை நீரேற்றமாக வைப்பதற்கு

சியா விதைகளை ஊறவைப்பதால், அது அதிக அளவு தண்ணீரை உறிஞ்சி, நீரேற்றத்திற்கு உதவும் ஜெல் போன்ற நிலைத்தன்மையை உருவாக்குகிறது. இதை சூடான நீரின் கலவையில் சேர்க்கும் போது, செரிமான அமைப்பிலிருந்து நச்சுகளை வெளியேற்றும் அதே வேளையில் நீரேற்ற அளவை பராமரிக்க உதவுகிறது. செரிமான ஆரோக்கியத்திற்கு நீரேற்றம் மிகவும் முக்கியமாகும். மேலும் சியா விதைகள் உடல் நன்கு நீர்ச்சத்துடன் இருப்பதை உறுதிசெய்கிறது. இவை நச்சு நீக்க செயல்முறைக்கு உதவுகின்றன. மேலும் இந்த பானம் அருந்துவது கழிவுகளை அகற்றவும், ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த

கருப்பு உப்பு கலந்த பெருங்காய நீர் அருந்துவது சிறந்த குடல் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. கருப்பு உப்பு உட்கொள்வது செரிமான சாறுகளின் உற்பத்தியைத் தூண்டவும், உணவை உடைக்கவும் உதவுகிறது. மேலும், இது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும் திறனுக்காக நன்கு அறியப்படுகிறது. பெருங்காய நீரில் கருப்பு உப்பைச் சேர்ப்பது வயிற்றில் ஒரு கார சூழலை உருவாக்கி, அதிகப்படியான அமிலத்தன்மையை நடுநிலையாக்க உதவுகிறது. மேலும், இது pH அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. இந்த பெருங்காய நீரின் கலவையானது நெஞ்செரிச்சல் அல்லது அமில ரிஃப்ளக்ஸைக் குறைக்க உதவும் அதே வேளையில் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Black salt with warm water: வெதுவெதுப்பான நீரில் கருப்பு உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

வயிற்று அசௌகரியம் மற்றும் வாயுவை நீக்க

பெருங்காயம், கருப்பு உப்பு மற்றும் சியா விதைகள் கலந்த பானத்தை அருந்துவது வீக்கம், அசௌகரியம் மற்றும் வாயுவைக் குறைக்க உதவுகிறது. பெருங்காயம் உட்கொள்ளல் வாயுவை நீக்கவும், குடல் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. அதே சமயத்தில் சியா விதைகள் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. இதில் சேர்க்கப்படும் கருப்பு உப்பு எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்தவும், நீர் தேக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இது அடிக்கடி வீக்கம் அல்லது லேசான வயிற்றுப் பிடிப்பை அனுபவிப்பவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

வெதுவெதுப்பான நீரில் சியா விதைகள், கருப்பு உப்பு மற்றும் பெருங்காயத்தை சேர்த்து அருந்துவது செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கம், வாயு மற்றும் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது. இந்த எளிய பயனுள்ள பானமானது ஒட்டுமொத்த செரிமான செயல்பாட்டை மேம்படுத்தவும், ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கவும் உதவுகிறது. எடை மேலாண்மை, வயிற்று அசௌகரியம் போன்ற பிரச்சனைகளைத் தணிக்க இந்த பானம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: வெறும் வயிற்றில் பெருங்காய நீர் மட்டும் குடித்து பாருங்கள்! ஸ்லிம் உடல் உறுதி!

Image Source: Freepik

Read Next

Herbs to lower cholesterol: உடலில் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க இந்த பானத்தை குடித்தால் போதும்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content