இந்த ரீசனுக்காக நீங்க கண்டிப்பா குளிர்பானங்களைத் தவிர்க்கணும்!

  • SHARE
  • FOLLOW
இந்த ரீசனுக்காக நீங்க கண்டிப்பா குளிர்பானங்களைத் தவிர்க்கணும்!

இது தவிர, குளிர் பானங்களில் பெரும்பாலும் அதிகளவிலான சர்க்கரை, காஃபின், செயற்கை இனிப்புகள் மற்றும் ஒருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் மற்ற பிற சேர்க்கைகளைக் கொண்டுள்ளது. மேலும், பெரும்பாலான குளிர்பானங்களில் அதிகளவு சர்க்கரை இருப்பதால் இவை எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகலாம்.

இந்த பதிவும் உதவலாம்: 40 வயதைக் கடந்தும் எலும்பு இரும்பு போல இருக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்!

குளிர்பானங்களைத் தவிர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

எடை மேலாண்மை

குளிர்ந்த சர்க்கரை பானங்களை வழக்கமாக உட்கொள்வதன் காரணமாக எடை அதிகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்ற சிக்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக சோடாக்கள் போன்றவற்றில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது. எனவே இதை அதிகமாக உட்கொள்ளும் போது உடல் கொழுப்பு அதிகரிக்கலாம். ஆய்வில் சர்க்கரை கலந்த குளிர் பானங்களை எடுத்துக் கொள்வது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.

செரிமான ஆரோக்கிய மேம்பாட்டிற்கு

குளிர் பானங்கள் செரிமான ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிப்பதாகக் கூறப்படுகிறது. ஆராய்ச்சியின் படி, குளிர் பானங்கள் செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. ஆய்வு ஒன்றில் குளிர்ந்த வெப்பநிலை காரணமாக இரத்த நாளங்களை சுருக்கி, செரிமானத்தை பாதிக்கலாம். மேலும் இது அஜீரணம், வீக்கம், பிடிப்புகள் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது. இதற்கு நேர்மாறாக, அதாவது குளிர்ந்த பானங்களுக்குப் பதில் சூடான பானங்களை உட்கொள்ளல் இரைப்பை சுரப்புகளைத் தூண்டி, செரிமானப் பாதையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

தொண்டை மற்றும் சுவாச பிரச்சனைகள்

குளிர் பானங்களை உட்கொள்வது சுவாச பிரச்சனைகள் மற்றும் தொண்டை எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். குறிப்பாக, ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசக் கோளாறு பிரச்சனை உள்ளவர்களுக்கு குளிர் பானங்கள் அறிகுறிகளை மேலும் மோசமாக்கலாம். ஆய்வில் குளிர்ந்த வெப்பநிலையால் காற்றுப்பாதைகளின் சுருக்கத்தை ஏற்படும். இது அசௌகரியத்திற்கு வழிவகுக்கலாம். எனவே குளிர்பானங்களைத் தவிர்ப்பதன் மூலம் உணர்திறன் சுவாச அமைப்புகளைக் கொண்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை குடிப்பது ஆபத்தா?

சிறந்த நீரேற்றம்

குளிர் பானங்கள் புத்துணர்ச்சியைத் தரக்கூடியதாக இருந்தாலும், இவை நீரேற்றமாக இருக்க வைக்க பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. குளிர்ந்த திரவங்களுடன் ஒப்பிடுகையில், சூடான திரவங்களை மிகவும் திறமையாக உறிஞ்சுகிறது. ஆய்வு ஒன்றில் சூடான பானங்களை உட்கொள்வது, இரைப்பைக் குழாயில் சிறந்த நீர் உறிஞ்சுதலை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் நீரேற்றத்தை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு

குளிர்ந்த பானங்களை உட்கொள்வது நோயெதிர்ப்பு மண்டலத்தை மோசமாக பாதிக்கலாம். ஆய்வின் படி, குளிர் பானங்களை உட்கொள்ளல் உடலின் உள் வெப்பநிலையைக் குறைத்து நோயெதிர்ப்பு செயல்பாட்டை பாதிக்கலாம். மாற்றாக, சூடான பானங்கள் நோயெதிர்ப்பு உயிரணுக்களின் உற்பத்தி உட்பட, நிலையான பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் குளிர்ந்த பானங்கள் நோய்எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தலாம். இது நோய்த்தொற்று மற்றும் நோய்களால் எளிதில் பாதிக்கப்படலாம்.

இது போன்ற ஏராளமான நன்மைகளைப் பெறுவதற்கு ஒருவர் கட்டாயம் குளிர்பானத்தை தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Chia Seed Water Side Effects: தினமும் சியா விதை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன தெரியுமா?

Image Source: Freepik

Read Next

40 வயதைக் கடந்தும் எலும்பு இரும்பு போல இருக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்!

Disclaimer