Ways To Reduce Stress To Have a Healthier Life: இன்று பல்வேறு காரணங்களால் மனம் அமைதியின்றி வாழ்க்கையை போராடி வாழ்ந்து வருகின்றனர். அதிலும், நாளுக்கு நாள் எதாவதொரு விஷயங்களால் பயம் மற்றும் பதட்டத்தை சந்திக்கின்றனர். அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பெரும் அச்சம் நம் உடல், மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் நிலை ஏற்படலாம். இதனைக் கட்டுப்படுத்தவும், மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பீதி தினம் கொண்டாட உருவாக்கப்பட்டது.
இந்த பதிவும் உதவலாம்: Financial Stress Relax Tips: நிதி அழுத்ததால் மன அழுத்தமா.? எப்படி சமாளிப்பது?
முக்கிய கட்டுரைகள்
சர்வதேச பீதி தினம் 2024 (International Panic Day 2024):
நம் அன்றாட வாழ்வில் சிறிய மற்றும் பெரிய விஷயங்களிலிருந்து நாம் பெறும் அச்சத்திலிருந்து விடுபட, அமைதியாக மற்றும் ஓய்வெடுக்க இந்த தினம் வேடிக்கையான விடுமுறையாகக் கொண்டாட உருவாக்கப்பட்டது. எனினும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பெரும் அச்சம், பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்ற கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
இது தனிப்பட்ட மாற்றங்கள் முதல் தொழில்முறை காலக்கெடு வரை, உணர்ச்சி, அதிர்ச்சி என வாழ்க்கையில் எதிலிருந்தும் ஏற்படலாம். மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, பீதியை திறம்பட கையாள வேண்டும். எனவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 18 ஆம் நாள் சர்வதேச பீதி தினமாக அனுசரிக்கப்படுகிறது. எனினும், இதே நாளில் கொண்டாடப்படும் சர்வதேச பிக்னிக் தினத்துடன், சர்வதேச பீதி தினத்தை குழப்பிக் கொள்ளக் கூடாது.
ஆரோக்கியமாக வாழ மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?
சர்வதேச பீதி தினத்தை முன்னிட்டு, மன அழுத்தத்தை குறைக்கவும் பீதியை திறம்பட சமாளிக்கவும் உதவும் சில வழிகளைக் காணலாம்.
ஆழ்ந்த சுவாச பயிற்சி
பொதுவாக சுவாச பயிற்சி மேற்கொள்வது மனதை திறம்பட நடுநிலையில் வைக்க உதவுகிறது. மெதுவாக மற்றும் ஆழமாக சுவாசிக்கும் போது, நரம்பு மண்டலம் நிதானமாக மற்றும் பாதுகாப்பாக இருக்கத் தொடங்குகிறது. இது திறம்பட உடலில் பீதியைக் குறைத்து பாதுகாப்பாக மற்றும் மகிழ்ச்சியாக உணர வைக்கிறது. மேலும் ஆழ்ந்த சுவாச நுட்பங்களை நாம் ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்ய வேண்டும்.
ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குதல்
அதிக மன அழுத்த சூழ்நிலைகள், கடுமையான காலக்கெடு மற்றும் தினசரி வழக்கத்திற்கு ஆளாகும் போது, உடல் பீதி அடைவது இயற்கையானதாகும். இந்த சூழ்நிலையில் நம்மை புத்துணர்ச்சியாக இருக்க வைக்க சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும். இதற்கு தினமும் நாம் ஒரு பயணத்திற்கு செல்லலாம். இயற்கையை ரசிப்பது, இசை கேட்பது உள்ளிட்ட மனதிற்கு அமைதி தரக்கூடிய செயல்களில் நேரம் ஒதுக்கலாம். இதன் மூலம் ஒருவர் பெரும் அச்சத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Meditation For Anxiety: மன அழுத்தத்திலிருந்து சீக்கிரம் விடுபட இந்த ஒன்னு மட்டும் செய்யுங்க போதும்
மனதை பொறுமையாக வைத்தல்
நம் மனதில் பழைய, கசப்பான எண்ணங்கள் இருக்கும் போது, நம்மிடம் எதுவுமில்லை என்று உணரும் போது மனஅழுத்தம், பதட்டம் போன்றவை ஏற்படலாம். இந்த நேரத்தில் நாம் மையமாக இருக்க முயற்சிக்க வேண்டும். எனவே யோகா, தியானம் மற்றும் பிற நினைவாற்றல் நுட்பங்களைப் பயிற்சி செய்யலாம். இது மனதை பொறுமையாக, நிதானமாக மற்றும் அமைதியாகவும் உணர வைக்கிறது. இது பெரும் அச்சத்தை ஆரோக்கியமான முறையில் கையாள்வதற்கான வழிகளைக் கண்டறிய இது சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது.
தொழில்முறை உதவியை நாடுதல்
பீதி என்பது உடலின் மன அழுத்தத்தின் எதிர்வினையாகக் கருதப்படுகிறது. இது நரம்பு மண்டலம் அச்சுறுத்தலாக உணரும் போது ஏற்படுகிறது. இந்த பீதி மற்றும் மன அழுத்தத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதைப் புரிந்து கொள்ள தொழில்முறை உதவியை நாடலாம். இதன் மூலம் பீதியைக் குறைக்க முடியும்.
மக்களுடன் இணைந்திருப்பது
நம்மைச் சுற்றி நேர்மறையான நபர்கள் இருப்பது, நமக்குத் தானாகவே மகிழ்ச்சியைத் தருவதுடன், நேர்மறை எண்ணங்களும் வளர்கிறது. எனவே, நாம் நம்மை சூழ்ந்து கொள்ள விரும்புபவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் நம்மை வழிநடத்த அனுமதிக்கலாம். இது மன அமைதியைத் திறம்பட கையாள்வதுடன், வாழ்க்கையை மென்மேலும் உயர வைக்கும்.
இந்த வழிமுறைகளின் உதவியுடன் நாம் நம்முடைய பீதியை ஏற்படுத்தக்கூடிய மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றிலிருந்து விடுபட்டு, அமைதியான வாழ்க்கையைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mental Health: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கண்டிப்பா மனநல மருத்துவரை சந்திக்கனும்!
Image Source: Freepik