Doctor Verified

இந்த உணவு பழக்கங்களை நீங்க கட்டாயம் தவிர்க்கணும்.. இல்லைனா உங்க இதய ஆரோக்கியம் பாதிப்படையும்

நம் இந்திய உணவுப்பழக்கங்கள் பெரும்பாலும் நமது ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவ்வாறே, இவை இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. இதில் எந்தெந்த இந்திய உணவுப்பழக்கங்கள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இந்த உணவு பழக்கங்களை நீங்க கட்டாயம் தவிர்க்கணும்.. இல்லைனா உங்க இதய ஆரோக்கியம் பாதிப்படையும்

அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்கும் சில உணவுப்பழக்கங்கள் இதய நோய் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கலாம். குறிப்பாக, டிரான்ஸ் கொழுப்புகள், அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்புகள், சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் சோடியம் போன்ற மோசமான உணவுத் தேர்வுகள் உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்தம், உயர்ந்த கொழுப்பு அளவுகளுக்கு வழிவகுக்கலாம். இவை அனைத்துமே இருதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இது தவிர, தொடர்ந்து உணவைத் தவிர்ப்பது அல்லது அதிகமாக சாப்பிடுவது போன்றவையும் வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கிறது.


முக்கியமான குறிப்புகள்:-


பெரும்பாலும், இந்த பழக்கங்கள் மெதுவாக வளர்ந்து, கடுமையான இதயப் பிரச்சினைகளுக்கு பங்களிக்கும் வரை கவனிக்கப்படாமல் விட்டுவிடுகிறோம். எனவே, இதை கவனிப்பது அவசியமாகும். குறிப்பாக, இளம் வயதிலேயே குழந்தைகள் கூட இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு அபாயத்தில் உள்ளனர். எனவே தான், இதய நோய்க்கான மிகப்பெரிய காரணங்கள் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையாகக் கருதப்படுகிறது.

இதில் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் உணவுப்பழக்கங்களின் பட்டியல் குறித்து ஜெய்ப்பூரில் உள்ள நாராயண மருத்துவமனையின் கூடுதல் இயக்குநர் - இருதயநோய் நிபுணர் டாக்டர் அன்ஷு கப்ரா அவர்கள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் இந்திய உணவுப்பழக்கங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் இந்திய உணவுப் பழக்கங்கள்

இதயநோய் நிபுணர் டாக்டர் அன்ஷு கப்ராவின் கூற்றுப்படி, சில இந்திய உணவுப் பழக்கங்கள் பொதுவானதாக இருக்கலாம். ஆனால் அவை இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கூறுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: கொழுப்புகள் நல்லதா? கெட்டதா? உணவு சமைக்க எந்த எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்? டாக்டர் பால் பரிந்துரை

அதிக உப்பு மற்றும் மசாலாப் பொருட்களை உட்கொள்வது

இந்திய உணவில் உப்பு ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஊறுகாய், பப்பட், நம்கீன் மற்றும் சாட் போன்ற பொருட்களில் அதிக அளவு உப்பு உள்ளது. ஒரு நபர் ஒரு நாளைக்கு ஐந்து கிராமுக்கு மேல் உப்பு உட்கொள்ளக்கூடாது என்று WHO பரிந்துரைக்கிறது. ஆனால் இந்தியாவில் சராசரி உப்பு நுகர்வு அதை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவே, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கு பங்களிக்கிறது.

இனிப்புகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்

பண்டிகைகள் மட்டுமல்லாமல் பல்வேறு நேரங்களில் இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் ரசகுல்லா, குலாப் ஜாமூன், ஜிலேபி மற்றும் லட்டு போன்ற இனிப்புகளில் சர்க்கரை மற்றும் நெய் போன்றவை அதிகம் உள்ளது. அதே சமயம், இன்னும் பல இனிப்புகள் வெள்ளை அரிசி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக, இந்த வகை இனிப்புகள் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். இவையே நீரிழிவு பிரச்சனை, இதய நோய் அபாயம் போன்றவை அதிகரிக்க காரணமாக அமைகிறது. மேலும் இது இதய நோயாளிகளின் நிலையை மோசமாக்கலாம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.

துரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு சிறிய, பெரிய நகரங்களிலுமே துரித உணவு மற்றும் தொகுக்கப்பட்ட சிற்றுண்டிகளை உட்கொள்வது அதிகரித்து வருகிறது. அதன் படி, பர்கர்கள், பீட்சா, சிப்ஸ் மற்றும் சோடா போன்ற உணவுகளில் கலோரிகள், உப்பு மற்றும் சர்க்கரை அதிகளவில் உள்ளன. அதே நேரத்தில் இதில் ஊட்டச்சத்து குறைவாக உள்ளது. எனவே, இந்த உணவுகளை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. இது இதய நோய் அபாயத்திற்கு பங்களிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: இதய நோயாளிகள் கொய்யா சாப்பிடலாமா? நிபுணர் கூறும் அதிர்ச்சியான உண்மைகள்!

எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகள்

சமோசா, உருண்டைகள் மற்றும் பூரி போன்ற வறுத்த உணவுகள் பல நூற்றாண்டுகளாக மக்கள் விரும்பு சாப்பிடக்கூடியவையாகும். இருப்பினும், இந்த உணவுகளில் அதிகளவு எண்ணெய் மற்றும் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது. இது இதயத்தின் தமனிகளில் அடைப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்நிலையில், வறுத்த உணவுகளை அடிக்கடி உட்கொள்வது, கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிப்பதுடன், நல்ல கொழுப்பின் அளவைக் குறைப்பதால் இது மாரடைப்பை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கிறது.

நெய் மற்றும் வெண்ணெய் அதிகமாகப் பயன்படுத்துதல்

இந்திய உணவு வகைகளில் பெரும்பாலும் நெய் மற்றும் வெண்ணெய் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. நெய் மற்றும் வெண்ணெய் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், ஆற்றல் தருவதாகவும் கருதப்படுகிறது. எனினும், உணவியல் நிபுணர்கள் அதிகப்படியான நுகர்வு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கூறுகின்றனர்.

இதய நோய்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்

இருதயநோய் நிபுணர் டாக்டர் அன்ஷு கப்ரா அவர்களின் கூற்றுப்படி,"நம் நாட்டில் பிரச்சனை என்னவெனில், பாரம்பரிய மற்றும் நவீன உணவுப் பழக்கங்களை மக்கள் பின்பற்றுவது தான். பொதுவாக, நெய் மற்றும் வறுத்த உணவுகள் தீங்கு விளைவிக்கும் அதே வேளையில், பதப்படுத்தப்பட்ட மற்றும் குப்பை உணவுப் பழக்கங்களும் உடல்நல அபாயங்களை அதிகரித்து வருகின்றன" என்று கூறுகிறார். எனவே, நோய்களைத் தடுக்க சில நடவடிக்கைகளை முயற்சிக்க வேண்டும்.

  • உங்கள் உணவில் எண்ணெய் மற்றும் நெய்யின் அளவைக் குறைக்க வேண்டும்
  • உங்கள் உணவில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்க வேண்டும்
  • உப்பு மற்றும் சர்க்கரையை மிதமாகப் பயன்படுத்தலாம்
  • பதப்படுத்தப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • தவறாமல் உடற்பயிற்சி செய்து அவ்வப்போது உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

முடிவுரை

இந்திய உணவு வகைகள் சுவை நிறைந்தவையாக இருப்பினும், ஆரோக்கியமற்றதாகவும் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை. எனவே, உணவின் தரம் மற்றும் அளவு குறித்து கவனம் செலுத்தத் தவறுவது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, இதயப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு, இந்தப் பழக்கங்களை மாற்ற முயற்சிக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: இதயம் பலமாக இருக்க வேண்டுமா.? இந்த உணவுகள் தான் சிறந்த மருந்து.. டாக்டர் சிவராமன்  பரிந்துரை..

Image Source: Freepik

Read Next

முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்குமா? – இதய நிபுணர் விளக்கம்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 16, 2025 20:02 IST

    Published By : கௌதமி சுப்ரமணி