Chettinad Rangoon Puttu In Tamil: புட்டு என்பது ஒரு பாரம்பரிய தென்னிந்திய காலை உணவு. இது அரிசி மாவை ஆவியில் பிசைந்து, தேங்காயுடன் சேர்த்துப் பரிமாறப்படும். இதனுடன் இனிப்பு அல்லது காரமான சைடிஷ்ஷும் சேர்த்துப் பரிமாறலாம். ஆனால், நாம் பொதுவாக அரிசி மாவு புட்டு சாப்பிட்டிருப்போம். எப்போதாவது செட்டிநாடு ரங்கூன் புட்டு பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம் சரியாகத்தான் படித்தீர்கள். பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட செட்டிநாடு ரங்கூன் புட்டு செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
வெல்லம் - 1 கப் (250 மி.லி கப்)
தண்ணீர் - 3 கப் (250 மி.லி கப்)
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
நெய் - சிறிது
முந்திரி - 10
திராட்சை - 8
செட்டிநாடு ரங்கூன் புட்டு செய்முறை:
- ஒரு பானில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை வறுத்து கொள்ளவும்.
- அதே பானில் நெய் சேர்த்து துருவிய தேங்காயை வறுத்து கொள்ளவும்.
- ஒரு சாஸ் பானில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரையும் வரை கொதிக்கவிடவும்.
- அடுத்து ஒரு கடாயில் நெய் சேர்த்து ரவையை நன்கு வறுக்கவும்.
- பின்பு கரைத்த வெல்லத்தை சேர்த்து கலந்து விடவும். சிறிது நேரம் கழித்து ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை மற்றும் வறுத்த தேங்காய் சேர்த்து கலந்து விடவும்.
- பிறகு நெய் சேர்த்து கலந்து விட்டு கடையை மூடி 5 நிமிடம் வேகவிட்டால், அருமையான செட்டிநாடு ரங்கூன் புட்டு தயார்!
இந்த பதிவும் உதவலாம்: Curd Rice: வெயிலில் வாரத்திற்கு 3 நாள் மதிய உணவாக தயிர் சாதம் சாப்பிட்டால் இவ்வளவு நடக்குமா?
ரங்கூன் புட்டுவின் குறிப்பிட்ட நன்மைகள்:
சத்துக்கள் நிறைந்தது: ராகி புட்டு கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்களின் நல்ல மூலமாகும். இது எலும்பு ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் பங்களிக்கிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது: ராகியில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
எடை மேலாண்மைக்கு உதவுகிறது: ராகியில் உள்ள நார்ச்சத்து உங்களை முழுமையாகவும் திருப்தியாகவும் உணர உதவும். இது எடை இழப்புக்கு உதவும்.
குறைந்த கிளைசெமிக் குறியீடு: ராகி புட்டு குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதாவது, இது இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகிறது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: வெயிலுக்கு இதமான கம்மங்கூழ்.. வீட்டிலேயே சிம்பிளா இப்படி செஞ்சி குடிச்சா ஏராளாமான நன்மைகளைப் பெறலாம்
பசையம் இல்லாதது: ராகி இயற்கையாகவே பசையம் இல்லாதது, பசையம் உணர்திறன் அல்லது செலியாக் நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது.
ஆற்றல் மூலம்: ராகி அதன் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் இரும்புச்சத்து காரணமாக நீடித்த ஆற்றலை வழங்குகிறது.
Pic Courtesy: Freepik
Read Next
Wow.. சப்பாத்திக்கள்ளி பழம்.. ருசியில் மட்டுமல்ல.. ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.! நன்மைகள் இங்கே..
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version