Mulethi Benefits: சளி, இருமல் காணாமல் போக அதிமதுரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க.

  • SHARE
  • FOLLOW
Mulethi Benefits: சளி, இருமல் காணாமல் போக அதிமதுரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க.


இதற்கு சில வீட்டு வைத்திய முறைகளும் உள்ளன. அதன் படி, சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் தருவதற்கு சிறந்த தேர்வாக அதிமதுரம் உதவுகிறது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நோய்த்தொற்றுக்களைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ayurveda Diet For Monsoon: மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

சளி மற்றும் இருமலுக்கு அதிமதுரம் தரும் நன்மைகள்

பொதுவாக, அதிமதுரம் ஒரு இயற்கையான மருத்துவ மூலிகையாகும். இது ஆயுர்வேதத்தில் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைத் தீர்க்க பயன்படுத்தப்படுகிறது. இது சளி, இருமல், தொண்டைவலி உள்ளிட்ட பிரச்சனைகளை நீக்கும். இது மட்டுமல்லாமல், தொண்டையில் டான்சில் உருவாகியிருப்பின், இதனைத் தீர்க்கவும் அதிமதுரம் உதவுகிறது. மேலும் சுவாசம், செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கவும் இது உதவுகிறது.

அதிமதுரம் ஊட்டச்சத்துகள்

அதிமதுரத்தில் ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை நிறைந்துள்ளன. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், பல்வேறு வகையான பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவுகிறது. இந்நிலையில், அதிமதுரம் பயன்படுத்துவது நோய்கள், தொற்றுக்களை குணமாக்கலாம். மாறிவரும் இந்த காலகட்டத்தில் அதிமதுரத்தை காலையிலும், மாலையிலும் எடுத்துக் கொண்டால் சளி விரைவில் குணமாகும். மேலும், முலேத்தி பாக்டீரியா, வைரஸ்கள அழித்து தொண்டை வீக்கத்தைக் குறைக்கிறது. இதுமட்டுமல்லாமல், இவை வயிற்றுக்கு நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Menstruation Ayurvedic Tips: மாதவிடாய் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் சில ஆயுர்வேத முறைகள்

சளி மற்றும் இருமலுக்கு அதிமதுரம் சாப்பிடுவது எப்படி?

சளி, இருமல் மற்றும் தொண்டை வலி நீங்க,அதிமதுரத்தை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

அதிமதுர நீர்

அதிமதுர வேரை ஒரு கிளாஸ் தண்ணீரில் முந்தைய நாள் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். பின் காலையில் எழுந்தபின், இந்த தண்ணீரைக் குடிக்கலாம். இது இருமல் மற்றும் சளியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Herbal Drinks: சமையலறை பொருட்கள் மூலமே மூலிகை பானம் தயாரிக்கலாம்.. நன்மைகள் தெரியுமா?

முலேத்தி டீ

சளி, இருமலுக்கு சூடாக குடிக்க விரும்பினால், இந்த அதிமதுர டீயை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முலேத்தி வேரை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்க்கவும். பின் இதை கொதிக்க வைத்து, தண்ணீரை வடிகட்டி குடிக்கலாம்.

அதிமதுர பொடி

ஒரு கிளாஸ் தண்ணீரில் அதிமதுர பொடி சேர்த்து பருகலாம். விரும்பினால், இந்த தண்ணீரில் தேனையும் சேர்க்கலாம்.

இருமல், சளி உள்ளவர்கள் அதிமதுரத்தை பயன்படுத்துவது மிகுந்த நன்மை அளிக்கிறது. மேலும், இது தொண்டையில் தேங்கியிருக்கும் சளியை எளிதில் அகற்றுவதாகவும் அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Amla With Honey Benefits: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் உடன் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இது தான்

Image Source: Freepik

Read Next

Winter Health Tips: குளிர்காலத்திலும் ஆக்டிவாக இருக்க இதை குடித்தால் போதும்!

Disclaimer