Doctor Verified

நீங்க சாப்பிடும் இந்த உணவுகள் நல்லதுதான்.. ஆனா சாப்பிடும் நேரம் தவறு! ஆயுர்வேதம் சொல்லும் இரகசியம்..

உணவு சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும், அதை சரியான நேரத்தில் உட்கொள்வது நல்லது அவசியமாகக் கருதப்படுகிறது. ஆனால் இதை தவறான நேரத்தில் சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இதில் தவறான நேரத்தில் என்ன உணவுகளை சாப்பிடுகிறோம் என்பது குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
நீங்க சாப்பிடும் இந்த உணவுகள் நல்லதுதான்.. ஆனா சாப்பிடும் நேரம் தவறு! ஆயுர்வேதம் சொல்லும் இரகசியம்..


அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை உட்கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. நாம் எவ்வளவு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்கிறோமோ, அதே சமயம், அதற்கான நேரத்தைத் தெரிந்து கொள்வதும் அவசியமாகக் கருதப்படுகிறது. பொதுவாக, நாம் மருத்துவர்களிடமோ அல்லது சுகாதார நிபுணர்களிடமோ செல்லும் போதெல்லாம், அவர்கள் எப்போதும் நம்மை நன்றாக சாப்பிடவும், சமச்சீரான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளவும் பரிந்துரைக்கின்றனர். ஆனால், ஆயுர்வேதத்தில் சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

அதே சமயம், உணவு சீரானதாகவும் சத்தானதாகவும் இருக்க வேண்டும். ஆயுர்வேதத்தின் படி, சரியான உணவை உட்கொண்டால் மட்டும் போதாது. உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்கவும், உணவின் முழுப் பலனையும் பெற சரியான நேரத்தில் உணவை உண்பதும் மிகவும் முக்கியமாகும். சரியான உணவை நாம் சாப்பிடுவதாக இருந்தாலும், எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காலை முதல் இரவு உணவு வரை உணவு உண்பதற்கு சில விதிகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. அதை நாம் பின்பற்ற வேண்டும்.

அவ்வாறு நாம் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமான உணவுகளைத் தவறான நேரத்தில் சாப்பிடுவது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதில் எந்தெந்த ஆரோக்கியமான உணவுகளைத் தவறான நேரத்தில் சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து தி ஆயுர்வேதிக் இன்ஸ்டிடியூட் நிறுவனர் மருத்துவர் வசந்த் லாட் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: After Dinner Habits: உடல் எடை சரசரவென குறைய இரவு உணவுக்கு பின் இந்த 5 விஷயம் செய்தாலே போதும்!

நிபுணரின் கருத்து

நிபுணரின் கூற்றுப்படி, “உணவு மருந்து மற்றும் விஷம் இரண்டும் என்று ஆயுர்வேதம் நமக்குக் கற்பிக்கிறது - இவை அனைத்தும் நாம் அதை எப்படி, எப்போது எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது” என்று குறிப்பிட்டுள்ளார். இதில் மிகவும் ஆரோக்கியமான உணவுகள் கூட தவறான நேரத்தில் சாப்பிட்டால் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தலாம்.

தவறான நேரத்தில் உணவு உட்கொள்வதன் தீமைகள்

வாழைப்பழங்கள்

இது கனமான மற்றும் குளிர்ச்சியான குணங்களைக் கொண்டதாகும். இதை பலரும் காலை நேரத்தில் எடுத்துக் கொள்ள விரும்புவர். ஆனால், இது காலையில் முதலில் ஜீரணிக்க கடினமாக இருக்கும். அக்னி (செரிமான நெருப்பு) வலுவாக இருக்கும் மதியமே சிறந்த நேரமாகும். எனவே வாழைப்பழங்களை காலையில் சாப்பிடுவதைத் தவிர்க்க மருத்துவர் பரிந்துரைக்கிறார்.

காபி

கார்டிசோல் இயற்கையாகவே விழித்தெழுந்தவுடன் உயர்கிறது. இந்நிலையில், காலையில் காபியை மிக விரைவாக குடிப்பது வாத மற்றும் பித்தத்தை அதிகமாகத் தூண்டுகிறது. இந்நிலையில், 30-60 நிமிடங்கள் காத்திருப்பது சமநிலையை ஆதரிக்கிறது. எனவே காலை எழுந்ததும் காபி குடிப்பதைத் தவிர்க்க மருத்துவர் பரிந்துரைக்கிறார்.

தயிர்

தயிர் உட்கொள்வது குடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். அதே சமயம், தயிரானது குளிர்ச்சியான மற்றும் புளித்த குணங்கள் நிறைந்ததாகும். இந்த பண்புகள் நிறைந்த தயிரை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் செரிமானம் பலவீனமடையக்கூடும். மேலும் உணவுகள் சிறப்பாக அனுபவிக்கப்படுகிறது. செரிமானக் கோளாறுகளைத் தவிர்க்க, தயிரை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட தவிர்க்க மருத்துவர் பரிந்துரைக்கிறார்.

இந்த பதிவும் உதவலாம்: உணவுக்கு முன் சாலட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

சிவப்பு இறைச்சி & சீஸ்

அடர்த்தியான மற்றும் அரைக்கும் உணவுகளை உட்கொள்ள வலுவான செரிமான நெருப்பு தேவைப்படுகிறது. எனவே, இதை உட்கொள்வதற்கு சூரிய வெளிச்சத்தில் குறிப்பாக, அக்னி உச்சத்தில் இருக்கும் போது மதியமே சிறந்ததாகும். ஆனால், இதை இரவு நேரத்தில் உட்கொள்வது, கனத்தை ஏற்படுத்தி, கபத்தைத் தொந்தரவு செய்யலாம்.

View this post on Instagram

A post shared by Vasant Lad (@drvasantlad)

மருத்துவரின் கூற்றுப்படி, “ஆயுர்வேதத்தில் நேரத்தையும், உணவைப் போலவே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும், இயற்கையின் தாளங்களுக்கு ஏற்ப உணவை சீரமைப்பதன் மூலம், தினசரி உணவை நல்லிணக்கம் மற்றும் குணப்படுத்தும் நடைமுறையாக மாற்றுகிறோம்” என்று குறிப்பிடுகிறார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் காலையில் இத்தனை மணிக்கா சாப்பிடுறீங்க.. ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் தகவல்! மருத்துவர் விளக்கம்

Image Source: Freepik

Read Next

உடலில் நீர்த்தேக்கம் எதனால் ஏற்படுகிறது தெரியுமா? அதை உடனே நிறுத்த உதவும் ஆயுர்வேத வழிகள் இதோ.. மருத்துவரின் விளக்கம்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Oct 04, 2025 23:37 IST

    Modified By : கௌதமி சுப்ரமணி
  • Oct 04, 2025 23:37 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

குறிச்சொற்கள்