Sat Sep 12, 2026 | 12:46 AM IST

Flesh Eating Bacteria: வெறும் இரண்டே நாள்களில் உயிரைக் குடிக்கும் அரியவகை தொற்றின் அறிகுறிகள் இதோ! எப்படி தடுப்பது?

What Is Flesh Eating Bacteria And Its Symptoms: கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் உலகளவில் அதன் தாக்கம் பெருமளவு என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்தில் பல்வேறு நாடுகளில் பரவிய இந்த வைரஸின் உருமாற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தும் குறைந்தும் வந்தது. ஆனால், தற்போது புதிய வகை அரிதான பாக்டீரியா ஒன்று ஜப்பானில் பரவி வருவதாகவும், இது இரண்டே நாள்களில் மரணத்தை ஏற்படுத்தலாம் என்ற தகவல்கள் வைரலாகி மக்களிடையே பீதியைக் கிளப்புகின்றனர்.

ஆம். தற்போது அரிதான மனித சதை உண்ணும் பாக்டீரியா தொற்று நிகழ்வுகள் ஜப்பானில் அதிகரித்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் அதாவது Streptococcal Toxic Shock Syndrome (STSS) என்று அழைக்கப்படுகிறது. இந்த சின்ட்ரோம் குழு A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (GAS) பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு கடுமையான நோயாகும். இந்த பயங்கரமான நோய் தொற்று ஏற்பட்ட 48 மணி நேரத்திற்குள் உயிரைக் கொல்லும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Adah Sharma Endometriosis: பிரபல நடிகைக்கு வந்த அரிய வகை நோய்! நோய்க்கான அறிகுறிகளும், சவால்களும்!

உலகளவில் அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல் உலகளவில் இருந்த நிலையில் தற்போது ஜப்பான் முழுவதும் 1000-க்கும் மேற்பட்டோர் இந்த கொடிய தொற்றுக்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. . இந்த சதை உண்ணும் பாக்டீரியா ஆனது திசு அழிவு மற்றும் விரைவான உறுப்பு செயலிழப்பை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. ஜப்பானில் காணப்படும் இதன் கட்டுப்பாடற்ற பரவல் காரணமாக உலக மருத்துவ சமூகங்களுக்குள் எச்சரிக்கையாக அமைகிறது.

தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் (National Institute of Infectious Diseases) இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதிக்குள் ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் அதிகரித்து 977 வழக்குகளை எட்டியுள்ளதாகவும், இது ஏற்கனவே கடந்த ஆண்டு மொத்தமான வழக்குகளை (941 வழக்குகள்) விட அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

STSS அறிகுறிகள் (Flesh Eating Bacteria Symptoms)

குழந்தைகளில் இந்த நோயின் பொதுவான அறிகுறிகளாக வீக்கம் மற்றும் தொண்டை புண் ஏற்படலாம். இது தொண்டை அழற்சி (Strep Throat) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் ஆரம்ப அறிகுறிகளாக காய்ச்சல், கை மற்றும் கால்களில் வலி, குறைந்த இரத்த அழுத்தம், சூடான மற்றும் சிவப்பு தோல், தோலில் வீக்கத்துடன் சிவத்தல் போன்றவை ஏற்படலாம். இதன் பிந்தைய நிலைகளின் அறிகுறிகளாக தோல் நிறத்தில் மாற்றம், தோலில் கொப்புளங்கள் உருவாகுதல், நோய்த்தொற்றுக்கு உள்ளாகுதல், பலவீனம், குமட்டல், சுவாசிப்பதில் சிரமம், திசுக்களின் இறப்பு, உறுப்பு செயலிழப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

மேலும் இந்த தொற்று மிக வேகமாக பரவக்கூடிய தொற்றுநோய் ஆகும். இது பாதங்களிலிருந்து முழங்கால் வரை பரவுவதற்கு சில மணிநேரங்கள் எடுக்கும். சரியான சிகிச்சை மேற்கொள்ளப்படாவிட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் மரணத்தை ஏற்படுத்தலாம். அதே சமயம், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படலாம். அதன் படி, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோமால் அதிகம் பாதிப்படைகின்றனர். இந்த தொற்று ஒரு நபருக்கு அதிக நேரம் கொடுக்காது. எனவே, இதன் அறிகுறிகள் தோன்றிய உடனே மருத்துவரைத் தொடர்பு கொள்வது மிக முக்கியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: After Bath Mistakes: குளித்த உடனே இதை செய்தால் பெரிய பெரிய பாதிப்புகள் வரும்.. ரெடியா இருங்க!

எப்படி பாதுகாத்துக் கொள்வது?

இந்த STSS சின்ட்ரோம் ஆனது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோயாகும். எனவே, இந்த நோயைத் தடுக்க, சுகாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

  • வெளியில் சென்று வந்த பிறகு, குறைந்த 2 நிமிடங்களுக்கு கை, கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
  • அழுக்குக் கைகளால் கண்கள், மூக்கு, வாய் போன்றவற்றைத் தொடுதலைத் தவிர்க்க வேண்டும்.
  • உணவு தயாரிப்பதற்கு முன்பும், சாப்பிடுவதற்கு முன்பும் கைகளைக் கழுவுவது அவசியமாகும்.
  • தோலில் ஏதேனும் காயம் இருப்பின், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
  • அதே போல, மேற்கூரிய STSS அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த வகை அச்சுறுத்தல்களை முடிந்த வரை தவிர்க்கவும், எந்தவித நோய்த்தொற்றுக்களிலிருந்து நம்மை பாதுகாக்கவும் ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையைக் கையாள வேண்டியது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Bird Flu: பரவி வரும் பறவைக் காய்ச்சலுக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்

Image Source: Freepik

Read Next

Acoustic Neuroma: திடீர் காது கேளாமை மூளைக் கட்டியின் அறிகுறியா? நிபுணர்கள் கூறுவது இங்கே!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content