Doctor Verified

பல பேர் உயிரிழப்புக்கு காரணமாகும் மூளை உண்ணும் அமீபா.! அப்படி என்ன செய்யும் இது.. மருத்துவர் விளக்கம்..

மூளை உண்ணும் அமீபா (Naegleria fowleri) காரணமாக பல மரணங்கள். குளம், ஏரி, நீச்சல் குளங்களில் இருந்து பரவும் இந்த உயிரினம் எப்படி மூளைக்குள் சென்று உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறது. தடுப்பு முறை குறித்து மருத்துவர் விளக்கம். 
  • SHARE
  • FOLLOW
பல பேர் உயிரிழப்புக்கு காரணமாகும் மூளை உண்ணும் அமீபா.! அப்படி என்ன செய்யும் இது.. மருத்துவர் விளக்கம்..


சில நோய்கள் உலகம் முழுவதும் அரிதாகவே காணப்பட்டாலும், ஒருமுறை தாக்கினால் உயிரை எடுக்கும் அளவுக்கு ஆபத்தை உண்டாக்குகின்றன. அதில் ஒன்று தான் மூளை உண்ணும் அமீபா (Brain Eating Amoeba) எனப்படும் Naegleria fowleri.

இந்த அரிய அமீபா சமீபத்திய நாட்களில் கேரளா மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு மற்றும் 7-க்கும் மேற்பட்டோர் மரணம் ஆகியவற்றுக்கு காரணமாகியுள்ளது. இதுபற்றி ரேடியாலஜிஸ்ட் டாக்டர் முபாரக் விளக்கமளித்துள்ளார்.

மூளை உண்ணும் அமீபா என்றால் என்ன?

Naegleria fowleri என்பது நீரில் வாழும் ஒரு சிறிய உயிரி. பொதுவாகக் குளம், ஏரி, ஆறு, நீச்சல் குளம் போன்ற இடங்களில் காணப்படும். இது சாதாரணமாக தோல் வழியாக உடலில் நுழையாது, ஆனால் மூக்கின் வழியாக நுழைந்து நேராக மூளைக்குச் செல்லும்.

அங்கே சென்றவுடன், இந்த அமீபா மூளையில் தொற்று ஏற்படுத்தி, Primary Amoebic Meningoencephalitis (PAM) எனப்படும் மூளை காய்ச்சலை உண்டாக்குகிறது.

artical  - 2025-09-10T140733.363

மூளை உண்ணும் அமீபாவின் தாக்கம்

டாக்டர் முபாரக் கூறுகையில், “நீரில் குளிக்கும்போது அல்லது விளையாடும்போது, அமீபா மூக்கின் வழியாக நுழைந்தால், சில நாட்களில் காய்ச்சல் தொடங்கும். அதன்பின் வாந்தி, வலிப்புத்தாக்கங்கள், மயக்கம், கோமா போன்ற அறிகுறிகள் ஏற்படும். ஒருமுறை இது மூளையை அடைந்துவிட்டால், உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. அதனால் தான் இந்த அமீபாவை “மூளை உண்ணும் அமீபா” என்றார்.

அறிகுறிகள்

* திடீர் காய்ச்சல்

* தலைவலி

* வாந்தி மற்றும் வாந்தியுணர்வு

* வலிப்புத்தாக்கங்கள்

* நினைவாற்றல் குறைவு

* மயக்கம் / கோமா

இந்த பதிவும் உதவலாம்: இத சாப்பிடுங்க.. parkinson, alzheimer, போன்ற மூளை நோய்கள் வராது.. ஆயுர்வேத நிபுணர் பரிந்துரை.!

பரவக் கூடிய இடங்கள்

* குளங்கள், ஏரிகள்

* நீச்சல் குளங்கள் (சுத்தம் செய்யப்படாதவை)

* சில ஆறுகள், கிணறுகள்

* குளிர்பதன வசதி இல்லாத, பாசிசுத்தம் செய்யப்படாத தண்ணீர்.

View this post on Instagram

A post shared by Dr Mubarak (@drmubarakofficial)

தடுப்பு முறைகள் (Prevention)

டாக்டர் முபாரக் பரிந்துரைத்துள்ள 3 முக்கிய முன்னெச்சரிக்கைகள்:

* குளம், ஏரி, ஆறு போன்ற இடங்களில் நீச்சல் தவிர்க்கவும்.

* மூக்கில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்பவர்கள், காய்ச்சி ஆற்றிய தண்ணீர் அல்லது ஸ்டெரைல் வாட்டர் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

* தண்ணீர் மூக்குக்குள் செல்வதைத் தடுக்க உதவும்.

சமீபத்திய நிலைமை

கேரளாவில் 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 7 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதனால் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இறுதியாக..

மூளை உண்ணும் அமீபா (Naegleria fowleri) மிகவும் அரிதாகக் காணப்பட்டாலும், தாக்கினால் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அழுக்கான நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும், மூக்கின் வழியாக நீர் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும், நீச்சல் குளங்களில் nose clip அணியவும் என்பது மிக முக்கியம்.

Disclaimer: இந்த கட்டுரை பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. எந்தவொரு சுகாதாரச் சிக்கலும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

Read Next

உணவு மட்டுமல்ல.. வயிறு உப்புசத்திற்கு இந்த காரணங்களும் இருக்கலாம்! நிபுணர் சொன்னது

Disclaimer