இந்தியாவில் பல நூற்றாண்டுகளாகவே, அன்றாட சமையலில் பல்வேறு மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மூலிகைகளை அன்றாட உணவில் சேர்ப்பது பல்வேறு வழிகளில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில் இவை பொதுவாக அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும். பல்வேறு மூலிகைகள் ஆக்ஸிஜனேற்றிகளால் நிறைந்ததாகும். இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
மேலும் இவை நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. இதைத் தொடர்ந்து உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், மன நலனை ஆதரிக்கவும் உதவுகிறது. சமையல் மூலமாகவோ, தேநீர் மூலமாகவோ அல்லது சுவையை அதிகரிக்கும் மருந்துகளாகவோ இருந்தாலும், மூலிகைகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்க ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த வழியாகும்.
எனினும், அதிகபட்ச நன்மைகளைப் பெற மூலிகைகளைச் சரியாகப் பயன்படுத்துவது மிக முக்கியமாகும். எனவே, நேரங்கள் முதல் பகுதி அளவு வரை, மூலிகைகளை அன்றாட உணவின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு முன் பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மூலிகைகள் எப்போது, எப்படி எடுத்துக் கொள்வது நல்லது?
ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 6 சக்திவாய்ந்த இந்திய மூலிகைகளின் பட்டியல் குறித்து, முன்னணி இருதயநோய் நிபுணரான டாக்டர் அலோக் சோப்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த மூலிகைகளை உட்கொள்வதற்கான பரிந்துரைக்கப்பட்ட அளவுகள் மற்றும் முறைகளையும் அவர் கூறுகிறார்.
இந்த பதிவும் உதவலாம்: இனி சளி, இருமல் வந்தா கவலை வேணாம்! நொடியில் குணமாக இந்த கஷாயத்தை உங்க வீட்லயே செஞ்சி குடிங்க
துளசி
"புனித துளசி என்றும் அழைக்கப்படும் துளசி புனிதமானது ஆனால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தி, நுரையீரல் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது" என்று மருத்துவர் சோப்ரா அவர்கள் கூறினார்.
எப்படி உட்கொள்வது
புதிய துளசி இலைகளை மென்று சாப்பிட வேண்டும். இது தவிர, துளசி தேநீரை பருகலாம் அல்லது 5-10 சொட்டு துளசி சாற்றை தண்ணீரில் சேர்த்து குடிக்கலாம்.
எப்போது உட்கொள்ளலாம்
காலையில் புதிய துளசி இலைகளை எடுத்து நாளை சுத்தமாகவும் அமைதியாகவும் தொடங்க வேண்டும்.
கிலோய்
கிலோய் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று அபாயத்தைக் குறைக்கவும், வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மருத்துவர் சோப்ரா கூறியதாவது "இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராடும் மருந்து. கிலோய் அழியாமையின் வேர் என்றும் குறிப்பிடப்படுகிறது" என்று கூறுகிறார்.
எப்படி உட்கொள்வது
அன்றாட உணவில் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் கிலோய் ஜூஸை குடிக்கலாம் அல்லது வெறும் வயிற்றில் ஒரு மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.
எப்போது உட்கொள்வது நல்லது
காலை நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்க இதை உட்கொள்ள வேண்டும்.
முருங்கை
முருங்கையானது இரும்புச்சத்து, கால்சியம், புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்ததாகும். இதை அவர், "இது இறுதி ஊட்டச்சத்து குண்டு" என்று அவர் குறிப்பிடுகிறார்.
எப்படி உட்கொள்வது
ஒரு டீஸ்பூன் முருங்கை பொடியை ஸ்மூத்தி அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம் அல்லது காப்ஸ்யூல்கள் பயன்படுத்தலாம்.
எப்போது உட்கொள்வது நல்லது
காலையில் வெறும் வயிற்றில் அல்லது காலை உணவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஆற்றலைத் தூண்டவும், கவனத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஒன்றா.. இரண்டா.. பல நன்மைகளை அள்ளித் தரும் பிராமி பவுடர்.. ஆயுர்வேதம் சொல்லும் இரகசியம்
அஸ்வகந்தா
இந்த மூலிகையானது இயற்கையாகவே மன அழுத்தத்தை நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. இது ஹார்மோன்களையும் சமநிலைப்படுத்தவும், பதட்டத்தை அமைதிப்படுத்தவும் மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது. இது சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
எப்படி உட்கொள்வது
1 டீஸ்பூன் பொடி அல்லது 300-600 மில்லி சாற்றை வெதுவெதுப்பான நீர் அல்லது பாலில் தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும்.
எப்போது உட்கொள்வது நல்லது
மாலை அல்லது இரவு நேரத்தில் சாப்பிடலாம்.
View this post on Instagram
மஞ்சள்
"தங்க குணப்படுத்துபவர் என்றும் அழைக்கப்படும் மஞ்சள், வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கவும், மீட்பை ஆதரிக்கவும் உதவுகிறது" என்று டாக்டர் சோப்ரா கூறியுள்ளார்.
எப்படி உட்கொள்வது
சூடான பாலில் அரை டீஸ்பூன் சேர்த்து படுக்கைக்கு முன் குடிக்க வேண்டும் அல்லது தினசரி சமையலில் பயன்படுத்தலாம்.
எப்போது உட்கொள்ளலாம்
இரவில் படுக்கைக்கு முன் மஞ்சள் பால் குடிப்பது மிகுந்த நன்மை பயக்கும்.
திரிபலா
“திரிபலா என்பது மூன்று பொருள்கள் சேர்ந்ததாகும். இது செரிமானம் மற்றும் நச்சுத்தன்மையை ஆதரிக்கும் ஒரு சக்திவாய்ந்த குடல் சுத்தப்படுத்தி" என்று அவர் கூறுகிறார்.
எப்படி உட்கொள்வது
இரவில் ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கரைக்க வேண்டும் அல்லது ஒரு மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.
எப்போது உட்கொள்ளலாம்
இதை இரவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது நீங்கள் தூங்கும் போது உடலை நச்சு நீக்க உதவுகிறது.
இந்த மூலிகைகள் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்க முடியும் என்றாலும், அவற்றை மிதமாக உட்கொள்வது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. எனவே, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக உட்கொள்வது நன்மையை விட தீமையையே விளைவிக்கக்கூடும். இதில் ஏதேனும் ஒன்றை அன்றாட உணவில் சேர்ப்பதற்கு முன்பாக, குறிப்பாக ஏற்கனவே உடல்நலக் குறைவு இருந்தால் மருத்துவரிடம் அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: நல்ல குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்திற்கு இந்த 8 மூலிகைகள் உங்களுக்கு உதவும்.. நிபுணர் பரிந்துரை
Image Source: Freepik
Read Next
நீங்க சாப்பிடும் இந்த உணவுகள் நல்லதுதான்.. ஆனா சாப்பிடும் நேரம் தவறு! ஆயுர்வேதம் சொல்லும் இரகசியம்..
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Oct 06, 2025 21:21 IST
Published By : கௌதமி சுப்ரமணி