Sat Sep 12, 2026 | 12:48 AM IST

Doctor Verified

World heart day 2025: மாரடைப்பு வருவதற்கு முன் ஏற்படும் 7 அறிகுறிகள்.. மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்

மாரடைப்பு வருவதை முன்கூட்டியே கண்டறிய சில அறிகுறிகள் தோன்றலாம். ஆனால், மாரடைப்புக்கு முன்கூட்டியே வருவதைக் கண்டறியும் வகையில் உடலில் பல்வேறு அறிகுறிகள் தோன்றுகிறது. இதில் மாரடைப்பு ஏற்படும் போது முன்கூட்டியே தோன்றும் அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.

World Heart Day 2025 early warning signs of heart attack: ஆண்டுதோறும் உலக இதய தினம் செப்டம்பர் மாதம் 29 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தின் முக்கிய நோக்கமாக, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் இதய நோய்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உடல் இயக்கம் மற்றும் உடல் செயல்பாடு இல்லாத தொற்று அல்லாத நோய்களால் உண்டாகும் மரணங்களுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதில் ஒன்று இதய பாதிப்புகளால் ஏற்படும் மரணமும் அடங்குகிறது. எனவே இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஆனால், இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இன்னும் சில உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். இதில் மாரடைப்பு ஏற்படும் போது முன்கூட்டியே சில அறிகுறிகள் தோன்றலாம். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்கூட்டிய அறிகுறிகள் குறித்து சிஎம்சி வேலூர் டாக்டர் கார்த்திகேயன் குலோத்துங்கன் MBBS MD MBA PGDFM அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: சைலன்ட் ஹார்ட் அட்டாக் வருவதை எப்படி தெரிந்து கொள்வது? இதோ நீங்க புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்

மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது?

மருத்துவர் கூறியதாவது, மார்பு வலி என்பது மாரடைப்பின் அறிகுறி என்று நினைக்கிறோம். ஆனால், அனைவருக்கும் மார்பு வலி இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகள் என்ன, மாரடைப்பு எவ்வாறு ஏற்படுகிறது, அதற்கான முதலுதவி என்ன, அதற்கு என்ன செய்வது என்பது குறித்து காணலாம். அறிவியலின் படி, உலகில் மரணத்திற்கு முதல் காரணம் மாரடைப்புதான். இந்த மாரடைப்பால் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பேர் இறக்கின்றனர். இது உலகம் முழுவதும் வந்து இந்தியாவில் வருகிறது. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 22 முதல் 30 லட்சம் பேர் மாரடைப்பால் இறக்கின்றனர், ஆனால் ஆரம்ப கட்டத்தில் மாரடைப்புக்கு சிகிச்சை அளித்தால், பலரை காப்பாற்ற முடியும் என கூறுகிறார்.

மாரடைப்பின் அறிகுறிகளின் முதல் ஒரு மணிநேரத்தில் அவர்களைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதாவது 90%-க்கும் அதிகம் என கூறுகிறார். எனவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளை சரியாக புரிந்து கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே, நேரத்தை வீணடிக்காமல் ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற முடியும்.

இதயம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்தத்தை வழங்குகிறது. ஆனால், முக்கியமான விஷயமாக நம் இதயம் துடிக்க அதன் சொந்த இரத்த நாளங்கள் தேவைப்படுகிறது. எனவே இரத்த நாளங்களிலிருந்து வரும் இரண்டு முக்கியமான பகுதிகள் உள்ளன. இவற்றை வலது கரோனரி தமனி, இடது கரோனரி தமனி என அழைக்கலாம். த்ரோம்பஸ் என்றழைக்கப்படும் இரத்தக் கட்டிகள் இரத்த நாளங்களுக்குள் சென்று, சிறிது சிறிதாக குவிந்தால், அவை படிப்படியாக அந்த இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. மேலும் இதனால் வலி ஏற்படலாம். ஆனால், இது முற்றிலும் தடுக்கப்பட்டு, இதயத்தின் தசைகள் செயல்படாதபோது, பம்ப் செய்வது நின்றுவிடுகிறது. இதனால், மாரடைப்பு ஏற்படலாம்.

மாரடைப்புக்கு முன் தோன்றக்கூடிய அறிகுறிகள்

மார்பு வலி

முதலாவதாக, மார்பில் வலி ஏற்படலாம். ஆனால், இது பொதுவானதல்ல. சிலருக்கு இது இல்லாமல் இருக்கலாம். இதில் மார்பில் யானை மிதித்து அழுத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டு, மார்பில் ஏற்படும் வலியானது கடுமையாக இருக்கும். இது மாரடைப்பில் வலி ஏற்படலாம். இது சாதாரண அமிலத்தன்மை வலியைப் போலல்லாமல், மிகவும் கூர்மையாக இருக்கும்.

கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மை

அடுத்ததாக, வலி ஒரு பக்கமாக பரவி, எங்கே இருந்து வலி வருகிறது என்று கூட தெரியாத நிலை ஏற்படும். பலருக்கு இந்த உணர்வானது இடது கையில் ஏற்படக்கூடியதாக இருக்கும். சிலருக்கு வலது கையிலும் இருக்கும். அது மட்டுமல்லாமல், மார்புப் பகுதியில் அல்லது வயிற்றுப் பகுதியில் கூட இந்த நிலையை உணரலாம். சில சமயங்களில், தாடைப் பகுதியிலும் இந்த உணர்வு ஏற்படக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: மோசமான குடல் ஆரோக்கியம் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்குமா? மருத்துவர் தரும் பதில்

வியர்வை

மூன்றாவதாக, வியர்வை அதாவது குளிர் வியர்வை ஏற்படலாம். இந்த வித்தியாசமான வியர்வை உணர்வால், முழு உடலும் வியர்க்கத் தொடங்குகிறது. இது மாரடைப்புக்கான ஒரு முக்கியமான அறிகுறி ஆகும். பொதுவாக, இந்த வகையான வியர்வை வயிற்றுப் புண் வலியில் ஏற்படாது. இதை அமிலத்தன்மை என்று கூறலாம்.

வாந்தி

மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாக வாந்தி உணர்வு ஏற்படலாம். மாரடைப்பு ஏற்படும் போது, சில நேரங்களில் வாந்தி ஏற்படுகிறது.

மூச்சுத் திணறல்

ஐந்தாவது முக்கியமான விஷயமாக, மூச்சுத் திணறல், இதை டிஸ்ப்னியா என்று அழைக்கலாம். இதில் சுவாசிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம். அந்த நேரத்தில், அது இதயத்தில் இருந்தால், இரத்தம் அனைத்து நுரையீரல்களுக்கும் செல்ல வேண்டியிருக்கிறது. இப்போது, இதயத்தில் ஆக்ஸிஜன் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அந்த நேரத்தில் சுவாசிப்பது மிகவும் கடினம்.

படபடப்பு

ஆறாவது முக்கியமான அறிகுறியாக படபடப்பு அமைகிறது. இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தால், இது மிகவும் ஆபத்தானது.

மயக்க உணர்வு

ஏழாவது மற்றும் கடைசி அறிகுறியாக மயக்க உணர்வு ஏற்படுவது மாரடைப்பின் முக்கிய அறிகுறியாகும். இதில் தலைச்சுற்றல் மற்றும் லேசான தலைவலி உணர்வு ஏற்படலாம். இதயத்திலிருந்து நுரையீரலுக்கு இரத்த ஓட்டம் போகாதது போல, மூளைக்கு இரத்த ஓட்டம் போகாது. எனவே மூளைக்கு இரத்த ஓட்டம் குறையும் போது, இந்த வகையான தலைச்சுற்றல் போன்ற உணர்வு வருகிறது.

இவை அனைத்தும் நாம் ஒருபோதும் தவறவிடக்கூடாத ஏழு முக்கியமான அறிகுறிகள் ஆகும்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: World Heart Day: டிரான்ஸ் கொழுப்புகள் = இதய அபாயம்.! மருத்துவரின் எச்சரிக்கை..

Image Source: Freepik

Read Next

இந்த வைட்டமின் குறைபாட்டால் உங்களுக்கு இதய நோய் வரலாம்.. மருத்துவர் தரும் அறிவுரை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 29, 2025 12:58 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content