சோளம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது - ஏன் தெரியுமா?

வெளியே மழை பெய்யும்போது, சூடாக ஏதாவது சாப்பிட ஆசை வரும், அதிலும் ஹெல்தி ஆப்ஷனை தேடிவோருக்கு ஸ்வீட் கார்ன், அல்லது சோளம் நல்ல சாய்ஸ். சாலையோரங்களில் தீயில் வாட்டிய அல்லது வேகவைத்த சோளம் அதிக அளவில் விற்பனை செய்யப்படும். 
  • SHARE
  • FOLLOW
சோளம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது - ஏன் தெரியுமா?


சோளம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இருப்பினும், சரியான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் அது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சோளத்தை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. நம் முன்னோர்களும் இதையேதான் சொன்னார்கள். அதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது.

சோளம் சாப்பிட்ட உடனே ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது?

சோளம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று உங்கள் பெரியவர்கள் எப்போதும் உங்களுக்கு அறிவுரை கூறியிருப்பார்கள். ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?.

சோளம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது உங்கள் செரிமானத்தை சீர்குலைக்கும். சோளத்தில் ஸ்டார்ச் மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, மேலும் அதற்கு மேல் தண்ணீர் குடிப்பது வயிற்றில் வாயு உற்பத்திக்கு வழிவகுக்கும். இது அமில ரிஃப்ளக்ஸ், அமிலத்தன்மை, வாய்வு மற்றும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். எனவே சோளம் சாப்பிட்டு 30 முதல் 45 நிமிடங்கள் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

புதிய சோளத்தை மட்டுமே உட்கொள்ளுங்கள்:

சோளத்தை புதியதாகவும் சூடாகவும் உட்கொள்ள வேண்டும். உங்கள் முன் தயார் செய்து தரப்படும் சோளத்தை உடனடியாக உட்கொள்ளுங்கள். நீண்ட நேரம் சேமித்து வைக்காதீர்கள் அல்லது ஏற்கனவே வறுத்த ஒன்றை வாங்காதீர்கள். இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்,

எலுமிச்சை மற்றும் மசாலாவை சேருங்கள்:

எலுமிச்சை சாறு மற்றும் மசாலாவுடன் சோளத்தை கலந்து சாப்பிடுவது சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். சோளத்தில் உள்ள மசாலா மற்றும் எலுமிச்சை சாறு செரிமான செயல்முறையை எளிதாக்குகிறது.

 

 

சாப்பிட்ட உடனே சோளம் சாப்பிடுவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்?

சோளம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சோளத்தில் நார்ச்சத்து அதிகம். சோளம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதால் நார்ச்சத்து ஜீரணமாகாது.

சோளத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் இரைப்பை பிரச்சனைகள் ஏற்படலாம். சில நேரங்களில், தலைவலி மற்றும் வாந்தியும் ஏற்படலாம்.

அதனால்தான் சோளம் சாப்பிட்ட 40 நிமிடங்களுக்குப் பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும். அது இன்னும் கொஞ்சம் ஜீரணமாகும். அதன் பிறகு தண்ணீர் குடித்தால் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

 

Image Source: Freepik

Read Next

உணவுக்கு முன் அல்லது பின்.? பழங்கள் சாப்பிட சரியான நேரம் எது.?

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்