$
mustard oil benefits for hair in tamil: கடுகு எண்ணெய் பெரும்பாலும் வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும். இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்ல, சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. பெரும்பாலும் நாம் தலைமுடி மற்றும் சரும பிரச்சினைகளுக்கு சந்தைகளில் கிடைக்கும் பொருள்களையே வாங்கி பயன்படுத்துவோம்.
ஆனால், இயற்கை பொருட்கள் அதை விட சிறந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் தலைமுடியி இயற்கையான வழியில் பராமரிக்க வொரும்பினால், கடுகு எண்ணெய் ஒரு சிறந்த தீர்வு. உங்கள் தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்க கடுகு எண்ணையை எப்படி பயன்படுத்துவது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Coconut Water Hair Mask: நீளமான, கருகரு கூந்தலுக்கு தேங்காய் தண்ணீர் ஹேர் மாஸ்க்கை இப்படி பயன்படுத்துங்க.
கடுகு எண்ணெய் மசாஜ்

கடுகு எண்ணெயை சிறிது சூடுபடுத்தி பயன்படுத்தினால், அது உச்சந்தலையை பலப்படுத்துகிறது. இதனால், இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும், கூந்தல் வலுவடையும். மேலும், பொடுகு போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.
கடுகு எண்ணையை எப்படி பயன்படுத்துவது?
- இதற்கு முதலில் கடுகு எண்ணெயை ஒரு பாத்திரத்தில் வைத்து சூடாக்கவும்.
- அது சிறிது சூடாகும்போது, கிண்ணத்தை தீயில் இருந்து இறக்கவும்.
- பின்னர் இந்த எண்ணெயை தலையில் நன்கு தடவி மசாஜ் செய்யவும். இதைச் செய்ய, உங்கள் விரல்களை வட்ட இயக்கத்தில் சுழற்ற வேண்டும்.
- இதற்குப் பிறகு, மீதமுள்ள முடியில் இந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.
- பின்னர் இரவு முழுவதும் தலைமுடியில் விடவும்.
- மறுநாள் காலையில் எழுந்து ஷாம்பூவைக் கொண்டு உங்கள் தலைமுடியை சுத்தம் செய்யவும்.
- வாரத்திற்கு ஒரு முறை இந்த சிகிச்சையை உங்கள் தலைமுடிக்கு கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும்.
- இதனால் முடி எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Winter Hair Care: குளிர்காலத்தில் முடி ரொம்ப வறண்டு போகுதா? இதெல்லாம் ஃபாலோப் பண்ணுங்க.
கடுகு எண்ணெய் ஹேர் மாஸ்க்

கடுகு எண்ணெய் முடிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவசியமில்லை. ஹேர் மாஸ்க்கிலும் இதைப் பயன்படுத்தலாம். இதனால் பொடுகு, முடி உதிர்தல், வறட்சி போன்ற பிரச்சனைகள் நீங்கும். இது உச்சந்தலையை பலப்படுத்துவதோடு, முடி வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.
ஹேர் மாஸ்க் செய்வது எப்படி?
- இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் கடுகு எண்ணெயை போட வேண்டும்.
- பின்னர் அதில் முட்டையை சேர்த்து இந்த கலவையை நன்கு கலக்கவும்.
- இப்போது அதை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும்.
- தலைமுடியில் சுமார் 30 நிமிடங்கள் விடவும்.
- அதன் பிறகு, முடியை ஷாம்பு தடவி சுத்தம் செய்ய வேண்டும்.
- நீங்கள் ஒரு மாதத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம். இது கூந்தலை பட்டுப் போன்றதாக மாற்றும்.
இந்த பதிவும் உதவலாம் : Hair Fall: குளிர்காலத்தில் அளவுக்கு அதிகமா முடி கொட்டுதா? இந்த விஷயங்களை கவனியுங்க!
குறிப்பு: ஒவ்வொருவரின் முடி அமைப்பும் வித்தியாசமாக இருக்கும். எனவே, எதையும் பயன்படுத்துவதற்கு முன், நிபுணர் ஆலோசனையைப் பெறவும்.
Pic Courtesy: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version