$
How To Apply Coconut Water Hair Mask: கூந்தல் பராமரிப்புக்கு பலரும் பல முறைகளைப் பின்பற்றுகின்றனர். குறிப்பாக குளிர்காலத்தில் கூந்தலுக்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. ஏனெனில், இந்த கால கட்டத்தில் குளிர்ந்த காற்று மற்றும் ஈரப்பதத்தால், முடி வறண்டு உயிரற்றதாக மாறிவிடும். சிலர் இரசாயனம் நிரப்பப்பட்ட பொருள்கள் மற்றும் வெப்பப் பொருள்களைப் பயன்படுத்துவதால் முடி வறட்சியடைவதுடன், உயிரற்றதாக மாறிவிடும்.
இந்த கால கட்டத்தில் கூந்தலுக்குத் தேங்காய் நீரை பயன்படுத்தலாம். இதில் தலைமுடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வைக்க தேங்காய் தண்ணீரைப் பயன்படுத்தி 3 வெவ்வேறு வகையான ஹேர்மாஸ்க்குகளைத் தயாரிக்கலாம். இதில் தலைமுடியை தேங்காய் தண்ணீரை எவ்வாறு தடவுவது என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: முடி தாறுமாறா கொட்டுதா? முருங்கை இலையை இப்படி பயன்படுத்துங்க.
தேங்காய் நீர் ஹேர் மாஸ்க் தயாரிக்கும் முறை
கூந்தலுக்கு தேங்காய் நீரை ஹேர் மாஸ்க்காக மூன்று வழிகளில் தயாரிக்கலாம். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
தேங்காய் நீர் மற்றும் கொத்தமல்லி ஹேர் மாஸ்க்
கொத்தமல்லி தூள் கூந்தலுக்கு நன்மை தரும் ஒன்றாகும். இதில் உள்ள வைட்டமின் ஏ, சி போன்றவை முடியை அடர்த்தியாக மற்றும் வலுவாக வைக்க உதவுகிறது.
தேவையானவை
- கொத்தமல்லி தூள் – 4 டீஸ்பூன் (கொத்தமல்லி விதைகளிலிருந்து தயாரிக்கப்பட்டது)
- தேங்காய் தண்ணீர்
தயாரிக்கும் முறை
- முதலில் பாத்திரம் ஒன்றில் கொத்தமல்லித் தூளுடன் தேங்காய் தண்ணீர் தேவையான அளவு கலந்து அடர்த்தியான ஹேர் மாஸ்க் தயார் செய்யவும்.
- இதை உச்சந்தலை மற்றும் முடி முழுவதும் தடவி 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Amla Reetha Shikakai: நரைமுடி கருப்பாக மாற ஆம்லா ரீத்தா சீகக்காயை இப்படி பயன்படுத்துங்க

தேங்காய் தண்ணீர் மற்றும் வேம்பு ஹேர் மாஸ்க்
இவை இரண்டுமே முடியின் ஆரோக்கியத்தில் பங்களிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேப்பம்பூ பொடியில் பாக்டீரியா எதிர்ப்பு, செப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
தேவையானவை
- வேப்பம் பூ பொடி – 4 டீஸ்பூன்
- தேங்காய் தண்ணீர் – சிறிதளவு
தயாரிக்கும் முறை
- வேப்பம்பூ பொடி மற்றும் தேங்காய் தண்ணீர் கலந்த கலவையை பேஸ்ட்டாகத் தயாரித்து தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.
- இதை 20 முதல் 30 நிமிடங்கள் முடியில் தடவ வேண்டும். இந்த ஹேர் மாஸ்க் முடி தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.
தேங்காய் தண்ணீர் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்
தேங்காய் நீரில் தேன் கலந்து ஹேர் மாஸ்க் போடுவது முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்க வைக்கிறது. இது ஈரப்பதமூட்டும் ஹேர் மாஸ்க் ஆகும். இது உலர்ந்த கூந்தலுக்கு மிகவும் நல்ல தீர்வாகும்.
தேவையானவை
- தேன் – 4 டீஸ்பூன்
- தேங்காய் தண்ணீர் – 3 முதல் 4 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
- இவை இரண்டையும் கலந்து மசாஜ் செய்து உச்சந்தலை மற்றும் முடியின் முனைகள் வரை தடவலாம்.
- 30 முதல் 40 நிமிடங்களுக்குப் பிறகு, தலைமுடியை லேசான ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும்.
- தேங்காய் தண்ணீர், தேன் கலந்த ஹேர் மாஸ்க் முடிக்கு ஊட்டச்சத்தை வழங்குகிறது.

குறிப்பு
- வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்தும் முன், பேட்ச் டெஸ்ட் செய்யலாம்.
- ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்திய பின், எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக அதைக் கழுவ வேண்டும்.
- முடியின் சிறந்த முடிவுகளைப் பெற, வாரத்திற்கு ஒரு முறை ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Winter Hair Fall: குளிர்காலத்தில் எக்கச்சக்கமா முடி கொட்டுதா? இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version