Doctor Verified

சாப்பிட்ட உடனே ஓடினால் என்னாகும் தெரியுமா? உணவுக்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓடலாம்?

உணவு சாப்பிட்ட பிறகு உடலை சீராக வைத்திருப்பது அவசியமாகும். இந்நிலையில், உணவு சாப்பிட்ட உடனே ஓடுவது நல்ல யோசனையாக இருக்காது. இது பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இதில் சாப்பிட்ட பிறகு உடனே ஓடினால் உடலுக்கு என்ன பிரச்சனைகள் ஏற்படலாம் என்பது குறித்தும், உணவுக்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓடலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சாப்பிட்ட உடனே ஓடினால் என்னாகும் தெரியுமா? உணவுக்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓடலாம்?


இன்று பலரும் உடலை அழகாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர். இதனால், அதிக உடல் எடையைக் கொண்டிருப்பவர்கள் அதைக் கட்டுப்படுத்துவதிலும், குறைந்த உடல் எடை உள்ளவர்கள் அதை அதிகரிப்பதிலும் முயற்சி செய்கின்றனர். ஆனால், நவீன காலத்தில் உடல் எடையை அதிகரிக்க முயற்சிப்பவர்களை விட, அதைக் குறைக்க முயற்சிப்பவர்களின் எண்ணிக்கையே அதிகரித்து காணப்படுகிறது. அதன் படி, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் உடற்பயிற்சி செய்வது, ஜிம் செல்வது, உணவுமுறையைக் கையாள்வது உள்ளிட்ட பல முயற்சிகளைக் கையாள்கின்றனர்.

ஆனால், இதில் பலரும் செய்யக்கூடிய பொதுவான தவறுகளில் ஒன்றாக எந்த நேரத்தில் இந்த முறைகளைக் கையாள வேண்டும் என்பதே ஆகும். அவ்வாறே, உணவு உட்கொண்ட பிறகு ஓடுவது, ஓடிய உடனேயே உணவு உட்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தவறுகளைச் செய்கின்றனர். இந்த வரிசையில், சாப்பிடுவதற்கு சற்று முன் அல்லது உடனடியாக உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது. சாப்பிட்ட உடனேயே உடற்பயிற்சி செய்வதால் வீக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல், வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே தான் உணவு உட்கொண்ட உடனேயே உடற்பயிற்சி செய்வதை நிபுணர்கள் பரிந்துரைக்கவில்லை.

இந்த பதிவும் உதவலாம்: Morning Walk Tips: மார்னிங் வாக்கிங்கு பின் என்ன சாப்பிடணும்? உடல் எடை குறைய டிப்ஸ்!

உடற்பயிற்சிக்கு செய்வதற்கு எவ்வளவு நேரம் முன்பாக சாப்பிட வேண்டும்?

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக ஒரு சிற்றுண்டி சாப்பிட்டிருந்தால், அதன் பின் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். அதே சமயம், அதிக உணவை சாப்பிட்டிருந்தால், சுமார் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். இந்த நேரத்திற்குப் பிறகு உடற்பயிற்சி செய்வது நல்லது. இது எந்த உடல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது. அதேபோல், சாப்பிட்ட உடனே ஓடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

கேள்வி என்னவெனில், சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் ஓட முடியும்? அதிக உணவுக்குப் பிறகு உடனடியாக ஓடுவது ஏதேனும் தீங்கு விளைவிக்குமா? இது குறித்து சாரதா மருத்துவமனையின் உள் மருத்துவம் மூத்த ஆலோசகர் டாக்டர் பூமேஷ் தியாகி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் ஓடுவது நல்லது?

ஓடுவதும் ஒரு வகையான உடற்பயிற்சி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, சாப்பிட்ட உடனேயே ஓடக்கூடாது. இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சாப்பிட்ட உடனே ஓடுவதன் காரணமாக, வயிற்றின் வலது அல்லது இடது பக்கத்தில் வலியை ஏற்படுத்தக்கூடும். சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் ஓட அனுமதிக்கப்படுகிறது தெரியுமா?

நீங்கள் லேசான சிற்றுண்டியை சாப்பிட்டிருந்தால், ஓடுவதற்கு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும், அதிக உணவை சாப்பிட்டிருந்தால், குறைந்தது மூன்று மணி நேரத்திற்குப் பிறகு ஓடுவது நல்லது. இவ்வாறு, அதிக உணவை சாப்பிட்ட உடனேயே உடற்பயிற்சி செய்வது செரிமானத்தை பாதிக்கக்கூடும் மற்றும் வயிற்றில் அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உணவுக்குப் பின் ஒரு 10 நிமிஷம் நடந்தா உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

சாப்பிட்ட உடனே ஓடுவதால் ஏற்படும் தீமைகள்

வயிற்று வலி

சாப்பிட்ட உடனே ஓடுவதன் காரணமாக, ஒருவருக்கு வயிற்று வலி ஏற்படக்கூடும். உண்மையில், சாப்பிட்ட உடனே ஓடுவது செரிமான அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, வயிற்றுப் பிடிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, அதிக உணவுக்குப் பிறகு ஓடுவது மிகவும் மோசமான யோசனையாக இருக்கலாம்.

வீக்கம் மற்றும் வாயு பிரச்சனைகள்

சாப்பிட்ட உடனேயே ஓடுவதன் காரணமாக, அது வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கக்கூடும். மேலும் இதனால் வாயு பிரச்சனைகள் ஏற்படலாம். உண்மையில், ஓடும்போது நமது சுவாசம் வேகமடைகிறது. இதன் விளைவாக, நாம் அதிக காற்றை உள்ளிழுக்கக்கூடும். இது வயிற்றில் வாயுவை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, சாப்பிட்ட உடனே ஓடுவது வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்தலாம்.

நெஞ்செரிச்சல்

சாப்பிட்ட உடனேயே ஓடுவது நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது. ஏனெனில், ஓடும்போது வயிற்றுக்கும், உணவுக்குழாய்க்கும் இடையிலான தசைகள் தளர்ந்து, வயிற்று அமிலம் மேல்நோக்கிப் பாய அனுமதிக்கிறது. இது நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: உணவுக்குப் பிறகு இந்த 5 விஷயங்களை தவிர்க்கவும்.. நிபுணர் எச்சரிக்கை.!

Image Source: Freepik

Read Next

உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி கல்லீரல் சிரோசிஸை மேம்படுத்துமா? நிபுணர் கூறும் உண்மைகள்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Oct 18, 2025 20:30 IST

    Published By : கௌதமி சுப்ரமணி