Sleep Divorce: இந்தியாவில் திருமணம் என்பது இருவர் தங்கள் மனதையும், வாழ்க்கையையும் பரிமாறிக் கொள்வதை குறிக்கிறது. இருவரும் சரிபாதி என்ற உடன்பாடுடன் தங்கள் வாழ்க்கையை தொடங்குவார்கள். திருமணத்திற்குப் பிறகு, இரண்டு பேர் ஒரே அறையில் தங்கள் வாழ்க்கையின் தருணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். குறிப்பாக ஒரு அறையில் படுக்கையைப் பகிர்ந்து கொள்வது காதல் தருணங்களை அழகாக்குவது மட்டுமல்லாமல், இரண்டு பேரை இதயத்தாலும் மனத்தாலும் நெருக்கமாகக் கொண்டுவருகிறது.
தம்பதிகள் குறித்து நடத்தப்பட்ட பல ஆராய்ச்சிகள், ஒன்றாகத் தூங்குவது அவர்களின் உறவை பலப்படுத்துகிறது என்பதைக் காட்டுகின்றன. இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் தம்பதிகள் ஒன்றாகத் தூங்குவதற்குப் பதிலாக பல சமயங்களில் தனித்தனியாக வாழ விரும்புகிறார்கள். தூக்க விவாகரத்து என்றால் என்ன, அது தம்பதிகள் தங்கள் உறவை எவ்வாறு மேம்படுத்த உதவும் என்பது குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க: Deep Sleep: ஆழ்ந்த தூக்கம் ஏன் முக்கியம்? இதன் நன்மைகள் இங்கே!
தூக்க விவாகரத்து என்றால் என்ன?
இருவரில் ஒருவர் சரியாக தூங்க முடியாதபோது தம்பதிகளுக்கு இடையே தூக்க விவாகரத்து ஏற்படுகிறது. இந்த விவாகரத்தில், தம்பதிகள் தங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றாகச் செய்கிறார்கள், ஆனால் தூங்குவதற்கு வெவ்வேறு படுக்கையறைகள் அல்லது படுக்கைகளைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் இந்த நேரத்தில், உடல் உறவுகள், குடும்பப் பொறுப்புகள் உள்ளிட்ட அனைத்தும் எப்போதும் போல் இயல்பாகவே தான் நடக்கும்.
தம்பதிகளுக்கு ஏன் தூக்க விவாகரத்து தேவை?
நாள் முழுவதும் வீட்டு வேலை, அலுவலக வேலை, குடும்பம், நண்பர்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றிய பிறகு, ஒவ்வொரு நபரும் நிம்மதியாக தூங்க விரும்புகிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இருப்பினும், சில நேரங்களில் தம்பதிகள் தங்கள் துணையின் தூக்க பழக்கவழக்கங்களால் போதுமான தூக்கத்தைப் பெற முடியாமல் போகிறது.
சத்தமாக குறட்டை விடுதல், விளக்குகளை எரியவிட்டு விழித்திருப்பது, இரவு வெகுநேரம் வரை மொபைல் போனைப் பயன்படுத்துதல், தூங்கும் போகு கை அல்லது கால்களை தூக்கி மேலே போடுவது போன்ற காரணங்களால் மற்றொருவர் நிம்மதியாக தூங்க முடியாமல் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், தம்பதிகள் தனித்தனியாக தூங்க விரும்புகிறார்கள்.
தூக்க விவாகரத்தின் நன்மைகள் என்ன?
- தூக்க விவாகரத்தை எடுத்துக்கொள்வது தம்பதிகளுக்கு சரியான தூக்கத்தைப் பெற உதவுவது மட்டுமல்லாமல், அவர்களின் உறவை மேம்படுத்தவும் உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- தூக்க விவாகரத்து எடுப்பது துணைக்கு அவர்களின் தனிப்பட்ட இடத்தை அளிக்கிறது. இது தம்பதிகளை ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவருகிறது மற்றும் அவர்களின் உடல் உறவு மேம்படுகிறது.
- இப்படி அவ்வப்போது தூக்க விவாகரத்து எடுத்துக் கொள்வது அவர்களின் உடல்நிலை மேம்படுத்த உதவுகிறது. காரணம், இதன்மூலம் தூக்கத்தின் தரம் மேம்படுகிறது.
மேலும் படிக்க: புளித்த உணவுகள் எடையை குறைக்க உதவுமா? இதன் நன்மைகள் இங்கே..
தூக்க விவாகரத்தின் தீமைகள் என்ன?
ஒரு மாதத்திற்கு 1 முதல் 2 முறை தூக்க விவாகரத்தை எடுத்துக்கொள்வதன் மூலம், தம்பதிகள் உணர்ச்சி ரீதியாக அதிக திருப்தியுடன் இருக்க முடியும்.
மேலே குறிப்பிட்டது போல் அவ்வப்போது மட்டுமே இந்த முறையை கடைபிடிக்க வேண்டும். இதுவே தொடர்ச்சியாகி உறவில் விரிசல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
image source: freepik