மக்களே! நிபா வைரஸ் எச்சரிக்கை… கேரள அரசு வெளியிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Symptoms and prevention measures of nipha virus: கேரளாவில் நிபா வைரஸ் பரவலின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். அதே சமயம், வௌவாலின் இனப்பெருக்க காலத்திற்கு முன்னதாகவே நிபா வைரஸின் தாக்கத்தைக் குறைக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாகக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
மக்களே! நிபா வைரஸ் எச்சரிக்கை… கேரள அரசு வெளியிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Kerala nipah virus precautionary measures: கேரளாவில் கொடிய நோய் பரவும் அபாயம் உள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிபா வைரஸ் உடன் வௌவால் இனப்பெருக்க காலம் விரைவில் இருப்பதால், மாநில சுகாதாரத் துறை, விலங்குவழித் தொற்றுக்கான முக்கிய இடங்களாகக் கருதப்படும் கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், வயநாடு மற்றும் எர்ணாகுளம் போன்ற மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது. இவை வைரஸுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், தொற்றுநோய்க்கான வாய்ப்புகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிபா வைரஸ் என்றால் என்ன?

இது ஒரு ஜூனோடிக் நோய்க்கிருமியாகும். மேலும், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய நோயாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, நிபா வைரஸின் முதன்மை கேரியர்கள் பழ வௌவால்கள். அதிலும் குறிப்பாக, இது ஸ்டெரோபஸ் இனத்தைச் சேர்ந்தவையாகும். இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு, மாசுபட்ட உணவில் இருந்து அல்லது COVID-19 வைரஸைப் போலவே சுவாசத் துளிகள் வழியாக மனிதனுக்கு மனிதனுக்கு நேரடி பரவக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: யாருக்கெல்லாம் HMPV வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது? டாக்டர் கூறுவது இங்கே!

தொற்று ஏற்பட்ட பிறகு, ஒருவருக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டை வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற லேசான அறிகுறிகள் ஏற்படலாம். எனினும், கடுமையான சந்தர்ப்பங்களில், இந்த வைரஸ் ஆனது மூளையழற்சி போன்ற ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இது 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வலிப்புத்தாக்கங்கள், திசைதிருப்பல் மற்றும் கோமா கூட ஏற்பட வாய்ப்புண்டு. இதன் காரணமாக, நிபா வைரஸ் தொற்றுகளின் இறப்பு விகிதம் ஆபத்தான அளவில் அதிகமாக உள்ளது.

image
coronavirus-outbreak-infecting-r-1736433593503.jpg

ஏன் கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகம் உள்ளது?

கேரளாவில் அதிகம் நிபா வைரஸ் பரவலால் இருந்ததாக வரலாறு உள்ளது. குறிப்பாக, 2023 ஆம் ஆண்டில் மிக மோசமான தொற்றுநோய் ஏற்பட்டது. இந்த நேரத்தில் பலரும் பாதிக்கப்பட்டு பல இறப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மாநிலத்தின் வெப்பமான காலநிலை, அடர்த்தியான பழ வௌவால்களின் எண்ணிக்கை மற்றும் மனித-விலங்கு நெருங்கிய தொடர்புகள் போன்றவை இருக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

பழ வௌவால்களின் இனப்பெருக்க பருவத்துடன் ஒத்துப்போகும் பருவகால மாதங்களுக்கு இடையே பெரும்பாலான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த காலகட்டத்தில் வைரஸ் பரவும் அபாயம் அதிகரிக்கலாம். ஏனெனில் பாதிக்கப்பட்ட வௌவால்களின் உமிழ்நீர், சிறுநீர் மற்றும் மலம் மூலம் வைரஸை வெளியேற்றப்பட்டு, உணவு மற்றும் நீர் ஆதாரங்களை மாசுபடுத்துகிறது. இதனைத் தவிர்க்கவே கேரள அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Tropical diseases: முக்கிய வெப்பமண்டல நோய்களும், அதை தடுக்கும் முறைகளும்! மருத்துவர் தரும் குறிப்புகள் இதோ

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மீண்டும் ஒரு தொற்றுநோய் பரவாமல் தடுக்க, கேரள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது.

உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல்

உணவு பாதுகாப்பைப் பொறுத்த வரை, கடித்ததற்கான அறிகுறிகளைக் கொண்ட அல்லது தரையில் விழுந்த பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏனெனில், இவை பாதிக்கப்பட்ட வௌவால்களால் மாசுபடலாம். எனவே மக்கள் பழங்களை சாப்பிடும் முன்பாக, அதை நன்கு கழுவி உரிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

கண்காணிப்பு

பழ வௌவால்கள் அதிகம் உள்ள பகுதிகளில், வெடிப்புக்கான அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிய மாநிலம் முழுவதும் கண்காணிப்பு முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள்

நிபா வைரஸின் அபாயங்கள் மற்றும் அதன் பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து, சுகாதார அதிகாரிகள் ஐந்து மாவட்டங்களில் பொதுமக்களுக்கு தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் வௌவால்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.

சுகாதாரத் தயார்நிலை

கேரளா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. நிபா வைரஸ் வழக்குகளின் அறிகுறிகளை அடையாளம் காணவும், சந்தேகிக்கப்படும் வழக்குகளை திறம்பட நிர்வகிக்கவும் சுகாதர ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் HMPV: ஆபத்துகளும்.. அறிகுறிகளும்..

Image Source: Freepik

Read Next

நீங்க அம்மோனியா கலந்த ஹேர் டை பயன்படுத்துறீங்களா? உங்களுக்கு கண்டிப்பா இந்த நோய் வரும்!

Disclaimer