Sat Sep 12, 2026 | 01:45 AM IST

பங்குனி உத்திர விரதத்தில் நீரேற்றமாக இருக்க செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை

தமிழ் மாதத்தில் கடைசி மாதமான பங்குனி மாதத்தில் வரும் பங்குனி உத்திரம் சிறப்பு வாய்ந்த நன்னாளாகும். இந்த தினத்தின் முக்கிய சிறப்பு பௌர்ணமி மற்றும் உத்திர நட்சத்திரம் இணைந்து வருவதே. இந்த நன்னாளில் கோவில்கள் தோறும் விழாக்கள் நடைபெறுவதுடன், விரதமிருந்து வழிபாட்டைக் கடைபிடிப்பர்.

இந்த நாளில் கடுமையான விரதத்தை அனுசரிப்பார்கள். கடுமையான விரதத்தை மேற்கொள்ள முடியாதவர்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப பழங்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இதில் பங்குனி உத்திரத்தில் விரதம் மேற்கொள்ளும் போது நீரேற்றமாக இருக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Thyroid Foods: உஷார்! தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த உணவெல்லாம் தொடவே கூடாது

விரதத்தின் போது நீரேற்றமாக இருக்க செய்ய வேண்டியவை

உண்ணாவிரதத்தின் போது உடலை நீரேற்றமாக வைப்பது அவசியமாகும். இல்லையெனில் தலைவலி மற்றும் சோர்வை ஏற்படுத்தலாம். அதே சமயம் நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. நீரேற்றத்திற்கு நல்ல ஆதாரமான மற்றும் ஆரோக்கியமான பானங்களை எடுத்துக் கொள்ளலாம்.

புதிய பழச்சாறுகள்

பருவகால பழங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் புதிய, தூய்மையான மற்றும் இயற்கையான சாற்றை அருந்தலாம். இது நீரேற்ற அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உண்ணாவிரத செயல்முறையை எளிதாக வைக்கிறது.

சியா தேங்காய் நீர்

தேங்காயில் நல்ல அளவிலான எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன. இவை உடலை நீரேற்றமாகவ வைப்பதுடன், உடலுக்குத் தேவையான ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் சியாவில் உள்ள நார்ச்சத்துக்கள், புரதம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

ஃபுரூட் ஸ்மூத்திகள்

பழங்களை அப்படியே சாப்பிட விரும்பாதவர்கள், ஸ்மூத்தியாக எடுத்துக் கொள்ளலாம். சுவையான பழ ஸ்மூத்திகள் நீரேற்றத்தின் மூலமாக இருப்பதால், விரதமிருப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம். மேலும், தர்பூசணி மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி, வாழைப்பழ ஸ்மூத்தி போன்றவற்றை அருந்தலாம். உலர் பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றைச் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.! ஏன்னு தெரியுமா.?

மோர்

ஆரோக்கியமான விரதத்திற்கு மோர் எடுத்துக் கொள்வது சிறந்த நன்மை தரும். இது உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. இதன் சத்தான மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதற்கு வழக்கமான டேபிள் உப்புக்குப் பதிலாக கல் உப்பைப் பயன்படுத்தலாம்.

நீரேற்றமாக இருக்க செய்யக் கூடாதவை

விரதத்தின் போது உடலை நீரேற்றமாக வைக்க வெங்காயம் மற்றும் பூண்டைத் தவிர்ப்பது நல்லது. இவை இரண்டும் உடலில் அதிகளவு வெப்பம் உருவாக்கலாம். எனவே இவற்றை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

  • உண்ணாவிரதத்தின் போது காரமான மற்றும் எண்ணெய் சார்ந்த உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இவை அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
  • செயற்கை இனிப்புகள், இனிப்பு நிறைந்த பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மேலும் கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
Panguni Uthiram viratham

பங்குனி உத்திரத்தில் விரதமிருப்பவர்கள் இந்த வகையில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Hot Water: காலையில் டீ, காஃபிக்கு பதில் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

வெறும் வயிற்றில் நீங்கள் சாப்பிடக்கூடிய 5 பழங்கள் இங்கே..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content