பெண்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இயல்பான மாற்றம் தான் மாதவிடாய் சுழற்சி. ஆனால், அந்தக் காலத்தில் பல பெண்கள் உடல் வலி, சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இதன் போது சில தவறான பழக்கங்கள் உடல்நலத்தை மோசமாக்கும் என்றும், சில எளிய நடைமுறைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் காஸ்ட்ரோஎன்டரோலஜிஸ்ட் டாக்டர் பால் மாணிக்கம் தனது அறிவுரைகளை பகிர்ந்துள்ளார்.
மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டியவை
உணவை தவிர்ப்பது
மாதவிடாய் காலத்தில் உணவை தவிர்ப்பது உடல் சக்தியைக் குறைத்து சோர்வை அதிகரிக்கும். அதோடு மனநிலையிலும் மாற்றங்களை உண்டாக்கும்.
அதிக காபி குடிப்பது
காபி அல்லது காபின் நிறைந்த பானங்களை அதிகம் குடிப்பது உடலை டீஹைட்ரேட் செய்து வயிற்று வலியை அதிகரிக்கிறது.
ஜங்க் உணவு மற்றும் உப்பான உணவு
இவை உடலில் நீர் தேக்கத்தை ஏற்படுத்தி வயிறு உப்புசம் மற்றும் அசௌகரியத்தை அதிகரிக்கின்றன.
சானிடரி நாப்கினை நேரம் தவறாமல் மாற்றாமல் இருப்பது
இது தொற்று நோய்கள், மோசமான நிலையில் toxic shock syndrome கூட ஏற்படுத்தும் அபாயம் உண்டு.
கடுமையான வாஷ் / ரசாயனப் பொருட்கள் பயன்படுத்துவது
இது யோனி pH சமநிலையை குலைத்து எரிச்சல், அலர்ஜி மற்றும் தொற்று பிரச்சினைகளை உண்டாக்கும்.
மனநலத்தை புறக்கணித்தல்
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்கள், கவலை, சோர்வு இயல்பானவை. அவற்றை புறக்கணிக்காமல் கவனிக்க வேண்டும்.
கடுமையான வலியை சாதாரணமாக நினைத்தல்
அதிகமான வயிற்று வலி அல்லது முதுகுவலியை “இயல்பு” என்று நினைக்கக் கூடாது. மகப்பேறு மருத்துவரை அணுகுவது அவசியம்.
View this post on Instagram
மாதவிடாய் காலத்தில் செய்ய வேண்டியவை
ஹீட் தெரபி பயன்படுத்துவது
வயிற்றில் வெப்பம் கொடுப்பது தசைகளை தளர்த்தி வலியை குறைக்கும்.
போதுமான தண்ணீர் குடிப்பது
நீர் உட்கொள்வதால் bloating குறையும், சோர்வு தணியும். தினமும் குறைந்தது 8 கண்ணாடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
இரும்புச் சத்து நிறைந்த உணவு
மாதவிடாய் காலத்தில் இரத்த இழப்பு ஏற்படும். அதனை சமநிலைப்படுத்த இரும்புச் சத்து நிறைந்த கீரை, பருப்பு, பேரிச்சம் பழம் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள்
வாழைப்பழம், அவகாடோ, நட்ஸ் போன்றவை தசை வலியை குறைத்து உடல்நலத்தை மேம்படுத்தும்.
மெதுவான உடற்பயிற்சி
லேசான நடைப்பயிற்சி, யோகா போன்றவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி வலியை குறைக்கும்.
போதுமான ஓய்வு மற்றும் தூக்கம்
மாதவிடாய் காலத்தில் உடல் அதிக ஓய்வு தேவைப்படும். போதுமான தூக்கம் பெற்றால் சோர்வு குறையும்.
சுழற்சியை கண்காணித்தல்
மாதவிடாய் தேதியை பதிவு செய்வது, முறைகேடுகளை கண்டறியவும், முன்னேற்பாடுகளை செய்யவும் உதவும்.
இறுதியாக..
மாதவிடாய் காலம் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் ஒரு சவாலான காலமாக இருந்தாலும், அதை சரியான முறையில் கவனித்தால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். உணவு, ஓய்வு, தண்ணீர் உட்கொள்வது, மனநிலை கவனிப்பு ஆகியவை முக்கியம். தேவையற்ற வலி அல்லது சிக்கல்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது சிறந்தது.
Disclaimer: இந்த கட்டுரை பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது. தனிப்பட்ட உடல்நல பிரச்சினைகள், கடுமையான வலி அல்லது முறைகேடுகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
Read Next
மாதவிடாய் வருவதற்கு முன் சந்திரமுகியாக மாறும் பெண்கள்.. ஏன் தெரியுமா.? மருத்துவர் விளக்கம்..
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Sep 18, 2025 21:23 IST
Modified By : ஐஸ்வர்யா குருமூர்த்திSep 18, 2025 21:23 IST
Published By : ஐஸ்வர்யா குருமூர்த்தி