இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக முடி பிரச்சனை அடங்குகிறது. போதுமான பராமரிப்பு இல்லாதது, போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு, முடி உடைதல், வறட்சியான முடி, நரைமுடி மற்றும் இன்னும் பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். இந்நிலையில், முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட விரும்புபவர்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும் இரசாயனங்கள் கலந்த முடி பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இவை தற்காலிக தேர்வாக இருக்கலாம். மேலும், இந்த பராமரிப்புப் பொருள்களின் நீண்ட கால பயன்பாடுகள் தலைமுடியை மேலும் பாதிக்கக்கூடும். இந்நிலையில், முடி மெலிவதைத் தடுக்கவும், முடி உதிர்வைத் தடுத்து நிறுத்தவும் இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் கையாள்வது அவசியமாகும். இதில் முடி உதிர்வைத் தடுத்து நிறுத்தவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் பானம் குறித்து ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளரும், உணவியல் நிபுணருமான மன்பிரீத் கல்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பானம் தயாரிக்கும் முறை குறித்து பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
முடி உதிர்வைத் தடுத்து நிறுத்த உதவும் பானம்
உணவியல் நிபுணர் மன்பிரீத் கல்ரா அவர்களின் கூற்றுப்படி, “போனிடெயில் மெலிந்து போவதா அல்லது அதிகப்படியான முடி உதிர்தலால் அவதிப்படுகிறீர்களா? இந்த அதிக இரும்புச்சத்து, அதிக புரதம், அழற்சி எதிர்ப்பு ஸ்மூத்தி உங்கள் இயற்கையான தீர்வாகும்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: மென்மையான பளபளப்பான கூந்தலுக்கு Rosemary Hair Toner – வீட்டிலேயே செய்யும் 4 இயற்கை முறைகள் இங்கே..
அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த ஸ்மூத்தியின் நன்மைகள்
அதிகளவிலான புரதம், இரும்புச்சத்துக்கள் நிறைந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த ஸ்மூத்தியை எடுத்துக் கொள்வது முடி ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
- இந்த பானம் அருந்துவது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
- இவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
- இதில் உள்ள புரதம், இரும்பு மற்றும் ஒமேகா-3 போன்றவை முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
- இவை கெரட்டின் உற்பத்தியை ஆதரிக்க உதவுகிறது.
- இது தவிர, இந்த ஊட்டச்சத்துக்கள் முடியின் வலிமை, அமைப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகின்றன.
முடி ஆரோக்கியத்திற்கான பானம் தயாரிக்க தேவையான பொருள்கள்
- பேரீச்சம்பழம் - 1 (இரும்புச்சத்து மற்றும் ஆற்றல் நிறைந்தது)
- அஞ்சீர் - 1 (இரத்த ஓட்டம் மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது)
- பூசணி விதைகள் - 1 டீஸ்பூன் (துத்தநாகம் + ஒமேகா 3 = நுண்ணறை வலிமை)
- வால்நட்ஸ் - 2 பாதிகள் (நெகிழ்ச்சித்தன்மை மற்றும் கெரட்டினுக்கு ஒமேகா 3 + பயோட்டின்)
- சூரியகாந்தி விதைகள் - 1 டீஸ்பூன் (வைட்டமின் ஈ & மெக்னீசியம் = உச்சந்தலையின் ஊட்டச்சத்து)
- ஆளி விதை தூள் - 1 டீஸ்பூன் (வறுத்த & அரைத்தது)
- ராகி தூள் - 1 டீஸ்பூன் (இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் மெத்தியோனைன் நிறைந்தது)
- இஞ்சி தூள் - ஒரு சிட்டிகை (இயற்கை அழற்சி எதிர்ப்பு)
- சத்து (Sattu) - 1 டீஸ்பூன் (வலுவான முடி தண்டுகளுக்கு தூய தாவர புரதம்)
பேரிச்சம்பழம் - மயிர் நுண்ணறைகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் இரும்புச்சத்து நிறைந்ததாகும். மேலும் இது உச்சந்தலையில் உள்ள செல்களில் செயலில் வளர்சிதை மாற்ற செயல்முறைக்கு ஆற்றலை வழங்குகிறது
அஞ்சீர் - இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து சுழற்சியை ஆதரிக்க உதவுகின்றன. இவை ஆரோக்கியமான முடி அமைப்பை பராமரிக்க முக்கியமானது.
பூசணி விதைகள் - இவை முடியின் நுண்ணறையை வலுப்படுத்த உதவுகின்றன. மேலும் இது முடி தண்டை வளர்க்கும் துத்தநாகம் மற்றும் ஒமேகா 3 இன் வளமான ஆதாரமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: கொத்து கொத்தா கொட்டும் முடி பிரச்சனைக்கு மருத்துவர் சொன்ன இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க
வால்நட்ஸ் - இதில் உள்ள ஒமேகா 3 & பயோட்டின் வளமான மூலங்கள் முடி நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் கெரட்டின் உற்பத்தியை ஆதரிக்கிறது
சூரியகாந்தி விதைகள் - இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்றவை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும் இது முடி உடைப்பைக் குறைக்கிறது.
View this post on Instagram
ஆளி விதை தூள் - இதில் உள்ள ALA மற்றும் லிக்னான்கள் போன்றவை உச்சந்தலையில் வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் செல்லுலார் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
ராகி பவுடர் - ராகி பவுடரில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் மெத்தியோனைன் போன்றவை முடி வளர்ச்சி மற்றும் கெரட்டின் உற்பத்திக்கு உதவும்.
இஞ்சி பவுடர் - இது வீக்கத்தை மாற்றியமைக்கும் இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் முடி நுண்ணறைகளுக்கு ஊட்டச்சத்து விநியோகத்தை மேம்படுத்துகிறது.
சத்து - புரதத்தின் வளமான மூலமானது முடி தண்டுகளை உருவாக்கி வலுப்படுத்துகிறது மற்றும் செல்களில் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
முடி உதிர்வைத் தடுக்க பானம் தயாரிக்கும் முறை
முதலில் பேரிச்சம்பழம், அஞ்சீர், பூசணி விதைகள், வால்நட்ஸ், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதை அரைத்துக் கொள்ளலாம். பின், இந்த கலவையில் ஆளி விதை தூள், ராகி பவுடர், இஞ்சி பவுடர் மற்றும் சத்து போன்றவற்றைச் சேர்த்து அந்த பானத்தை எடுத்துக் கொள்ளலாம்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: டபுள் மடங்கு வேகத்தில் முடி வேகமாக வளரணுமா? இந்த உணவுகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Sep 24, 2025 15:40 IST
Published By : கௌதமி சுப்ரமணி