
Home remedies for hair growth and thickness: இன்று பலரும் நீளமான, அடர்த்தியான முடி இருப்பதையே விரும்புகின்றனர். ஆனால், இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் முடி உதிர்வு, வறட்சியான முடி, நரைமுடி, பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி உதிர்வு பெரும்பாலானோர் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக மாறிவிட்டது. இந்த முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட பலரும் இரசாயனங்கள் கலந்த முடி பராமரிப்புப் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை கூடுதல் பிரச்சனைக்கு வழிவகுக்கலாம்.
அதிர்ஷ்டவசமாக, முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், முடி உதிர்வைத் தடுப்பதற்கும் அன்றாட வாழ்வில் ஏராளமான வீட்டு வைத்தியங்கள் உள்ளன. ஆம். உண்மையில், நம் வீட்டிலேயே உள்ள சில எளிய வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் முடி உதிர்தலைக் குறைக்க முடியும். அவ்வாறு முடி உதிர்தலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள் குறித்து மருத்துவர் ஹன்சாஜி அவர்கள் தி யோகா இன்ஸ்டிடியூட் யூடியூப் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
மருத்துவரின் கருத்து
மருத்துவர் ஹன்சாஜி அவர்கள், “ஆரோக்கியமான முடி பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன்., முகத்தின் அலங்காரம் போன்றது. மக்கள் இத்தகைய முடியை விரும்புகின்றனர். ஆனால், அதற்கு எதிராக முடி உதிர்வு ஏற்படுவதால் மக்கள் கவலைப்படுகின்றனர். முடி உதிர்வது மிகவும் இயற்கையானது. ஏனெனில், உடல் பலவீனமானது எறியப்பட வேண்டும் என அறிந்தால், புதியது மட்டுமே வர முடியும். எனவே பலவீனமானது போக வேண்டும், பின்னர் புதியதாகவும் வலுவாகவும் வர வேண்டும். இது இயற்கையான நிகழ்வு, எனவே அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இது போன்ற அதிகப்படியான முடி உதிர்தலையும், அதைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் குறித்து காணலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிகப்படியான முடி உதிர்தலுக்கான காரணங்கள்
மரபணு காரணி
முடி உதிர்தலுக்கான ஒரு மிக முக்கியமான காரணி பரம்பரை, மரபணு பயம் ஆகும். இதை எதிர்கொள்வதற்கு பெரிதாக எதுவும் செய்ய முடியாது. எனினும், சிறிய விஷயங்கள் மேம்படுத்தலாம்.
இந்தப் பதிவும் உதவலாம்: அசுர வேகத்தில் முடி வளரனுமா.? ஒரு வாரம்.. தொடர்ந்து இந்த எண்ணெயை Night-ல தடவிட்டு வாங்க.. சும்மா அப்படி வளரும்!
ஊட்டச்சத்து குறைபாடு
உடலில் இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு போன்றவை முடி உதிர்தலை ஏற்படுத்தும். மேலும் இரத்த சோகை நிலை, சைனசிடிஸ் சளி இருமல் கூட இருக்கலாம். இதற்காக எடுத்துக் கொள்ளும் அனைத்து மருந்துகளும் முடி உதிர்தலை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர் கூறுகிறார்.
மன அழுத்தம்
நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம் போன்றவை இயற்கையானதாக இருப்பினும், இவை தலைமுடியை பாதிக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா. எனவே பதற்றம் இல்லாத வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
பொடுகு
நம் தலைமுடியை சரியாக சுத்தம் செய்யாதபோது பொடுகு ஏற்படுகிறது. இது முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது.
ரசாயனங்கள் பயன்பாடு
முடியை வண்ணமயமாக்குவதற்கு ரசாயனத்தைப் பயன்படுத்துவது நிச்சயமாக முடி உதிர்தலை ஏற்படுத்தக்கூடும்.
எனவே இந்த காரணங்கள் அனைத்தையும் நன்கு புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என மருத்துவர் கூறுகிறார்.
முடி உதிர்வைத் தடுக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்
சரியான உணவுமுறை
இரத்த சோகை பிரச்சனையைக் குறைக்க ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கையாள வேண்டும். இதற்கு ஒரு எளிய சாத்வீக உணவைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.
ஆசனங்கள் செய்வது
நம் முகத்தில் சரியான சுழற்சி மற்றும் அனைத்திற்கும் நிதானமான அணுகுமுறையைக் கையாள வேண்டும். இதற்கு முடி பராமரிப்பு விஷயத்தில் நடைமுறையில் 3 ஆசனங்களை மருத்துவர் பகிர்ந்துள்ளார்.
ஹஸ்தபாதாசனம் - இதில் முன்னோக்கி குனிந்து அந்த நிலையில் சிறிது நேரம் இருக்க வேண்டும்.
திரிகோணாசனம் - இது முக்கோண வடிவத்தை உருவாக்குவது போன்றதாகும். முக்கோணத்தை உருவாக்கி சிறிது நேரம் அந்த நிலையில் இருக்க வேண்டும்.
விபரீதகரணி - கால்களை தலைகீழாக உயர்த்தி நிதானமான நிலையில் இருப்பதாகும்.
இந்த 3 ஆசனங்களை ஒரு வழக்கத்தில் செய்ய வேண்டும் என்று ஹன்சாஜி பரிந்துரைக்கிறார். இது தவிர, பிராணயாமங்களும் முடி உதிர்வைக் குறைக்க உதவும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவும் உதவலாம்: முடி அதிகமா கொட்டுதா? இந்த உணவுகளை சாப்பிடுங்க.!
நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை
நெல்லிக்காய் பொடியை எடுத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு பேஸ்ட் செய்யவும். பின்னர், இதை உச்சந்தலையில் தடவ வேண்டும். இதை சிறிது நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின் தலைமுடியைக் கழுவலாம். இது மிகவும் எளிமையானது. நெல்லிக்காயின் வைட்டமின் சி மற்றும் எலுமிச்சை, முடி நுண்ணறைகளை வலுப்படுத்தவும், முடி உதிர்தலைத் தடுக்கவும் மற்றும் முன்கூட்டியே முடி நரைப்பதைத் தடுக்கவும் உதவுகிறது.
கற்றாழை
இது முடியை வலுப்படுத்தவும், நன்றாக வளர்க்கவும் உதவுகிறது. இது ஒரு கண்டிஷனர் போல செயல்பட்டு, தலைமுடியை மென்மையாக வைக்கிறது. மேலும் இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. இதற்கு கற்றாழையை வெட்டி ஜெல்லை அகற்றி, அதிலிருந்து புதிய ஜெல்லை எடுத்து தலைமுடியில் தடவலாம். கற்றாழையுடன் எதையும் கலக்க வேண்டியதில்லை. தூய ஜெல்லைப் பூசி 45 நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் கழுவலாம். இது முடியை பலப்படுத்துகிறது.
கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்
கறிவேப்பிலையை வறுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து, அது கருப்பு நிறமாக மாறும்போது அடுப்பை அணைக்க வேண்டும். பின், இதை ஆறவைத்து வடிகட்டி, உச்சந்தலையில் நன்றாக தடவி ஒரு மணி நேரம் வைத்திருக்கலாம். பின்னர் ஒரு எளிய இயற்கை ஷாம்பூ கொண்டு கழுவலாம்.
மசாஜ் செய்வது
விரல் நுனியால் உச்சந்தலையை மசாஜ் செய்வது மிகவும் தளர்வானது. மேலும், சீப்பை எடுத்து பின்புறத்திலிருந்து முன்பக்கமாக சீவுவது வேர் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. முடிந்தவரை, மோர் அல்லது தயிர் பயன்படுத்தி அதை உங்கள் உச்சந்தலையில் தேய்த்து பின்னர் குளித்தால் பொடுகை நீக்கலாம். கசப்பான வேப்ப இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் கொண்டு தலைமுடியைக் கழுவலாம். இது எந்த தொற்றையும் ஏற்படுத்தாது மற்றும் பிரச்சனையையும் தடுக்க உதவுகிறது.
இறுதியாக, ஒரு நல்ல இரவு தூக்கம் நிச்சயமாக எல்லா இடங்களிலும் உதவுகிறது. மேலும் மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும். மன அழுத்தம், பதட்டம் இல்லாத வாழ்க்கையின் மூலம் பல பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவும் உதவலாம்: பருவகால முடி உதிர்வால் அவதியா? நிபுணர் சொன்ன இந்த 5 உணவுகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version