நவீன வாழ்க்கை முறை, தூசி, மாசு, மன அழுத்தம், சீரற்ற உணவு பழக்கம் போன்ற காரணங்களால் இன்று முடி உதிர்வு அதிகரித்து வருகிறது. இளம் தலைமுறையினரிடையே கூட முடி குறைவு பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்நிலையில், ஆரோக்கியமான மற்றும் இயற்கையான தீர்வாக எளிதில் கிடைக்கும் பாதாம் எண்ணெய் (Almond Oil), முடி வளர்ச்சி மற்றும் அடர்த்திக்கு அற்புத பலன்களை அளிக்கும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
பாதாம் எண்ணெயில் என்ன இருக்கிறது?
பாதாம் எண்ணெயில் அதிக அளவு Vitamin E, Magnesium, Biotin, Omega fatty acids ஆகியவை உள்ளன. இவை முடி வேர்களை பலப்படுத்தி, உதிர்வை தடுக்கின்றன.
- Vitamin E: முடி உதிர்வை குறைத்து, வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
- Magnesium: முடி வேர்களுக்கு தேவையான சத்துகளை வழங்கும்.
- Biotin: புதிய முடி வளரும் வேகத்தை அதிகரிக்கும்.
- Omega-3 Fatty acids: முடி கம்பியை பலப்படுத்தி முறிவு ஏற்படாமல் காக்கும்.
பாதாம் எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம்?
இரவில் தடவலாம்
படுக்கப் போவதற்கு முன் ஒரு சிறிய கிண்ணத்தில் பாதாம் எண்ணெயை எடுத்து, சிறிது சூடாக்கி, தலையில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வேர்களுக்கு சத்து சேர்க்கும். தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால், முடி அடர்த்தி கணிசமாக அதிகரிக்கும்.
தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவுங்கள்
பாதாம் எண்ணெய் + தேங்காய் எண்ணெய் (சம அளவு) கலந்து தடவினால், முடி வேர்கள் வலுப்பெறும். குறிப்பாக உதிர்வு அதிகம் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாகும்.
Hair Mask-ல் சேர்த்துக் கொள்ளலாம்
கற்றாழை ஜெல், வெந்தயம் தூள், எலுமிச்சை சாறு போன்றவற்றில் சில துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து முடி பேக் போடலாம். இதனால் தலையசை சுத்தமாகி, முடி இயற்கையாக மென்மையாகும்.
ஷாம்பூவுக்குப் பின்
முடியை கழுவிய பின் சிறிது பாதாம் எண்ணெயை கையில் எடுத்து முடி முனைகளில் தடவினால் serum போல செயல்பட்டு split ends குறையும்.
பாதாம் எண்ணெய் தரும் முக்கிய நன்மைகள்
* முடி வேகமாக வளர உதவும்.
* உதிர்வை குறைத்து வேர்களை பலப்படுத்தும்.
* முடியை தடிமனாக்கி அடர்த்தியாக மாற்றும்.
* தலையசையில் ஏற்படும் பொடுகை குறைக்கும்.
* இயற்கையான மினுமினுப்பு தரும்.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
பாதாம் எண்ணெயில் உள்ள Vitamin E மற்றும் Biotin முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. வாரத்தில் 2-3 முறை பாதாம் எண்ணெயை தடவுவது முடி அடர்த்தியை அதிகரிக்கும். ஆனால் வேறு கெமிக்கல் எண்ணெய்களுடன் கலந்து பயன்படுத்தக் கூடாது என தோல் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்.
யாருக்கு மிகவும் பயனளிக்கும்?
* கர்ப்பத்திற்குப் பிறகு முடி உதிர்வால் பாதிக்கப்படும் பெண்களுக்கு.
* மாசு, தூசி காரணமாக உதிர்வு அதிகமாக உள்ளவர்களுக்கு.
* மெலிந்த மற்றும் முறியும் தன்மை கொண்ட முடி உள்ளவர்களுக்கு.
குறிப்பு
முடி வளர்ச்சி மற்றும் அடர்த்திக்காக பல்வேறு கெமிக்கல் சிகிச்சைகளுக்கு செல்லாமல், வீட்டிலேயே கிடைக்கும் பாதாம் எண்ணெயை சீராகப் பயன்படுத்தினால் முடி “அசுர வேகத்தில்” வளரும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version