Coconut Water: தேங்காய் தண்ணீர் குடிப்பதால் வரும் பக்க விளைவுகள்!

  • SHARE
  • FOLLOW
Coconut Water: தேங்காய் தண்ணீர் குடிப்பதால் வரும் பக்க விளைவுகள்!


Coconut Water: சுகாதார உணர்வுள்ள நபர்களிடையே பிரபலமான ஒன்று தேங்காய் தண்ணீர் உள்ளது. இது பல நன்மைகளை வழங்கினாலும், சில இயற்கையான உணவுகள் கூட பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதில் ஒன்றுதான் தேங்காய் தண்ணீர். 'பயோமெட் ரிசர்ச் ஆன்லைன்' இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தேங்காய் நீர் நுகர்வு சிறுநீர் பொட்டாசியத்தை அதிகரிக்கிறது, அதன் அதிகப்படியான அளவு உயிருக்கு ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் தண்ணீர் பக்க விளைவுகள்

தேங்காய் நீர் ஒரு இயற்கை எலக்ட்ரோலைட் நிறைந்த பானமாகும். இதில் கலோரிகள், சர்க்கரை அளவு குறைவாக உள்ளது. அதேபோல் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற முக்கியமான தாதுக்கள் நிறைந்துள்ளன. உங்களை நீரேற்றம் செய்வதற்கும் புத்துணர்ச்சியுடன் உணருவதற்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். (குறிப்பாக வெப்பமான நாட்களில்)

இதையும் படிங்க: சொத்தைப் பற்களுக்கான ரூட் கெனால் சிகிச்சை - முழு விவரங்களையும் மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்வோம்

எந்த ஒரு உணவையும் உட்கொள்வதற்கு முன், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் தண்ணீரும் அப்படிதான்.

தேங்காய் தண்ணீர் மூலம் ஏற்படும் தீமைகள்

வயிற்றுப்போக்கு: தேங்காய் நீரில் பொட்டாசியம் நிரம்பி வழிகிறது. தேங்காய் தண்ணீரை அதிகமாக உட்கொள்வது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

அதிக சர்க்கரை உள்ளடக்கம்: ஒவ்வொரு முறையும் தேங்காயை உடைத்து நீரை அருந்த முடியாது. எனவே சில நேரங்களில் நீங்கள் கடையில் வாங்கும் முன் பேக்கேஜ் செய்யப்பட்ட தேங்காய் தண்ணீரை நம்பியிருக்கும் நிலை ஏற்படும். சில வணிக நிறுவனங்கள் தேங்காய் நீரில் கூடுதல் சர்க்கரைகளை சேர்க்கின்றனர். இது அதிக சர்க்கரை உள்ளடக்கத்தை உடலுக்கு வழங்குகிறது. லேபிளை சரிபார்த்து அதன் உள்ளடக்கத்தை அறிந்து தேங்காய் நீரை வாங்கிப் பருகுங்கள்.

ஒவ்வாமை பிரச்சனை: அரிதாக இருந்தாலும், சில நபர்களுக்கு தேங்காய் நீரில் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம். இது அரிப்பு, படை நோய் அல்லது வீக்கம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். ஒவ்வாமை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக சுகாதார நிபுணரை அணுகவும்.

மருந்துகள் பிரச்சனை: தேங்காய் நீரில் இயற்கையாகவே பொட்டாசியம் அதிகமாக உள்ளது, இது டையூரிடிக்ஸ் மற்றும் ACE தடுப்பான்கள் போன்ற சில மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம். எனவே ஏதேனும் மருந்துகள் நீங்கள் எடுத்துக் கொண்டால் மருத்துவர் பரிந்துரையை பெறுவது நல்லது.

இரைப்பை குடல் பிரச்சனை: குறைந்த காலத்தில் தேங்காய் தண்ணீரை உட்கொள்வது சிலருக்கு வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பு போன்றவைக்கும் வழிவகுக்கலாம்.

தேங்காய் தண்ணீரை பாதுகாப்பாக குடிப்பது அவசியம்

எந்தவொரு உணவுமும், பானமும் அதிகமாக உட்கொள்வது என்பது தீங்கு தான். எனவே பாதுகாப்பாக இருக்க எதையும் அளவாகா உண்டு உண்ணும் உணவையே மருந்தாக மாற்றுங்கள்.

சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரக கோளாறுகளால் அவதிப்படுபவர்களுக்கு தேங்காய் தண்ணீர் உதவும். இருப்பினும், அதிக அளவு பொட்டாசியம் சிக்கலை மோசமாக்கும்.

இதையும் படிங்க: Kidney Infections: இருப்பதை எப்படி தெரிந்துக்கொள்வது

மிதமான மற்றும் சீரான உணவின் ஒரு பகுதியாக உட்கொள்ளும் போது தேங்காய் நீர் நிச்சயமாக புத்துணர்ச்சியூட்டும் மற்றும் சத்தான பானமாக இருக்கும். இது பல நன்மைகளை வழங்கினாலும், அதன் சாத்தியமான பக்க விளைவுகள் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உடல் தொடர்பாக ஏதேனும் தீவிரத்தை உணரும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

Image Source: FreePik

Read Next

Alcohol Side Effects: அதிகமாக மது அருந்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்!

Disclaimer

குறிச்சொற்கள்