இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இவை அனைத்திற்கும் உடலில் கொழுப்பு அதிகரிப்பதே காரணமாகும். உடலில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என இரண்டு வகைகள் உள்ளன. நல்ல கொழுப்பு அதிகரிப்பது உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால், கெட்ட கொழுப்பு அதிகரிப்பது உடலுக்குப் பல வகையான பிரச்சனைகளைத் தருகிறது.
எனவே இந்த அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த மருத்துகள் இல்லாமல் பின்பற்ற வேண்டிய சில எளிய குறிப்புகள் குறித்து மருத்துவர் ஹன்சாஜி அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் கூற்றுப்படி,”கொலஸ்ட்ரால் என்பது ஒரு நோய் அல்ல. இது நம் உடலில் உள்ள ஒரு இயற்கையான பொருள், ஆனால் அது சமநிலையை மீறும் போது, இதயம், ஆற்றல் மற்றும் மனதின் தெளிவை கூட பாதிக்கத் தொடங்குகிறது” என்று கூறுகிறார்.
அதனைத் தொடர்ந்து, பல சந்தர்ப்பங்களில் இந்த ஏற்றத்தாழ்வுக்கு உடனடி மருந்து தேவையில்லை. அதற்குத் தேவையானது உணவு, தினசரி பழக்கவழக்கங்கள் மற்றும் அமைதியான நனவான வாழ்க்கை முறை மூலம் சரிசெய்வது போன்றவை உதவும் என குறிப்பிடுகிறார். இதில் கொலஸ்ட்ரால் அளவை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான சில இயற்கை வழிகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: கொழுப்பை அதிகரித்து மாரடைப்பு ஏற்படுத்தும் இந்த 6 காலை உணவுகளை நீங்க கட்டாயம் தவிர்க்கணும்
கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவும் சிறந்த வழிகள்
வெண்பூசணி சாறு
காலை எழுந்ததும் வெண்பூசணி சாறு குடிப்பது உடலுக்கு ஒரு சக்திவாய்ந்த காலை மீட்டமைப்பாக அமைகிறது. இது சற்று குளிர்ச்சியடையச் செய்கிறது மற்றும் அதிகப்படியான கொழுப்பு மற்றும் நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் கல்லீரலை ஆதரிக்கிறது. இவை உடலுக்கு மென்மையானது மற்றும் ஆழமாக நீரேற்றத்தைத் தருகிறது. இதில் பொட்டாசியம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை இரண்டுமே இதயத்திற்கு நன்மை பயக்கும்.
வெண்பூசணி சாறு தயார் செய்ய, சுமார் 100 கிராம் வெண்பூசணியை தோலுரித்து நறுக்க வேண்டும். இதில் சிறிது தண்ணீர் சேர்த்து, வடிகட்டி வெறும் வயிற்றில் புதிதாக குடிக்க வேண்டும். வாரத்திற்கு ஐந்து நாட்கள் இதைச் செய்யலாம்.
சேம்பு இலை
கொலோகாசியா இலைகள் (செப்பங்கிழங்கு இலை) கொழுப்பைக் குறைப்பதற்கான சிறந்த தீர்வாகும். இந்த இலைகள் இதய வடிவிலான இலைகள் ஆகும். இதில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை இரத்த லிப்பிடுகளை ஒழுங்குபடுத்தவும், செரிமானத்திற்கும் உதவுகின்றன. இந்த இலைகளில் உள்ள பாலிஃபீனால்கள் எனப்படும் பைட்டோ கெமிக்கல்கள் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு மற்றும் உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
2 முதல் 3 புதிய கொலோகாசியா இலைகளை எடுத்துக் கொண்டு, அதை நன்றாகக் கழுவ வேண்டும். இதை தண்ணீரில் சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கலாம். இதை வடிகட்டி சூடான தேநீரைக் குடிக்கலாம். இதில் சேர்க்கப்படும் இஞ்சி மற்றும் ஓமம் போன்றவை செரிமானத்திற்கு உதவுகிறது. இதை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை குடிக்கலாம்.
வெந்தய விதைகள்
இவை கொழுப்பைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கு ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இவை ஆரோக்கியமான கொழுப்பின் அளவை ஆதரிக்கிறது.
அடுத்ததாக, கொழுப்பின் அளவைக் குறைப்பதில் உணவு எவ்வாறு மருந்தாகிறது என்பது குறித்து குறிப்பிடுகிறார். கொழுப்பைக் குறைக்க உணவில் எதைச் சேர்க்க வேண்டும் என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வயிற்றில் தேங்கிய கொழுப்பை அடியோடு நீக்க இந்த ஒரு மசாலா பொருளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க
சமையல் எண்ணெய்
சமையலுக்கு தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் மற்றும் நிலக்கடலை எண்ணெய் போன்ற பாரம்பரிய இந்திய எண்ணெய்களைப் பயன்படுத்த வேண்டும். இவை இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் வளமான மற்றும் நல்ல கொழுப்புகள் ஆகும்.
ஆளி விதைகள்
அடுத்ததாக, ஆளி விதைகளை தினசரி ரொட்டி மாவில் சேர்க்கலாம். மேலும் இதை காலை உணவில் தெளிக்கலாம். இதை அரை டீஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம்.
மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு
மூன்றாவதாக, உடலின் இரத்த நாளங்களில் வீக்கத்தைக் குறைக்க மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு சேர்த்துக் கொள்ளலாம். இதை உணவுக்கு முன் எடுத்துக் கொள்வது கொழுப்பைக் குறைக்கிறது. ஒரு சிட்டிகை வெதுவெதுப்பான நீரில் இதை சேர்ப்பது உடலின் இரத்த நாளங்களில் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
சுவாசப்பயிற்சி செய்வது
அதிக கொழுப்பின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட காரணங்களில் மன அழுத்தம், பதட்டம் போன்றவை அடங்குகிறது. இதனால் கல்லீரல் நெரிசலாகிறது. மேலும் சுவாசம் ஆழமற்றதாகிறது. எனவே தான் பிராணயாமா மற்றும் வழக்கமான நடைபயிற்சி மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொரு காலையிலும் 5 நிமிடங்கள் யோகேந்திர பிராணயாமா செய்வது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும், சிறந்த இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அளிக்கவும் உதவுகிறது.
நடைபயிற்சி
உணவுக்குப் பிறகு மென்மையான நடைப்பயணத்திற்குச் செல்ல வேண்டும். 100 படிகள் மட்டும் நடப்பது கொழுப்பு செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் காலப்போக்கில் கொழுப்பைக் குறைக்கிறது.
துளசி இலையை சாப்பிடுவது
இது தவிர, மதிய உணவுக்குப் பிறகு துளசி துளசி இலையை மென்று சாப்பிடலாம். இது இது கல்லீரலில் கொழுப்பைக் குறைக்கவும், சிறப்பான வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
இந்த பழக்க வழக்கங்களின் உதவியுடன் உடலில் தேங்கிய கொழுப்பைக் கட்டுப்படுத்துவதுடன் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: கொழுப்பு அதிகமா இருக்கா.. இப்படி மட்டும் பண்ணுங்க.. டக்குன்னு குறையும்.! மருத்துவர் அட்வைஸ்..
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Sep 26, 2025 22:44 IST
Published By : கௌதமி சுப்ரமணி