$
Is It Good To Drink Turmeric Water During Pregnancy: பொதுவாக மஞ்சள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருவதாக அமைகிறது. இது போன்ற ஏராளமான நன்மைகளைக் கொண்டிருப்பினும், இதை கர்ப்பிணிப் பெண்கள் எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும் ஒன்றாகும்.
உண்மையில் கர்ப்பிணிப் பெண்கள் தினமும் மஞ்சள் தண்ணீர் அல்லது மஞ்சள் பால் குடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் கர்ப்ப காலத்தில் மஞ்சள் தண்ணீர் குடிப்பது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆரோக்கியமானதா என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் பிரியங்கா ரோஹத்கி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Joint Pain During Pregnancy: கர்ப்ப காலத்தில் ஏற்படும் மூட்டு வலிக்கான காரணம் என்ன தெரியுமா?
கர்ப்ப காலத்தில் மஞ்சள் தண்ணீர் குடிக்கலாமா?
இது குறித்து டாக்டர் பிரியங்கா ரோஹத்கி அவர்கள் கூறிய போது, “பல ஆண்டுகளாக இந்திய வீடுகளில் மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சுவையுடன் கூடிய பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த சிறந்த மஞ்சள் பொருளாகும். மஞ்சளை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான நோயெதிர்ப்புச் சக்தியைப் பெற முடியும்” என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், “கர்ப்பிணிகள் மஞ்சள் சாப்பிடுவதாக இருப்பினும், அதை குறைந்த அளவு உட்கொள்வது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் மஞ்சளை அதிகமாக உட்கொள்வது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கலாம். இந்த காரணத்திற்காகவே, கர்ப்ப காலத்தில் மஞ்சள் தண்ணீரை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்” என்று கூறினார்.

கர்ப்பிணி பெண்கள் மஞ்சள் நீர் உட்கொண்டால் என்ன ஆகும்?
கர்ப்ப காலத்தில் பெண்கள் மஞ்சள் கலந்த நீரை உட்கொள்வதால் என்னென்ன விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பது குறித்து பார்ப்போம்.
- கர்ப்பிணிப் பெண்கள் மஞ்சள் கலந்த தண்ணீரை உட்கொள்வதால், அது ‘ப்ரீக்ளாம்ப்சியா’ என்ற நிலையை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கருவில் உள்ள குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் இரத்தப்போக்கு உண்டாகலாம்.
- மஞ்சளில் உள்ள குர்குமின் கலவையான ஒரு முக்கிய அங்கமாக செயல்படுகிறது. எனவே, மஞ்சள் நீரை உட்கொள்வதால் குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகலாம்.
- அதிலும், கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் மஞ்சள் கலந்த நீரை பருகுவது, பிரசவ வலியை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் சர்க்கரையைத் தவிர்த்தால் உங்களுக்கு மட்டுமல்ல! உங்க குழந்தைகளுக்கும் நல்லது
- மேலும் சில சமயங்களில் இந்த மஞ்சள் கலந்த நீர் அருந்துவதால் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு கருச்சிதைவு ஏற்படவும் வழிவகுக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- உண்மையில் மஞ்சள் ஒரு சூடான விளைவைக் கொண்டதாகும். எனவே கர்ப்ப காலத்தில் மஞ்சள் நீர் உட்கொள்வதால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
- மருத்துவர் பிரியங்கா ரோஹத்கி கூறுகையில், “கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாக மஞ்சள் தண்ணீர் குடிப்பதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கர்ப்ப காலத்தில் மஞ்சள் தண்ணீரை எப்படி குடிக்கலாம்?
மஞ்சள் தண்ணீரை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ள விரும்பினால், அவர்கள் சில சிறப்பு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதன் படி, கர்ப்பிணிகள் 30 மில்லிக்கு மேல் மஞ்சள் கலந்த தண்ணீரைக் குடிக்கக் கூடாது. மேலும் மஞ்சள் கலந்த நீரை எப்போதும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இது தவிர, கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகளான டிக்கடி வாந்தி, குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்றவை இருப்பின் அல்லது உடல் நலத்தைப் பாதிக்கும் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் மஞ்சள் தண்ணீரை உட்கொள்ளும் முன் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பெருங்காயம் சாப்பிடலாமா? நிபுணர் கூறும் கருத்து என்ன?
Image Source: Freepik
Read Next
Moringa Leaves Benefits: கர்ப்ப காலத்தில் முருங்கை கீரை சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா.?
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version