Monsoon Eye Care: மழைக்காலத்தில் கண்களைப் பாதுகாக்க இத நீங்க கட்டாயம் செய்யணும்

  • SHARE
  • FOLLOW
Monsoon Eye Care: மழைக்காலத்தில் கண்களைப் பாதுகாக்க இத நீங்க கட்டாயம் செய்யணும்


Eye Care Tips In Rainy Season: கோடை வெப்பத்திலிருந்து விடுபட்டு மழைக்காலத்திற்கு திரும்புவது சந்தோஷத்தைத் தருவதாக இருப்பினும், நம்மைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும். இவை பல சவால்களை எடுத்துரைக்கிறது. ஏனெனில், மழைக்காலங்களிலேயே நோய்த்தொற்றுக்கான பரவல் அதிகமாகக் காணப்படுகிறது. அதிகரித்த ஈரப்பதத்தால் நீர் மூலம் பரவும் தொற்றுக்கள் ஏராளம் உள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்குப் பாதகமான விளைவுகளையேத் தருகிறது. இந்த வகை நோய்த்தொற்றுக்களிலிருந்து நம் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.

அந்த வகையில் கண்களின் ஆரோக்கியத்திற்குத் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் பருவகாலத்தில் கண் சமபந்தமாக பல கோளாறுகள் ஏற்படலாம். அதில் முக்கியமாக சில கான்ஜுன்க்டிவிடிஸ், உலர் கண்கள், கார்னியல் அல்சர், கண் வாடை போன்றவை அடங்கும். இதனால் கண்களில் எரியும் உணர்வு, வீக்கம் போன்றவை ஏற்படலாம். எனினும், சரியான கவனிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் உதவியுடன் கண்களை ஆரோக்கியமாக மற்றும் பிரகாசமாக வைத்திருக்க முடியும். இதில் பருவமழையின் போது கண்களைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Monsoon Health Tips: மழைக்காலம் வர போது… இதை எல்லாம் மனசுல வச்சிக்கோங்க…

மழைக்காலத்தில் ஏற்படும் கண் நோய்கள்

கன்ஜக்டிவிடிஸ்

கன்ஜக்டிவிடிஸ் என்பது பெரும்பாலும் "இளஞ்சிவப்பு கண்" என்று சாதாரணமாக குறிப்பிடப்படுகிறது. அதாவது கண்களில் வீக்கம் ஏற்படுவதைக் குறிக்கிறது. இவை கண்ணிமையின் உள் மேற்பரப்பை வரிசைப்படுத்தி கண்ணின் வெள்ளைப் பகுதியை உள்ளடக்கிய மெல்லிய, வெளிப்படையான திசு அடுக்கு ஆகும்.

உலர் கண்கள்

கண்களில் நீர் திரவம் என்றும் அழைக்கப்படும் போதுமான திரவ கண்ணீரை உற்பத்தி செய்ய முடியாத போகலாம். இது உலர் கண்களை ஏற்படுத்துகிறது. இந்நிலைக்கான மருத்துவ சொல்லானது கெரடோ-கான்ஜுன்க்டிவிடிஸ் எனப்படுகிறது. அதாவது உலர் கண்கள் பிரச்சனையானது நீண்ட நேரம் கணினித் திரையைப் பார்க்கும் போதோ அல்லது படிக்கும்போதோ கண்கள் வறண்டு போவதுடன், மோசமான கண் சிமிட்டும் பழக்கம் ஏற்படலாம். இதனால் கண்களின் உட்புற சூழல் பாதிக்கப்பட்டு இந்த பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

கார்னியல் அல்சர்

இது கருவிழியில் திறந்த புண் ஆகும். இதற்கு முக்கிய காரணம் நோய்த்தொற்று ஆகும். இதன் அறிகுறிகளில் கண்களில் சிவப்பு, நீர் வடிதல், இரத்தக் கண்கள் போன்றவை அடங்கும். இதில் கடுமையான கண் வலி மற்றும் சீழ் போன்றவை ஏற்படலாம். இந்த கார்னியல் அல்சர் பார்வை இழப்பு மற்றும் குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கலாம். இது மருத்துவ நிலையில் அவசர நிலையாகக் கருதப்படுகிறது.

ஸ்டை

கண் இமையின் விளிம்பில் உள்ள வலிமிகுந்த சிவப்பு பம்ப் ஆனது ஸ்டை எனப்படுகிறது. இது ஒரு மென்மையான முகப்பருவைப் போல தோற்றமளிக்கக் கூடியதாகும். இந்த வகை தொற்றானது கண் இமை நுண்குமிழி அல்லது கண் இமை தோலில் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒரு சிறிய சுரப்பி தடுக்கப்பட்டு பாக்டீரியா தொற்று உருவாகும் போது இது உருவாகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Monsoon Prevention Tips: மழையில் நனைந்த பிறகு சாதாரண நீரில் குளிக்க சொல்வது ஏன் தெரியுமா?

மழைக்காலத்தில் கண்களைப் பராமரிப்பதற்கான குறிப்புகள்

கண்கள் தொடுவதைத் தவிர்த்தல்

மழைக்காலத்தில், கண்கள் தொடுவதைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக, வைரஸ் தொற்று உள்ள ஒருவருடன் கைகுலுக்கி அல்லது பாதிக்கப்பட்ட பொருளுடன் தொடர்பு கொண்ட பிறகு கண்களைத் தொடுவதால் அவர்களுக்கு தொற்று ஏற்படலாம்.

சன்கிளாஸ் அணியலாம்

மழைக்காலங்கள் மழைநீர் தெறிப்பதின் நேரடித் தொடர்பைத் தவிர்க்க வேண்டும். இதற்கு வெளியில் செல்லும் போது சன்கிளாஸ்கள் அல்லது பாதுகாப்பான கண்ணாடிகளை அணியலாம்.

பாதிக்கப்பட்ட இடத்தைச் சுற்றி கவனம்

பொதுவாக குளங்கள் மற்றும் நீர் பூங்காக்கள் போன்ற இடங்கள் பாக்டீரியா மற்றும் தொற்றுநோய்களின் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக அறியப்படுகிறது. ஏனெனில், இந்தப் பகுதிகளில் உள்ள நீர் நிறைய பேரால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இதில் குளத்தை முழுவதுமாகத் தவிர்ப்பது நல்லது. அதில் குறிப்பாக பருவத்தில் கண் தொற்று இருந்தால் குளத்தைத் தவிர்க்க வேண்டும்.

நாப்கின் பயன்பாட்டைத் தவிர்ப்பது

பொதுவாக கண் நோய்த்தொற்றுகள் பரவக்கூடியதாகும். எனவே கைக்குட்டைகள், நாப்கின்கள் மற்றும் துண்டுகள் போன்ற தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களைப் பகிர்ந்துகொள்வது , வைரஸ் மற்றும் பாக்டீரியாவை பரவுவதற்குக் காரணமாகிறது.

காற்று மற்றும் தூசிகளிலிருந்து கண்களைப் பாதுகாப்பது

மழைக்காலத்தில் புழுதிப்புயல்கள் தவிர்க்க முடியாததாக அமைகிறது. சில சமயங்களில் கணிக்க முடியாததாக காணப்படலாம். பலத்த காற்று மற்றும் உங்கள் கண்களில் உள்ள தூசி துகள்கள் எரிச்சல் மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்தலாம். எனவே கண்களைப் பாதுகாப்பது அவசியமாகும். இது கண்களில் அரிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. எனவே கண்களுக்குள் தூசி துகள்கள் நுழைவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த்தொற்று பரவலிலிருந்து கண்களைப் பாதுகாக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Respiratory Infections: மான்சூன் காலத்தில் பரவும் சுவாச நோய்கள் இவை தான்! எப்படி தடுப்பது?

Read Next

Pani Puri: பானிபூரி சாப்பிட்டால் கேன்சர் வருமாம்? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version