Paneer Butter Masala Recipe in Tamil: நம்மில் பலருக்கு பன்னீர் பட்டர் மசாலா மிகவும் பிடிக்கும். எப்போது ஹோட்டலுக்கு சாப்பிட சென்றாலும் சைவ விரும்பிகள் பெரிதும் விரும்பி சாப்பிடுவது பன்னீர் பட்டர் மசாலா தான். வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா எப்படி செய்வது என நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். இந்த முறை வீட்டிலேயே சுவையான பன்னீர் பட்டர் மசாலா செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
முக்கிய கட்டுரைகள்
பன்னீர் - 300 கிராம்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
காய்ந்த சிவப்பு மிளகாய் - 10
தக்காளி - 3
முந்திரி பருப்புகள் - 1/4 கப்
நெய் - 3 தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பவுடர் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கஸுரி மெதி
கொத்துமல்லி தழை
இனிப்பில்லாத கோவா - 50 கிராம்
பால் - 3 மேசைக்கரண்டி
கிரீம் - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
பன்னீர் பட்டர் மசாலா செய்முறை:

- பன்னீர் பட்டர் மசாலா செய்வதற்கு கடாயில் எண்ணெய், நறுக்கிய பெரிய வெங்காயம், காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானவுடன் நறுக்கிய தக்காளி, முந்திரி பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- நன்கு வதக்கிய பின்பு சிறிது நேரம் ஆறவையிட்டு அரைக்கவும்.
- அடுத்து ஒரு கடாயில் நெய், கஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து மீதமான தீயில் கலக்கவும்.
- இந்த கலவையில் அரைத்த மசாலா, கரம் மசாலா தூள், கசூரி மேத்தி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கி பத்து நிமிடத்திற்கு குறைவான தீயில்.
- இந்த குழம்பின் அடர்த்தி அதிகரிக்க, ஒரு மிக்ஸியில் இனிப்பில்லாத கோவா, சிறிதளவு பால் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- இந்த அரைத்த கோவா கலவையை மசாலாவில் சேர்த்து இதனுடன் பிரெஷ் கிரீம், சிறிதளவு சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- இந்த கலவையில் நறுக்கிய பன்னீர் சேர்த்து நன்கு கலக்கிய பின்பு பத்து நிமிடத்திற்கு குறைவான தீயில் வேகவைக்கவும்.
- பத்து நிமிடத்திற்கு பின்பு கசூரி மேதி சேர்த்து நன்கு கலக்கிய பின்பு வெண்ணெய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
பன்னீர் சாப்பிடுவதன் நன்மைகள்:

எலும்புகளை வலுவாக்கும்: கால்சியம் நிறைந்த சீஸ் எலும்புகளை வலுப்படுத்த மிகவும் முக்கியமானது. மூட்டு வலி வராமல் தடுக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். இது தொற்றுநோயைத் தடுக்கவும் அதிலிருந்து விரைவாக மீட்கவும் உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்: பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை சாதாரண இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பனீரில் இவை அனைத்தும் நல்ல அளவில் இருப்பதால், ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தோல் மற்றும் முடி ஆரோக்கியம்: பனீரில் உயர்தர புரதம் உள்ளது, இது உடலின் பல முக்கிய செயல்பாடுகள் சரியாக இயங்குவதற்கு மிகவும் முக்கியமானது. தோல் மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்க, உணவில் போதுமான புரதம் இருக்க வேண்டும்.
எடையை நிர்வாகிக்க உதவுகிறது: சீஸ் உட்கொள்வது எடை இழப்பு மற்றும் அதிகரிப்பு ஆகிய இரண்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் குறிக்கோளுக்கு ஏற்ப சரியான அளவில் அதை உட்கொள்ள வேண்டும்.
தசையை கட்டமைக்க உதவுகிறது: தசைகள் வளர மற்றும் வலுப்படுத்த, போதுமான புரதம் தேவைப்படுகிறது, இது பாலாடைக்கட்டியில் ஏராளமாக உள்ளது.
Pic Courtesy: Freepik