
இன்று பலரும் தங்களுக்கு அடர்த்தியான, பளபளப்பான மற்றும் வலிமையான முடியைப் பெற விரும்புகின்றனர். இதில் பெரும்பாலானோர் மறந்துவிடும் ஒரு விஷயம் என்னவென்றால், சிறந்த முடியைப் பெறுவதற்கான செயல்முறை உச்சந்தலையில் இருந்துதான் தொடங்குகிறது. உச்சந்தலையின் ஆரோக்கியம் முடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். ஆனால் இந்த நிலைமை சிக்கலாக மாறும் வரை இது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. இது குறித்து மும்பையில் உள்ள டாக்டர் பத்ராஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் எம்.டி மற்றும் ட்ரைக்காலஜிஸ்ட் டாக்டர் அக்ஷய் பத்ரா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
முக்கியமான குறிப்புகள்:-
அவரின் கூற்றுப்படி, இந்தியாவில் 10 பேரில் கிட்டத்தட்ட 8 பேர் முடி மற்றும் உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தாலும், ஒரு நல்ல செய்தி என்னவெனில், உங்கள் உச்சந்தலை எப்போதும் சில அறிகுறிகளை வழங்குகிறது. உங்கள் உச்சந்தலையின் ஆரோக்கியம் என்று வரும்போது நீங்கள் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாத ஐந்து எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றி இங்குக் காணலாம்.
புறக்கணிக்கக் கூடாத உச்சந்தலை அறிகுறிகள்
1. தொடர்ச்சியான அரிப்பு மற்றும் செதில் உதிர்தல்
அரிப்பு மற்றும் செதில் உதிர்தல் போன்றவை பொதுவான பொடுகு என்று கருதப்படுகிறது. ஆனால் அவை அடிப்படையான பிரச்சனைகளைக் குறிக்கலாம். இது பொதுவாக சொரியாசிஸ், செபோரெயிக் டெர்மடிடிஸ் அல்லது டீனியா கேபிடிஸ் போன்ற பூஞ்சை தொற்று போன்ற நிலைகளின் ஆரம்ப அறிகுறியாகக் கருதப்படுகிறது.
பருவமழைக் காலத்தில் ஈரப்பதம், நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு உகந்த சூழலை வழங்குவதன் மூலம் இந்தப் பிரச்சனைகளை மோசமாக்குகிறது என்று மருத்துவர் விளக்குகிறார். தொடர்ந்து சொறிவது முடியின் வேர்களைப் பாதிப்பது மட்டுமல்லாமல், முடி உதிர்வையும் விரைவுபடுத்தலாம். இது செதில்கள் அல்லது எண்ணெயுடன் வரும்போது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமாக அமைகிறது. இந்த ஆரம்ப நிலைகளுக்கு சிகிச்சை அளிப்பது எதிர்காலத்தில் பெரிய உச்சந்தலை பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது.
2. காரணமற்ற முடி உதிர்தல்
ஒரு நாளைக்கு 50-100 முடிகள் முடி உதிர்வது இயல்பானதாகும். ஆனால் இது திடீரென்று அல்லது அதிகமாக நடந்தால், அது இயல்பானது அல்ல. முடி மெலிவதை, ஆங்காங்கே முடி உதிர்வதை, அல்லது வழக்கத்தை விட ஒரு நாளைக்கு அதிக முடி உதிர்வதைக் கண்டால், உச்சந்தலை அழுத்தத்தில் இருப்பதைக் குறிக்கிறது.
why-does-severe-hair-loss-occur-during-winter-season-Main-1765082797645.jpg
பொதுவான முடி உதிர்தல் ஈரப்பதத்தாலும், வெளிப்படையான முடி மெலிதல் உணர்ச்சிப்பூர்வமான அழுத்தத்தாலும் தூண்டப்படலாம். இந்த அறிகுறியைப் புறக்கணிக்க வேண்டாம் என்று டாக்டர் எச்சரிக்கிறார், இது வேர்களின் நிலையை மோசமாக்கி, உச்சந்தலையை இன்னும் ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது. மேலும், மீட்சி மற்றும் மீண்டும் முடி வளர்ச்சிக்கு வரும்போது, அதன் ஆரம்பகால தலையீடே முக்கியமானது.
இந்த பதிவும் உதவலாம்: முடி உதிர்தல், பொடுகு.. எல்லாவற்றுக்கும் ஒரு இயற்கை தீர்வு – கொய்யா இலை எண்ணெய்!
3. எண்ணெய் பிசுபிசுப்பான அல்லது வழுவழுப்பான உச்சந்தலை
எண்ணெய் பிசுபிசுப்பான உச்சந்தலை, குறிப்பாக பருவமழை காலத்தில், சருமத்தில் உள்ள செபம் சுரப்பில் ஒரு சமநிலையின்மை இருப்பதைக் குறிக்கிறது. அதிகப்படியான எண்ணெய் வியர்வை மற்றும் மாசுகளுடன் கலந்து, மயிர்க்கால்களை அடைக்கிறது. இது அரிப்பு, தொற்றுகள் மற்றும் பொடுகுக்கு வழிவகுக்கிறது.
இதற்கு சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால், இந்த சமநிலையின்மையானது இயற்கையான முடி வளர்ச்சி சுழற்சியைக் சீர்குலைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. சரியான உச்சந்தலை பராமரிப்புடன் கூடிய சரியான சுத்தம் செய்யும் பழக்கம், பாதிப்புகளைத் தடுக்க மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.
4. தொடர்ச்சியான சிவத்தல் அல்லது உச்சந்தலையில் தெரியும் மாற்றங்கள்
உச்சந்தலையில் சிவத்தல், வீக்கம் அல்லது செதில் செதிலான தோல் போன்றவை இயல்பானது அல்ல. இந்த மாற்றங்களுக்கான காரணங்கள் பொதுவாக பூஞ்சைகள் அல்லது சோரியாசிஸ் போன்ற தன்னுடல் தாக்க நோய்களால் ஏற்படும் அழற்சியாக இருக்கலாம்.
இந்தத் தெளிவான மாற்றங்களை ஒருவர் புறக்கணிக்கக் கூடாது என்று மருத்துவர் வலியுறுத்துகிறார். அழற்சி மோசமடைந்து உச்சந்தலைக்கோ அல்லது முடிக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தாமல் இருக்க, விரைவான சிகிச்சை முக்கியமாகும்.
5. அழகு நிலையங்கள் மற்றும் கடைகளில் கிடைக்கும் பொருட்களை நம்புதல்
பலர் தங்களுக்குத் தாங்களே நிவாரணம் தேடிக்கொள்ள அழகு நிலையங்களுக்கு விரைவது அல்லது கடைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவை பயனுள்ளதாகத் தோன்றினாலும், அவை பிரச்சனையை மறைக்கவே முனைகின்றன.
scalp-itching-Main
கடுமையான இரசாயனங்கள் உச்சந்தலையில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, உச்சந்தலையின் pH சமநிலையைக் குலைத்து, மயிர்க்கால்களை சேதப்படுத்துகிறது. பொருத்தமற்ற தயாரிப்புகள் பொடுகு அல்லது தொற்றுகளை மோசமாக்கக்கூடும். மாறாக, ஒரு முடி நிபுணரின் தொழில்முறை மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனையைப் பெறலாம்.
பிரச்சனைகளை சரிசெய்வது எப்படி
மினாக்ஸிடில் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் அல்லது பழக்கத்திற்கு அடிமையாக்கும் இரசாயன சிகிச்சை முறைகளைப் போலல்லாமல், ஹோமியோபதி சிகிச்சை உடல் ரீதியானதாக இருந்தாலும் சரி அல்லது உணர்ச்சி ரீதியானதாக இருந்தாலும் சரி, அதன் மூல காரணத்தை மையமாகக் கொண்டது என மருத்துவர் குறிப்பிடுகிறார். துஜா, கிராஃபைட்ஸ் மற்றும் சிலிசியா போன்ற தாவரங்கள் உச்சந்தலை பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வுகளாகக் கருதப்படுகிறது. மேலும் அவை வேர்களை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் நோய் மீண்டும் வராமல் தடுக்கவும் உதவுகின்றன. இந்த லேசான சிகிச்சைகள் கடுமையான பக்கவிளைவுகள் இல்லாமல் குணமடைய உதவுகின்றன.
ஆரோக்கியமான உச்சந்தலைக்கான 3 எளிய வீட்டுக்குறிப்புகள்
பொருத்தமான ஷாம்பூவைத் தேர்ந்தெடுப்பது: 5.5 pH சமநிலை கொண்ட ஷாம்பூ பொருத்தமானது.
வறட்சி: உச்சந்தலை வறட்சியடைந்தால், வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தடவ வேண்டும்.
நீரேற்றத்துடன் இருப்பது: உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
முடிவுரை
உங்கள் உச்சந்தலையின் பங்கு, முடியின் ஆரோக்கியத்தில் ஒரு அமைதியான ஆனால் மிகவும் சக்திவாய்ந்த பகுதியாக விளங்குகிறது. இந்த எச்சரிக்கை அறிகுறிகளை மனதில் கொண்டு, அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் நீண்ட கால சேதத்தைத் தவிர்க்கவும், அதைச் சமநிலைப்படுத்தவும் முடியும். மேலும் மென்மையான, முழுமையான பராமரிப்பு மற்றும் உடனடி நடவடிக்கை போன்ற விஷயங்கள் உச்சந்தலையைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், இறுதியில் வலுவான மற்றும் ஆரோக்கியமான முடிக்கும் வழிவகுக்கின்றன.
இந்த பதிவும் உதவலாம்: ஈரமான கூந்தலுடன் தூங்கினால் தலைவலி வருமா.? நிபுணர்கள் தரும் முக்கிய எச்சரிக்கை..
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Dec 15, 2025 12:32 IST
Published By : கௌதமி சுப்ரமணி

