Doctor Verified

ஈரமான கூந்தலுடன் தூங்கினால் தலைவலி வருமா.? நிபுணர்கள் தரும் முக்கிய எச்சரிக்கை..

ஈரமான கூந்தலுடன் தூங்குவது தலைவலி, சைனஸ், ஒற்றைத் தலைவலி போன்றவற்றை ஏற்படுத்துமா? டாக்டர் ஆர்.ஆர். தத்தா வழங்கும் மருத்துவ விளக்கம், அபாயங்கள், தீர்வுகள் மற்றும் தடுப்பு வழிமுறைகள்.
  • SHARE
  • FOLLOW
ஈரமான கூந்தலுடன் தூங்கினால் தலைவலி வருமா.? நிபுணர்கள் தரும் முக்கிய எச்சரிக்கை..

தினசரி அலுப்பின் காரணமாக இரவில் தலை குளித்த பிறகு உடனே உலர்த்தாமல் தூங்குவது பலருக்கும் பழக்கமாகிவிட்டது. “காலையில் பார்த்துக்கொள்வோம்” என்ற எண்ணத்துடன் படுக்கைக்கு செல்லும் இந்த எளிய பழக்கம் கூட சிலருக்கு அடிக்கடி தலைவலி, கண் கனத்தல், கழுத்து வலி போன்ற சிரமங்களை ஏற்படுத்தும். இப்பழக்கத்துக்கும் தலைவலிக்கும் இடையே உண்மையான தொடர்பு உள்ளதா? குருகிராமில் உள்ள பராஸ் ஹெல்த் மருத்துவமனையின் உள் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் ஆர்.ஆர். தத்தா இதுகுறித்து முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.


முக்கியமான குறிப்புகள்:-


ஈரமான கூந்தலுடன் தூங்கினால் தலைவலி வருமா?

உடல் வெப்பநிலை திடீரென மாறுவது பிரச்சனைக்கு காரணம்

தலைமுடி ஈரமாக இருப்பதால் உச்சந்தலை குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் உடல் வெப்பமாக இருக்கும். இந்த வெப்பநிலை வேறுபாடு உச்சந்தலையின் நரம்புகளைத் தூண்டி காலை எழுந்தவுடன் தலைவலி, கழுத்து விறைப்பு, தலையின் பின்புறம் கனத்த உணர்வு போன்றவற்றை ஏற்படுத்தும்.

மேலும் தலையில் நீண்ட நேரம் ஈரப்பதம் தங்குவதால் இரத்த ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு தலைவலியை அதிகரிக்கலாம். குளிர்ந்த காற்று நேரடியாக உச்சந்தலையைத் தாக்கும் போது இந்த பாதிப்பு மேலும் தீவிரமாகும்.

சைனஸ் மற்றும் ஒற்றைத் தலைவலியாளர்களுக்கு அதிக ஆபத்து

சைனஸ் நோயாளிகளுக்கு என்ன நடக்கும்? உச்சந்தலையின் ஈரப்பதமும் குளிர்ச்சியும் சைனஸிலுள்ள சளியை தடிமனாக்கும். இதனால் மறுநாள் காலை கடுமையான நெற்றி வலி, கண் கனத்தல், மூக்கடைப்பு, தலைவலி உருவாகும்.

ஒற்றைத் தலைவலி (Migraine) இருப்பவர்களுக்கு? திடீரென்று குளிர்ச்சியை அணுகுவது ஒற்றைத் தலைவலியைத் தூண்டிவிடும். கடுமையான வலி, குமட்டல், வெளிச்சத்தால் பாதிப்பு ஆகியவை உருவாகலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தலை ஈரமா இருந்தாலே சளி பிடிக்குமா? மருத்துவர் கார்த்திகேயன் சொன்ன உண்மையை கேட்டு ஷாக் ஆகிடுவீங்க!

ஈரமான கூந்தலுடன் தூங்குவதால் ஏற்படும் மற்ற உடல்நலப் பிரச்சனைகள்

* சளி பிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்

* முடிவேர்கள் பலவீனம் – அதிக முடி உதிர்தல்

* தலையணையில் ஈரப்பதம் காரணமாக பூஞ்சை தொற்று

* உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு அதிகரிப்பு

* கழுத்து வலி, கழுத்து விறைப்பு

இவை அனைத்தும் நீண்டகாலத்தில் கணிசமான சிரமங்களை ஏற்படுத்தக்கூடும்.

இறுதியாக..

ஈரமான கூந்தலுடன் தூங்குவது சிறிய பழக்கம் போல தோன்றினாலும், அது தலைவலி, சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, சளி, கழுத்து வலி போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக குளிர்காலத்தில் இதன் விளைவு அதிகம். எனவே, படுக்கைக்கு செல்லும் முன் தலைமுடியை முழுமையாக உலர்த்துவது அவசியம்.

Disclaimer: இந்தக் கட்டுரையின் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்தால் தகுதியான மருத்துவரை அணுகவும்.

Read Next

தேநீர் குடிப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகுமா? – நிபுணர் எச்சரிக்கை!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 16, 2025 11:50 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்