How To Get Rid Of Back Pain After Abortion: கருக்கலைப்புக்குப் பிறகு, பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பலவீனமாகிறார்கள். கருக்கலைப்புக்குப் பிறகு பெண்களின் உடலில் பல வகையான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவை குணமாக சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம்.
குறிப்பாக கருக்கலைப்புக்குப் பிறகு, முதுகுவலி மற்றும் வயிற்று வலி மிகவும் வேதனையாக இருக்கும். இந்த நேரத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது தவிர, இந்த வலியிலிருந்து நிவாரணம் பெற சில வீட்டு வைத்தியங்களின் உதவியையும் நீங்கள் நாடலாம். உங்களுக்கான சில வீட்டு வைத்தியம் இதோ.
கருக்கலைப்புக்குப் பிறகு முதுகுவலி பிரச்னை தீர இதை செய்யவும்..
சூடான தண்ணீர் குடிக்கவும்
கருக்கலைப்புக்குப் பிறகு இடுப்பு அல்லது முதுகு வலி இருந்தால், வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். வெந்நீர் குடிப்பது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும், இதனால் மலச்சிக்கல் பிரச்னை தீரும். இது தவிர, உங்கள் வயிறு மற்றும் முதுகில் கடுமையான வலி இருந்தால், நீங்கள் அந்த பகுதிகளை வெந்நீர் கொண்டு கழுவலாம்.
ஆயில் மசாஜ் செய்யவும்
கருக்கலைப்புக்குப் பிறகு, பல பெண்களுக்கு கடுமையான முதுகுவலி ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில், எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். முதுகில் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய, 1 கிண்ணம் கடுகு எண்ணெயை எடுத்துக் கொள்ளவும். இறுதியால சில பூண்டு மற்றும் கிராம்புகளை நறுக்கி சேர்க்கவும். அதன் பிறகு இதனை நன்றாக கொதிக்க வைக்கவும். பூண்டு பொன்னிறமாகும் வரை எண்ணெயை சூடாக்கவும். இந்த எண்ணெயைக் கொண்டு இடுப்பையும் வயிற்றையும் தொடர்ந்து மசாஜ் செய்யவும். இது உங்களின் வலியை குறைக்கலாம்.
ஹாட் பேக்
கருக்கலைப்புக்குப் பிறகு உங்களுக்கு முதுகுவலி இருந்தால், அந்த இடத்தில் ஹாட் பேக் வைக்கவும். இது உங்களை மிகவும் நன்றாக உணர வைக்கும். மேலும் வலியை குறைக்கும்.
சுறுசுறுப்பாக இருங்கள்
கருக்கலைப்புக்குப் பிறகு பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். எங்கும் செல்லாமல் அறையிலேயே முடங்கி கிடப்பர். இதன் காரணமாக இடுப்பு வலி, முதுகு வலி போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர். இதனை தவிர்க்க சுறுசுறுப்பாக இருக்கவும். முடிந்தால் உடற்பயிற்சி செய்யவும்.
அதீத உடற்பயிற்சி வேண்டாம்
கருக்கலைப்புக்குப் பிறகு அதிக உடற்பயிற்சி செய்ய வேண்டாம். குறிப்பாக இந்த நேரத்தில், துணி துவைத்தல், வாளி தூக்குதல் போன்ற வீட்டு வேலைகளை தவிர்க்கவும். இது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கலாம். எனவே, சில வாரங்கள் அல்லது நாட்களுக்கு இதுபோன்ற வேலையைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
சமச்சீர் உணவை எடுக்கவும்
கருக்கலைப்புக்குப் பிறகு, உடல் பலவீனம் காரணமாக நீங்கள் முதுகுவலியால் பாதிக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் ஏராளமான ஊட்டச்சத்துக்களைச் சேர்க்கவும். இந்த காலகட்டத்தில், பச்சை இலை காய்கறிகள், பூண்டு, இஞ்சி, உலர் பழங்கள், பால் மற்றும் எள் விதைகளை எடுத்துக்கொள்ளவும். இது உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கலாம்.