Doctor Verified

Anger Control Meditation: எதற்கு எடுத்தாலும் கோபப்படுபவர்களா நீங்கள்? தினமும் இந்த ஒரு விஷயம் செய்யுங்க.

  • SHARE
  • FOLLOW
Anger Control Meditation: எதற்கு எடுத்தாலும் கோபப்படுபவர்களா நீங்கள்? தினமும் இந்த ஒரு விஷயம் செய்யுங்க.

இந்த காலகட்டத்தில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது முக்கியம் ஆகும். இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமைவது தியானம் ஆகும். தியானம் செய்வது ஒரு செயலில் கவனத்தை ஈடுபடுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கும். மேலும் மன நலத்தை மேம்படுத்தும். தியானம் கோபத்தைக் குறைக்க உதவுகிறது. அதன் படி, கோபத்தைக் கட்டுப்படுத்த தியானம் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து சர் கங்காராம் மருத்துவமனையின் மூத்த மருத்துவ உளவியலாளர் டாக்டர் ஆர்த்தி ஆனந்தி அவர்கள் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Best Sleeping Position: தூங்கும் போது எப்படி தூங்க வேண்டும் தெரியுமா?

தியானத்தால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியுமா?

ஒருவர் கோபமாக இருக்கும் போது, அவரது உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்காது. இந்த நேரத்தில் எதையும் சிந்திக்காமல் எதிர்வினையாற்றுவர். இது அவர்களது சிந்தனைத் திறனைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதய துடிப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த சூழ்நிலையில், கோபத்தைக் குறைக்க தியானம் சிறந்த தேர்வாக அமைகிறது.

தியானம் செய்வது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கற்றுக் கொள்வதைக் குறிக்கிறது. கோபம் அதிகம் கொண்ட போது, தியானம் செய்வது மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. மேலும், இது ஒரு நபரின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் உடலுக்கு நன்மை தரும்.

மனம் மற்றும் உடலுக்கு நன்மையைத் தரும் தியானத்தின் பலன்கள்

தியானம் செய்வது உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தியானம் செய்வதால் உடல் மற்றும் மனதிற்கு கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

இரத்த அழுத்த சமநிலையை பராமரிக்க

கோபம் வரும் போது, இதயத்துடிப்பு வேகமாக அதிகரிக்கும். இது இதயம் இரத்தத்தை வேகமாக டம்ப் செய்யத் தொடங்குகிறது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இவற்றைக் குறைக்க தியானம் சிறந்த தேர்வாகும். தியானம் செய்வது நல்ல ஓய்வைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Early Wakeup Benefits: அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

கெட்ட பழக்கங்களை கைவிடுதல்

நீங்கள் எந்த பழக்கங்களையும் கைவிட விரும்புபவர்கள், தியானம் ஒரு சிறந்த தேர்வாக அமையும். இது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இது கெட்ட பழக்கங்களை மறப்பதில் மிகவும் நன்மை பயக்கும்.

தூக்கத்தின் தரத்தை அதிகரிக்க

நல்ல தூக்கத்திற்கு மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். ஆனால், அதே சமயம் மன அழுத்தம் மற்றும் தொடர் பிரச்சனைகளால் நம் மனம் அமைதியாக இருப்பதில்லை. இந்த சூழ்நிலையில், தியானம் மிகவும் பயனுள்ளதாக அமையும். இது மனதை அமைதியாக வைப்பதுடன், நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.

உணர்ச்சி ஆரோக்கியத்தை மேம்படுத்த

தியானம் செய்வது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஓர் இடத்தில் எப்படி நடந்து கொள்வது அல்லது எப்படி அமைதிப்படுத்துவது என்பதைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. இது உணர்ச்சி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: அதிகமாக சிரிச்சா நம் ஆயுள் அதிகரிக்குமாம். சிரிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Image Source: Freepik

Read Next

Overthinking Control Tips: இரவு தூக்கத்தைக் கெடுக்கும் அதீத சிந்தனை. இதை எப்படி தவிர்ப்பது?

Disclaimer