How Does Ai Improve Surgery: இன்றைய நவீன காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது மனித நுண்ணறிவு மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களை உருவகப்படுத்த இயந்திரங்கள் மற்றும் கணினிகளை செயல்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாகும். தற்போது பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு இடம்பெற்று சாதகமான விளைவுகளைத் தருகிறது.
அதே போல, மருத்துவ துறையிலும் செயற்கை நுண்ணறிவு இடம் பெற்றுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், மருத்துவ துறையில் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் சில நோயைக் கண்டறிய முடிகிறதாகக் கூறப்படுகிறது. இதனால், வருங்காலத்தில் சுகாதாரத் துறையில் 30 முதல் 40% வரையிலான செலவு குறையும் எனக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Covaxin Side Effects: கோவிஷீல்டை தொடர்ந்து பீதியை கிளப்பும் கோவாக்சின்… பக்கவிளைவுகள் இங்கே!
மருத்துவ துறையில் செயற்கை நுண்ணறிவு
நோயாளிகள் மற்றும் மருத்துவர்களின் பிரச்சனையைத் தீர்க்க செயற்கை நுண்ணறிவு உதவுவதாக நியூசிலாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் ஒரு புதிய ஆய்வில் கணினி பார்வை என்றழைக்கப்படும் செயல்பாட்டின் போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது வளர்ந்து வரும் பகுதி எனக் கூறுகிறது.
நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் அசாதாரணங்களை அடையாளம் காண முடியும். மேலும், நோயாளிகளின் கண்காணிப்பை அதிகரிப்பது மற்றும் வீட்டிலேயே அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைய உதவுவது போன்றவற்றிற்கு செயற்கை அதிக சுமை உள்ள மருத்துவமனைகளின் சுமையைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Climate Change Impact: காலநிலை மாற்றத்தால் மூளை பாதிக்கப்படுமா.?
சர்ஜரியில் செயற்கை நுண்ணறிவு
அறுவை சிகிச்சையிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு சிறந்து வளர்ந்து வருகிறது. கணினி பார்வை என்று நாம் அழைக்கும் AI, அறுவை சிகிச்சை நிபுணர்கள் என்ன பார்க்கிறது, அறுவை சிகிச்சை கருவிகள் எப்படி இருக்கும், அசாதாரணமான உடற்கூறியல் அல்லது அடையாளம் காண்பதற்கான சாத்தியக்கூறுகள், பல்வேறு உறுப்புகள் எப்படி இருக்கும் போன்றவற்றைப் பற்றி பல விதமான அற்புத ஆராய்ச்சிகள் பார்க்கப்பட்டது.
மேலும், அறுவைசிகிச்சைக்கான பாதுகாப்பான அணுகுமுறை என்னவெனில், ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் விர்சுவல் ரியாலிட்டியைப் பயன்படுத்தி, அறுவை சிகிச்சைகளுக்கு முன்னதாகவே திட்டமிடலாம் எனக் கூறப்படுகிறது. புற்றுநோய்கள் மற்றும் அது போன்ற விஷயங்களை வெட்டுவதில் இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வர்கீஸ் அவர்கள் நியூசிலாந்தில் உள்ள மருத்துவர்கள் ஏற்கனவே AI ஐப் பயன்படுத்தி நோயாளிகளின் பின்னடைவுகளைச் சரி செய்ய உதவுகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மூலம் தேவையின் அடிப்படையில், சரியான நேரத்தில் சரியான நோயாளிகள் பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே மக்களுக்கு முன்னுரிமை அளித்து, கிளினிக்குகளுக்கு முன்னதாகவே சேர்க்கிறோம். இதனால் நெறிமுறைகள் மற்றும் தரவு தனியுரிமை போன்ற கவலைகள் காரணமாக, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு வரம்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அறுவை சிகிச்சை முறையில் AI இன் ஒருங்கிணைப்பு குறித்து பல்வேறு அச்சங்கள் எழலாம்.
அறுவை சிகிச்சை முறையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பல்வேறு நோக்கத்தை எடுத்துரைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Castor Oil for Eyes: கண் வறட்சியை குறைக்க விளக்கெண்ணெய் பயன்படுத்தலாமா?
Image Source: Freepik