Peanut Powder Benefits: குழந்தைகளுக்கு வேர்க்கடலை பொடி தருவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

  • SHARE
  • FOLLOW
Peanut Powder Benefits: குழந்தைகளுக்கு வேர்க்கடலை பொடி தருவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?


Peanut Powder Benefits For Kids: பொதுவாக வேர்க்கடலை பொடி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் ஒன்றாகும். இதில் புரதங்கள், கால்சியம், நார்ச்சத்து, இரும்பு, மக்னீசியம், வைட்டமின் பி6 போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலானோர் வேர்க்கடலை சாப்பிடுவதை விரும்புவர். ஆனால், குழந்தைகளைப் பொறுத்த வரை, வேர்க்கடலை கொடுப்பது எளிதான விஷயம் அல்ல. எனவே இந்த சூழ்நிலையில் தாய்மார்கள் குழந்தைகள் எளிதாக உண்ணும் வகையில் வேர்க்கடலைப் பொடியைத் தயாரிக்கலாம்.

இந்த கடலைப் பொடி குழந்தைகளுக்கு கொடுப்பது எளிதாக இருப்பதுடன், எளிதில் செரிமானம் அடையும். கடலைப் பொடியை பால், கீர், ஹல்வா போன்றவற்றுடன் சேர்த்து குழந்தைக்குக் கொடுக்கலாம். கடலைப் பொடியை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுப்பது சளி மற்றும் அலர்ஜியில் இருந்து விடுபடலாம். இது குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும். வேர்க்கடலைப் பொடியைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

குழந்தைகளுக்கு வேர்க்கடலை பொடி தரும் நன்மைகள்

வேர்க்கடலை பொடியை குழந்தைகளுக்குத் தருவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

வேர்க்கடலை பொடி உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தரும் ஒன்றாகும். கடலைப் பொடி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தி அலர்ஜி வராமல் தடுக்க உதவுகிறது. கடலைப் பொடியைக் குழந்தைகளுக்கு கொடுப்பது குழந்தைகளை வலுவடையச் செய்யலாம்.

புரதச்சத்து வழங்க

குழந்தைகளுக்குக் கடலை பொடி வழங்குவது அவர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. இதைக் கொடுப்பது குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப சரியான வளர்ச்சியைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: World Prematurity Day: குறைமாத குழந்தைக்கு கண்பார்வை தெரிய இந்த டெஸ்ட் ரொம்ப முக்கியம்

எலும்பு வலிமைக்கு

வேர்க்கடலை பொடியை குழந்தைகளுக்குக் கொடுப்பது எலும்புகள் வலிமையடைய உதவுகிறது. இது குழந்தைகளை உறுதியாக வைத்திருப்பது மற்றும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

செரிமான மேம்பாட்டிற்கு

வேர்க்கடலை பொடியை குழந்தைகளுக்கு அளிப்பது செரிமான மண்டலம் வலுவடைகிறது. இதில் உள்ள நல்ல அளவிலான நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது. வேர்க்கடலை பொடி கொடுப்பது குழந்தைகளுக்கு வாயு, அஜீரணம், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

நினைவாற்றல் மேம்பாட்டிற்கு

குழந்தைகளுக்கு வேர்க்கடலை பொடியைக் கொடுப்பது நினைவாற்றலை மேம்படுத்த உதவும். இதனைத் தொடர்ந்து கொடுப்பது மூளை கூர்மையடைவதுடன், ஞாபக சக்தியை அதிகரிக்கும். இந்த கடலை பொடியை பால் மற்றும் கொழுக்கட்டையில் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

கடலை பொடியை குழந்தைகளுக்குக் கொடுப்பதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பர். எனினும், குழந்தைகளுக்குப் புதிய பொருள்களைத் தரும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: ADHD In Children: குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் ADHD; அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் என்ன?

Image Source: Freepik

Read Next

பெற்றோர்களே… மாணவர்கள் காலையில் சீக்கிரம் எழுந்திருந்தால் இத்தனை நன்மைகள் இருக்காம்!

Disclaimer