Sat Sep 12, 2026 | 12:58 AM IST

Doctor Verified

World Prematurity Day: குறைமாத குழந்தைக்கு கண்பார்வை தெரிய இந்த டெஸ்ட் ரொம்ப முக்கியம்

Retinopathy Of Prematurity In Premature Infants: பொதுவாக கர்ப்ப காலத்திற்கு முன்னதாக, அதாவது 37 மாதங்களுக்கு முன்னதாகவே பல்வேறு காரணங்களால் பிரசவம் நிகழலாம். இது குறைமாத குழந்தை அல்லது குறைபிரசவம் என அழைக்கப்படுகிறது. ஆனால், நிறைமாத குழந்தையைப் போலல்லாமல், குறைமாத குழந்தைக்கு போதுமான வளர்ச்சி அடைந்திருக்காது. இயற்கையாகவே நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், குறைமாத குழந்தைகள் பல்வேறு வகையான நோய்களால் பாதிக்கப்படலாம்.

இதில் ஒன்றாகவே, குறைமாத குழந்தைகளுக்கு ரெட்டினோபதி ஆஃப் ப்ரீமெச்சூரிட்டி என்ற நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. 20 முதல் 40 வாரங்களுக்குள்ளேயே குழந்தையின் கண்ணில் விழித்திரை உருவாகும். ஆனால், 28 ஆவது வாரத்தில் குழந்தை பிறக்கும் போது, கண்பார்வை இழக்கும் ஆபத்தை அதிகரிக்கலாம். இந்த குழந்தைகளின் கண்களுக்குப் பார்க்கும் திறன் இல்லாமல் இருக்கலாம். இந்த நிலையைத் தவிர்த்து குழந்தைகளைப் பாதுகாக்க ROP சோதனை தொடர்பான முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து, லக்னோவில் உள்ள கேர் இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்சஸ் மருத்துவர் சீமா யாதவ் எம்.டி அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Breast Milk Producing Foods: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

முன்கூட்டிய ரெட்டினோபதி

ரெட்டினோபதி ஆஃப் ஃப்ரீமெச்சூரிட்டி (ROP) அல்லது முன்கூட்டிய ரெட்டினோபதி என்பது கண் கோளாறு ஆகும். இதில் கண் திரையின் இரத்த நாளங்கள் சுருங்கி காணப்படும். பொதுவாக, குறைமாத குழந்தைகள் பிறக்கும் போதே நோய்த்தொற்று உண்டாகும் வாய்ப்பு அதிகம் உண்டு. இதனால், குழந்தையின் கண்பார்வைத் திறன் குறைவதுடன், எதிர்காலத்தில் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

Retinopathy Of Prematurity சோதனை

இரண்டாவது மற்றும் மூன்றாவது டிரைமெஸ்டருக்கு இடையில் கருவின் விழித்திரை உருவாகிறது. முன்கூட்டியே பிறந்த குழந்தைகளுக்கு முன்கூட்டிய அல்லது ROP கண் நோய் ரெட்டினோபதியின் ஆபத்து அதிகரிக்கலாம். முன்கூட்டியே பிறந்த குழந்தைகளில் இரத்த நாளங்கள் முழுமையாக உருவாகாமல் இருப்பதால், இரத்த ஓட்டம் தடைபட்டு, விழித்திரை உருவாவதில்லை. பிறந்த குழந்தைகளுக்கு இந்த நோய் வராமல் தடுக்க உதவும் சோதனை ROP அல்லது ROP சோதனை என அழைக்கப்படுகிறது.

எந்த குழந்தைகளுக்கு ROP டெஸ்ட் தேவை

குறைமாத குழந்தைகளுக்கு இந்த ரெட்டினோபதி ஆஃப் ப்ரீமெச்சூரிட்டி பரிசோதனை தேவைப்படுகிறது. மேலும், IVF முறையின் மூலம் கர்ப்பம் தரிக்கும் பெண்களும், குழந்தை பிறந்த பின் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். குழந்தை பிறக்கும் போது அதிகப்படியான ஆக்ஸிஜனை வழங்குவதால், இந்த சூழ்நிலையில் கயிறு அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், இதில் கண்கள் சேதமடையலாம். இந்த சூழ்நிலையிலேயே, மருத்துவர்கள் ரெட்டினோபதி ஆஃப் ப்ரீமெச்சூரிட்டி பரிசோதனை செய்ய வேண்டும் என பரிந்துரைப்பர்.

இந்த பதிவும் உதவலாம்: Stop Crying Baby: குழந்தையின் அழுகையை நிறுத்த பெற்றோருக்கான சில உதவிக்குறிப்புகள்

ROP சோதனை செய்வது எப்படி?

குறைமாதத்தில் குழந்தை பிறந்திருப்பின், அவர்களை சிறப்பாக கவனிப்பது அவசியமாகும். இந்த நிலையில், அவர்களின் சிறு கவனக்குறைவும், குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே குழந்தை முன்கூட்டியே பிறந்திருப்பின், குழந்தைக்கு ரெட்டினோபதி ஆஃப் ப்ரீமெச்சூரிட்டி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என்பதை மருத்துவரிடம் கேட்க வேண்டும். இந்த சோதனை செய்யப்படவில்லை எனில், பிறந்த 30 நாள்களுக்குள் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

எவ்வளவு நாளைக்குள் சோதனை செய்ய வேண்டும்?

குறைமாத குழந்தைகளின் பிறக்கும் போது, அவர்களின் பராமரிப்பு முறையில் கூடுதல் கவனம் தேவை என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த கண் நோய் பிரச்சனைகள் வராமல் இருக்க, குறைமாத குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள், ரெட்டினோபதி ஆஃப் ப்ரீமெச்சூரிட்டி சோதனையை மேற்கொள்ள வேண்டும். இந்த பரிசோதனையின் மூலம் குழந்தையின் கண்பார்வையை உறுதி செய்யலாம்.

மேலும் குறைமாத குழந்தையின் கண் ஆரோக்கியத்திற்கு அவ்வப்போது கண்களை பரிசோதிக்க வேண்டும். நீண்ட நேரம், கண்களை கவனிக்காமல் இருந்தால், நோய் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Junk Food Effects: உங்க குழந்தை அதிகம் ஜங்க் ஃபுட் சாப்பிடுமா? இது தெரிஞ்சா இனி கொடுக்கவே மாட்டீங்க

Image Source: Freepik

Read Next

Diabetes in children: குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வராமல் தடுக்க இந்த 5 விஷயங்களை செய்தாலே போதும்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content