Best Ayurvedic Drink For Diabetes: இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் உடலில் சர்க்கரை அளவு அதிகமாகி பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இதில், இரத்த சர்க்கரை அளவு அதிகமாவது ஹைப்பர் கிளைசீமியா என அழைக்கப்படுகிறது. இது இரத்தத்தில் சர்க்கரை அல்லது குளுக்கோஸ் அதிகப்படியாக இருப்பதைக் குறிக்கிறது. இந்நிலையில் உடலில் சர்க்கரை அளவை அன்றாடம் கண்காணித்து ஒழுங்காக நிர்வகிப்பது அவசியமாகும்.
இந்த உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க சில இயற்கையான ஆயுர்வேத வைத்தியங்கள் உள்ளன. இவை மருந்துகள் இல்லாமல், இரத்த சர்க்கரை அளவை திறம்பட கட்டுப்படுத்த மற்றும் குறைக்க உதவுகிறது. இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க ஆயுர்வேதத்தில் சிறந்த வழிகளில் ஒன்று ஆரோக்கியமான பானங்களை அருந்துவதாகும். இதில் உடலில் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும் ஆயுர்வேத பானங்கள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Body Heat Reduce Tips: உடல் சூட்டை வேகமா தணிக்க ஆயுர்வேதம் கூறும் யுக்தி என்ன தெரியுமா?
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் ஆயுர்வேத பானங்கள்
உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் இந்த ஆயுர்வேத பானங்கள், இரத்த சர்க்கரையை சீராக வைக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டை தேநீர்
இலவங்கப்பட்டை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட நன்கு அறியப்பட்ட மசாலா வகையாகும். அதில் ஒன்று இரத்த சர்க்கரையை குறைக்கும் தன்மை கொண்டதாகும். இந்த பானம் தயார் செய்ய, இலவங்கப்பட்டையை வெந்நீரில் ஊற வைத்து வெதுவெதுப்பாக அருந்த வேண்டும். இது இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதுடன், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
அஸ்வகந்தா தேநீர்
அளவுக்கு அதிகமான மன அழுத்தமும் உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யலாம். இதற்கு சிறந்த தீர்வாக அஸ்வகந்தா அமைகிறது. அஸ்வகந்தா ஒரு அடாப்டோஜெனிக் மூலிகையாகும். இது மன அழுத்தத்தைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது. தினமும் அஸ்வந்தா தேநீர் அருந்துவது மன அழுத்தத்தை நிர்வகிப்பதுடன், இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.
பாகற்காய் சாறு
இரத்த சர்க்கரையை நிர்வகிக்க ஒரு சிறந்த ஆயுர்வேத தீர்வாக பாகற்காய் சாறு அமைகிறது. இதில் உள்ள கசப்புத்தன்மை இன்சுலினைப் போலவே செயல்படக்கூடிய சேர்மங்களிலிருந்து வருகிறது. இவை குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த சாற்றை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
வேம்பு
பாகற்காயைப் போல வேம்பு கசப்புத் தன்மை கொண்டதாக இருப்பதால், இது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. வேப்பம்பூவை உணவில் சேர்த்துக் கொள்வது அதிகப்படியான இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வேப்ப இலைகளின் மருத்துவ குணங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது. வெறும் வயிற்றில் வேம்பு நீர் அருந்துவது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதுடன், உடலில் நோயெதிர்ப்புச் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Herbs For Uric Acid: யூரிக் அமில பிரச்சனையைத் தவிர்க்க இந்த ஆயுர்வேத மூலிகைகள் போதும்
வெந்தய நீர்
வெந்தய விதைகள் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ள விதைகள் ஆகும். இது கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. வெந்தய விதைகள் ஊறவைத்த நீரை அருந்துவது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது. இது நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும் ஆயுர்வேத பானங்களில் இனிமையான பானமாகும்.
மஞ்சள் டீ
இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த சிறந்த ஆயுர்வேத மூலிகையாகும். இவை உடலில் இரத்த சர்க்கரை அளவை இயற்கையாக நிர்வகிக்க உதவுகிறது. மஞ்சளில் நிறைந்த குர்குமின் கலவை இரத்த சர்க்கரையைக் குறைப்பதுடன், வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. வெறும் வயிற்றில் சூடான மஞ்சள் பாலுடன் கருப்பு மிளகு சேர்த்து அருந்துவது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
நெல்லிக்காய் சாறு
ஆம்லா எனப்படும் இந்திய நெல்லிக்காய், வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்ததாகும். காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறுடன் தொடங்குவது கணைய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. மேலும், இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் ஆம்லா சாறாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது காலை டிடாக்ஸ் பானத்துடன் கலக்கலாம்.
இந்த 7 வகையான ஆயுர்வேத பானங்களும் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Herbs for Weight Loss: எடையைக் குறைக்கும் சிறந்த ஆயுர்வேத மூலிகைகள்
Image Source: Freepik