Ulavacharu Chicken Biryani: சுஜிதா செய்து அசத்திய உலவச்சாறு சிக்கன் பிரியாணி ரெசிபி..

  • SHARE
  • FOLLOW
Ulavacharu Chicken Biryani: சுஜிதா செய்து அசத்திய உலவச்சாறு சிக்கன் பிரியாணி ரெசிபி..


CWC Sujitha Guntur Special Ulavacharu Chicken Biryani Recipe: விஜய் டிவி நடத்தி வரும் குக் வித் கோமாளி ஷோ மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் உள்ள குக், கோமாளி, செஃப், தொகுப்பாளர்கள் என அனைவரும், அவர்களுக்கென ஒரு இடத்தை மக்கள் மனதில் பிடித்துள்ளனர். பல சீசனை கடந்து வந்துள்ள இந்த குக் வித் கோமாளி ஷோ, தற்போது 5ஆவது சீசனை பார்த்து வருகிறது.

குக் வித் கோமாளி சீசன் 5 கடும் போட்டிகளுடன் நடந்து வருகிறது. இதில் உள்ள ஒவ்வொரு குக்கும் தங்களது திறமைகளை கொண்டு, கடும் போட்டியாளர்களாக திகழ்கின்றனர். குறிப்பாக இர்ஃபான், பிரியங்கா, சுஜிதா ஆகியோர், வார வாரம் பாராட்டுகளை பெற்று, தங்களை யாரும் நெருங்க முடியாது என்று சவால் விடும் விதமாக தங்களது படைப்புகளை கொடுக்கிறார்கள்.

அந்த வகையில் இன்று எலிமினேஷன் ரவுண்ட் நடைபெற்றது. இதில் போட்டியாளர்களுக்கு பிரியாணி ஸ்பெஷல் ரவுண்ட் என்று கொடுக்கப்பட்டது. இதில் பூஜா, வசந்த் வசி, அக்‌ஷய் கமல் ஆகியோர் டேஞ்சர் சோனில் இருந்தனர். இறுதியில் வசந்த வசி எலிமினேட் ஆனார். அதே போல் செஃப் ஆஃப் தி வீக் பட்டத்தை சுஜிதா தட்டி பரித்தார். இதற்கு காரணம் இவர் செய்து குண்டூர் ஸ்பெஷல் உலவச்சாறு சிக்கன் பிரியாணி.

சுஜிதா செய்த குண்டூர் ஸ்பெஷல் உளவு சார் சிக்கன் பிரியாணி, நிகழ்ச்சியின் நடுவர்களான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் தாமு அவர்களால் புகழப்பட்டது. ஒரு சின்ன குறை கூட சொல்ல முடியாத அளவிற்கு, சுஜிதா இந்த டிஷ்-ஐ செய்திருந்தார். அப்படி இந்த உலவச்சாறு சிக்கன் பிரியாணியை, சுஜிதா எப்படி செய்தார்? என்றும், உளவு சார் என்றால் என்ன? என்றும் இங்கே காண்போம்.

குண்டூர் ஸ்பெஷல் உலவச்சாறு சிக்கன் பிரியாணி ரெசிபி (Guntur Special Ulavacharu Chicken Biryani Recipe)

சிக்கன் ஊற வைப்பதற்கான பொருட்கள்

700 கிராம் கோழி
2 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
2 தேக்கரண்டி காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்
2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
1 டீஸ்பூன் சீரக தூள்
½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் பிரியாணி மசாலா
½ எலுமிச்சை சாறு
4 டீஸ்பூன் வறுத்த வெங்காயம்
½ கப் எண்ணெய்
½ கப் தயிர்
½ தேக்கரண்டி உப்பு
2 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
2 டீஸ்பூன் புதினா இலைகள்
6 பச்சை மிளகாய் நறுக்கியது

சாதம் செய்வதற்கான பொருட்கள்

500 கிராம் பாஸ்மதி அரிசி
2 லிட்டர் தண்ணீர்
1 அங்குல இலவங்கப்பட்டை
2 நட்சத்திர சோம்பு
2 பிரியாணி இலை
5 பச்சை ஏலக்காய்
6 கிராம்பு
½ தேக்கரண்டி கருப்பு சீரகம்
6 கருப்பு மிளகு
1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
1 தேக்கரண்டி கல்பாசி
2 தேக்கரண்டி உப்பு
2 தேக்கரண்டி எண்ணெய்
½ எலுமிச்சை சாறு
3 பச்சை மிளகாய்

லேயர் செய்வதகான பொருட்கள்

1 கப் உலவச்சாறு (புளி மற்றும் கொள்ளு சேர்த்து தயாரிப்பது)
4 டீஸ்பூன் வறுத்த வெங்காயம்
2 டீஸ்பூன் புதினா இலைகள்
2 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
¼ தேக்கரண்டி பிரியாணி மசாலா
2 டீஸ்பூன் தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய்
½ கப் வேகவைத்த அரிசி தண்ணீர்

இதையும் படிங்க: Kongunadu Vellai Chicken Biryani: அருமையான கொங்குநாடு வெள்ள சிக்கன் பிரியாணி.! இப்படி செஞ்சி பாருங்க..

உலவச்சாறு சிக்கன் பிரியாணி செய்முறை

  • ஒரு கலவை பாத்திரத்தில் 750 கிராம் கோழியை எடுத்துக் கொள்ளவும். இதனை ஊற வைக்க, ஊற வைப்பதற்காக மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் கோழியுடன் நன்றாக கலக்கவும். சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பாசுமதி அரிசியை 2-3 முறை தண்ணீரில் கழுவவும். 45 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • ஒரு பெரிய பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். இலவங்கப்பட்டை, நட்சத்திர சோம்பு, பிரியாணி இலை, பச்சை ஏலக்காய், கிராம்பு மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  • பிறகு கருவேப்பிலை, கல் பூ, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், உப்பு, எண்ணெய், எலுமிச்சை சாறு சேர்க்கவும். தண்ணீரில் நன்றாகக் கலந்து நன்றாகக் கிளறவும்.
  • தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், ஊறவைத்த அரிசியை சேர்க்கவும். அனைத்து மசாலாப் பொருட்களும் அதை சுவையாகவும் நறுமணமாகவும் ஆக்குகின்றன. அரிசி 70 சதவீதம் வேகும் வரை வேகவைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் அரிசி நீரை வடித்து, வேகவைத்த அரிசியை தனியாக வைக்கவும். ½ கப் அரிசி தண்ணீரை எடுத்து தனியாக வைக்கவும்.
  • பிரியாணி பாத்திரத்தில் ஊற வைத்த கோழியைச் சேர்த்து பரப்பவும். ¾ கப் உலவச்சாறு ஊற்றவும். சமைத்த அரிசியை சமமாக பரப்பவும்.
  • நறுக்கிய புதினா இலைகள், கொத்தமல்லி இலைகள், வறுத்த வெங்காயம், ¼ டீஸ்பூன் பிரியாணி மசாலா, மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஆகியவற்றை சேர்க்கவும்.
  • அதன் மேல் ¼ கப் உலவச்சாறு பரப்பவும். மீண்டும், மீதமுள்ள அரிசியை இரண்டாவது அடுக்குக்கு சமமாக பரப்பவும்.
  • புதினா இலைகள், கொத்தமல்லி இலைகள், வறுத்த வெங்காயம், 1 டீஸ்பூன் நெய் மற்றும் ¼ தேக்கரண்டி பிரியாணி மசாலாவுடன் இரண்டாவது அடுக்கை முடிக்கவும்.
  • ½ கப் அரிசி தண்ணீரை இறுதி அடுக்கின் மேல் பரப்பி, பாத்திரத்தை ஒரு மூடியால் மூடவும்.
  • பிரியாணியை அதிக வெப்பத்தில் 5 நிமிடம் சமைக்கவும். பின்னர் வெப்பத்தை குறைத்து 30 நிமிடங்கள் சமைக்கவும்.
  • வெப்பத்தை அணைக்கவும், 10 நிமிடங்களுக்கு மூடியைத் திறக்க வேண்டாம். 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அரிசியுடன் சிக்கனை மெதுவாக கலக்கவும்.
  • அவ்வளவு தான் சூடான சுவையான உலவச்சாறு சிக்கன் பிரியாணி ரெடி. இதனை வெங்காய ரைதாவுடன் பரிமாறவும்.

உலவச்சாறு என்றால் என்ன?

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகவும் கொண்டாடப்படும் உணவுகளில் ஒன்று உலவச்சாறு. உளவச்சாறு என்பது கொள்ளு மற்றும் புளி சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கெட்டியான சாறு. இதனை எப்படி செய்வது என்று இங்கே காண்போம்.

தேவையான பொருள்கள்

• கொள்ளு - 1 கப்

• எண்ணெய் - 1 தேக்கரண்டி

• கடுகு - 1/2 டீஸ்பூன்

• சீரகம் - 1/2 டீஸ்பூன்

• மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

• பச்சை மிளகாய் - 2-3

• காய்ந்த மிளகாய் - 1-2

• கறிவேப்பிலை - 1 கைப்பிடி

• புளி சாறு - 1/2 கப்

• உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • கொள்ளை ஊறவைத்து வேகவைத்து அதை விழுதாக அரைக்கவும்.
  • கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், மிளகுத்தூள், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • அதில் கொள்ளு வேகவைத்த தண்ணீர், புளி சாறு, உப்பு, கொள்ளு விழுது சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • அவ்வளவு தான் உலவச்சாறு ரெடி. இதனை பிரியாணி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

முன்னெச்சரிக்கை

உலவச்சாறு சிக்கன் பிரியாணியில் கொள்ளு கலக்கப்படுகிறது. இது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும் இதில் அதிக எண்ணெய் மற்றும் நெய் பயண்படுத்தப்படுகிறது. இது அதிக கொழுப்பு மற்றும் கலோரிகளை கொண்டுள்ளது.

எதுவாக இருந்தாலும் அளவோடு சாப்பிடும் வரை நல்லது தான். மேலும் நேரத்திற்கு ஏற்றவாறு சாப்பிட வேண்டும். பிரியாணி என்றாலே, வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக சாப்பிடுவார்கள். அப்படி செய்வது தவறு.

குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் உணவின் மீதான மோகம் அதிகமாக உள்ளது. அதிகாலை பிரியாணி, மிட் நைட் பிரியாணி என்று கண்ட நேரத்தில் சாப்பிடுகிறார்கள். இது குடல் இயக்கத்தை பாதிக்கும். இதனால் செரிமான சிக்கல் ஏற்படும்.

பிரியாணியை மாதியம் சாப்பிட்டு மகிழவும். அதுவும் அளவோடு ருசிக்கவும். இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

Read Next

Gilli Chicken Biryani: விடிவி கணேஷ் இப்படி தான் கில்லி சிக்கன் பிரியாணி செஞ்சாரு..

Disclaimer